வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

ஞான மருந்து !

 *ஞான மருந்து!*


நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பார்கள்.


*உடம்பில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் மருந்தை முதன் முதலில்  கண்டு  பிடித்தவர்கள் சித்தர்கள்* 

*சித்தர்கள் கண்டுபிடித்ததால் அதற்கு சித்த மருத்துவம் என்று பெயர் சூட்டப்பட்டது*.


அதன் பின்பு பல மருத்துவங்கள் தோன்றின.ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்துள்ளார்கள்.


விஞ்ஞான அறிவியல் அணு ஆராய்ச்சிகள் மூலமாக மனித உடம்பில் ஏற்படும் பிரச்சனைக்களை  கண்டுபிடித்து அவற்றிற்கு தகுந்த மருந்துகளை ஊசிகள் மூலமாகவும் மாத்திரைகள்  மூலமாகவும் கொடுத்து நோய்களை தீர்த்து வந்தார்கள். 


*உடம்பில் சிலபாகங்கள் பழுது அடைந்துவிட்டால் அவற்றை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றி மீண்டும் உருப்புகளை பொருத்தியும் இணைத்தும் குணமாக்கி வருகிறார்கள்* அதற்கு ஆங்கில மருத்துவம் என்றும் அலோபதி மருத்துவம் என்றும் சொல்லப்படுகிறது


*மனித உடம்பில் ஏற்படும்  உடற்பிணியை தவிர்க்கும் மருந்தை கண்டுபிடித்தார்களேத் தவிர உயிரைக் காப்பாற்றும் மருந்தை கண்டுபிடித்தவர்கள் உலகில் ஒருவரும் இல்லை.( வள்ளலாரைத்தவிர)* 


ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்! 


*உடம்பின் பிணிகளை போக்க இவ்வுலகில் உள்ள பொருள்களைக் கொண்டு தயாரிக்கலாம்*.

*ஆனால் உயிர்ப்பிணியைப் போக்க இவ்வுலகில் மருந்து இல்லை*


*மனித உடம்பையும் உயிரையும் படைத்த ஆண்டவருக்கு உயிரைப் பாதுகாக்கும் வழித் தெரியாமலா படைத்திருப்பார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்*.


*வள்ளலார் பாடல் !*


உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்


மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்


இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉலகீரே


நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!


மேலே கண்ட பாடலில் தெளிவாகச்சொல்லுகிறார்.

*உடம்பு வந்த வழியும் உயிர் வந்தவழியும் தெரியாமல் உடலைப் பருக்கவைக்கும் உணவு வகைகளை உட்கொண்டு  அற்ப சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் தூங்குவதற்கு தெரிந்து கொண்டு உள்ளீர்கள்*.


மேலும் *மனத்தை தன்வசமாக வசப்படுத்தி மாற்றத் தெரியால் மனம் எனும் பேய்குரங்கின் துணைக் கொண்டு பொய்யுலகின் வாழ்க்கையிலே அலைந்து அலைந்து திரிந்து திரிந்து இன்பமும் துன்பமும் பின் தொடர்ந்து  வருவதை எண்ணி எண்ணி இளைத்து இறுதியில் உயிரைக் காப்பாற்ற முடியாமல் மரணம் என்னும் பெரும்பிணி பெரும்பாவி வந்து இறந்து இறந்து பிறந்து பிறந்து அடுத்த பிறவி என்ன என்பதே தெரியாமலும். ஆன்மாவின் முடிவு என்ன என்பதே தெரியாமலும் வாழ்ந்து விருகிறோம்*


*ஞான மருந்து*!


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆன்மாவை இவ்வுலகிற்கு அனுப்பும் போதே ஆன்மாவின் சிற்றணுவின் உள்ளே அருள் என்னும் ஞானமருந்தை நிறைப்பித்து தான் அனுப்பி வைக்கிறார்.*

ஆனால் *நாம் அந்த இடத்தையோ அதில் உள்ள விலை மதிப்பில்லா ஞான பொக்கிஷத்தையோ கண்டு கொள்வதே இல்லை* வள்ளலார் *ஆன்ம சிற்சபையைக்  கண்டு அதன் அப்பனைத் தொடர்புகொண்டு அனுமதிப் பெற்று அதில் உள்ள அருள்ஞான பொக்கிஷத்தை உட்கொண்டு உயிர்ப் பிணியையும் உடற் பிணியையும் நீக்கி மரணத்தை வென்று நம் ஊனக் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு சொல்லுகிறார்*.இனிமேலாவது நாம் வள்ளலார் சொல்வதைக் கேட்போமா ? அவர் காட்டிய பாதையில் செல்வோமா?  


*நரை திரை பிணி மூப்பு மரணம் தானாக வருவதில்லை நாம்  வாழும் தவறான வாழ்க்கை முறையினால்தான் மரணம் வருகிறது. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்பார் வள்ளலார்*


*வள்ளலார் பாடல்!*


செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்

திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை


*மெய்தாவ நினைத்திடுக* சமரசசன் மார்க்கம்

மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்


வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்

மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்


பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே

புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே.! 


மேலே கண்ட பாடலில் *நீங்கள் அறியாமல் செய்த தீமைகள் எல்லாம் பொருத்து அருள்வான் (கருணையே வடிவமானவன்) ஆதலால் நான் சொல்வதைக் கேட்டு மெய்தாவ நினைத்திடுங்கள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்*.

*என்னை நீங்கள் திட்டினாலும் அவற்றை வாழ்த்துகளாக ஏற்றுக் கொள்வேன்*. *ஏன் என்றால்? நீங்கள் எல்லோரும் என்னுடைய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உடன் பிறப்புக்கள் என்பதால். நீங்களும் ஆன்மலாபம் அருள்லாபம் பெற்று மரணத்தை வென்று என்னைப்போல் பேரின்பலாபம் பெறவேண்டும் என்பதற்காகவே  அன்புடன் சொல்கிறேன் என்கிறார்*


உடற்பிணியும் உயிர்பிணியும் நீக்கும் மருந்தை அருட்பெருஞ்ஜோதி அகவலில் சொல்லுகிறார்.


*உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி* *யனைத்தையு*

*மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே* !


*சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்*

*தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே* !


*இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்*

*சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே!*


*மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு*

*கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!*


*நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்*

*உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே!*


*என்றே யென்னினு மிளமையோ டிருக்க*

*நன்றே தருமொரு ஞானமா மருந்தே!*


*மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்*

*நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே!*


*சிற்சபை நடுவே திருநடம் புரியும்*

*அற்புத மருந்தெனு மானந்த மருந்தே!*

*நம் உடம்பின் தலைப்பாகத்தில்  ஆன்மாவின் இருப்பிடமான சிற்சபையின் நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்தே அருள் ஞான மருந்தாகும்*.


*அந்த மருந்துள்ள  பெட்டியைத் திறந்து அருளை எடுத்து பருகத் தெரிந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கி என்பவராகும்*.

*அவரேமரணத்தை வெல்லும் தகுதி பெற்றவராகும்*.

*அவனைத்தான் சாகாதவனே சன்மார்க்கி என்கின்றார்*.


*ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாகி இருப்பவர் எவரோ அவருக்கு மட்டுமே மாயா திரைகள் நீங்கப்பெற்று சிற்சபை பெட்டியின் கதவு திறக்கப்படும்* அருள் ஞான மருந்து அதில் இருந்து கிடைக்கப்பெறும். மரணத்தை வெல்ல முடியும்.


*வள்ளலார் பாடல் !*


பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்

உண்டு இது நீ

பெறுக என அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்


எட்டிரண்டும் தெரியாதே என் என்கையிலே கொடுத்தீர்

இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்


அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்

அரைக்கணத்துக் காயிரம் ஆ யிரங்கோடி ஆக


வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை

மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.! 


என்ற பாடல் வாயிலாக *பெட்டியில் உள்ள அரும்பெரும் பொருளான அருள் ஞான மருந்தைப் பற்றிச் சொல்லுகிறார்*


ஆனந்த களிப்பு என்ற தலைப்பில் ஞான மருந்தைப்பற்றி 33 பாடல்களில் தெரிவித்துள்ளார்.அவற்றை ஊன்றி படித்து பயன் பெறுங்கள்.


அதில் ஒருசில பாடல்கள்.


*எல்லாஞ்செய் வல்ல மருந்து என்னுள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து*.

*சொல்லால் அளவாம் மருந்து சுயஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி மருந்து* !


மேலும்.

*சுட்டபடாத மருந்து என்றன்  தூக்கமுஞ் சோர்வுந் தொலைத்த மருந்து*


எட்டுதற் கொண்ணா மருந்து நான் எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து ! யாராலும் தொடமுடியாத மருந்து.

மற்றவர்களுக்கு கொடுக்க முடியாத மருந்து அதுவே அருள் ஞான மருந்து.


என்றும் பதிவு செய்கிறார்.


உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் ஞான மருந்து மருத்துவர்களிடத்தும் கிடைக்காது. வெளியில் எங்கு தேடினாலும் கிடைக்காது.அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே கொடுக்கப்படும் மருந்தாகும்.


*எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து!*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கண்டதும் காணாததும் !

 *கண்டதும் காணாததும்!*


*கண்டது சிறிதளவு காணாதது பெரிதளவு*


நம் உடம்பில் இரண்டு வகையான கண்கள் உள்ளன. ஒன்று அகக்கண் ஒன்று புறக்கண் என்பனவாகும்.


அகக்கண்ணுக்கு அருட்கண் என்றும். புறக்கண்களுக்கு பூதக்கண்கள் என்றும். (பொய்) ஊனக்கண்கள் என்றும் சொல்லப்படும்.


*புறக் கண்களின் பார்வை!*


நம் புறக்கண்களை    ஊனக் கண்கள் என்றும் சொல்லக்காரணம். ஊன் என்ற அசுத்த பூத காரிய அணுக்களால்  பின்னப்பட்ட உடம்பின் புறத்தில் உள்ளதால் ஊனக்கண் என்பதாகும்.


மாயை மாமாயை பெருமாயை என்னும் சக்தியால் நிர்வாகம் செய்யும் இவ்வுலகப் பொருள்கள் யாவும் தோற்றம் மாற்றம் மறைவுக்கு உட்பட்டதாகும்.  


தோற்று விக்கப்பட்ட பஞ்சபூத உலகத்தையும்  மற்றும் பஞ்சபூதங்களால் பின்னப்பட்ட  உடம்பையும் அவற்றிற்கு தேவையான மண் நீர் அக்கினி காற்று ஆகாயம் ஆகிய  பொருள்கள் யாவையும் நம் உடம்பின் புறப்புறத்தில் உள்ள பூதக் கண்களால் காணமுடியும். காண்பன  எல்லாம் ஜடப் பொருள்கள் மற்றும் பொய்ப் பொருள்கள் மட்டுமே பூதக் கண்களுக்குத் தெரியும். 

மேலும் ஒருகுறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நம்முடைய கண் பார்வை செல்லாது செலுத்தவும் முடியாது. 


கண்ட கண்ட சிறிய பொருள்களைக் காணமுடியுமேத் தவிர *காணாத காணமுடியாத மறைபொருளான அருட்பெருஞ்ஜோதி மெய்ப் பொருளை ஊனக் கண்களால் காணமுடியாது*.


*நம்முடைய உயிரையும் உடம்பையும் இயக்கிக் கொண்டுள்ள ஆன்மாவையே நம் கண்களால் காணமுடிவதில்லை என்றால்* பலகோடி அண்டங்களையும் இயக்கும் மெய்ப்பொருளை எவ்வாறு காண இயலும்.


*ஊனக் கண்களால் மெய்ப் பொருளைக் காண்பதற்கு வாய்பே கிடையாது.*


*அருட்கண்* !


*மனித தேகத்தின் அகத்தில் உள்ள ஒரேக்கண் அருட்கண் என்பதாகும்*. 

*அகத்தில் உள்ளது ஆன்மா. ஆன்மாவின் உள்ளே  அருள் நிறைந்து உள்ளது அருளில் இருந்து தோன்றுவதால் அதற்கு அருள் அறிவு என்றும்.மெய் அறிவு என்றும் மெய்ப்பொருள் என்றும். அருட்கண் என்றும் மெய்க்கண் என்றும் நெற்றிக்கண் என்றும் ஞானக்கண் என்றும் பலவாறாகச் சொல்லப் படுகிறது* 


*ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்போது ஞானக்கண் என்னும் அருட்கண்  உலகம் முழுவதும் ஊடுருவி செல்லும்*


அருட் கண்ணால் மட்டுமே அண்ட  கோடிகளையும் அவற்றில் உள்ள பொருள்களையும் உயிர்களையும் ஆண்மாக்களையும் மற்றும் அனைத்தையும் (யாவற்றையும்)  படைத்த இயற்கை உண்மையான மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் தடையில்லாமல் கண்டுகொள்ள முடியும்.


*வள்ளலார் பாடல்!*


அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே

அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே


பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே

பேசிப் பேசி வியக்கின்றேன் இப்பிறவி தன்னையே.!

என்று வள்ளலார் சொல்லுகிறார்.


நெற்றிக் கண்ணைத் திறக்க  கோடிக்கணக்கான ஞானிகள் தவம்.தியானம்.

பக்தியோகம்.

ஞானயோகம்.ராஜயோகம்.போன்ற   பலப்பல வழிமுறைகளில் முயற்சி செய்தார்கள். ஏகதேசம்

(சிறிதளவு) திறந்தது. முழுமையாக (பூரணமாக) அருட்கண் திறந்து மெய்ப்பொருளை காண்பதற்கு  உள்ளே போக முடியாமல் வெளியே நின்று காத்துக் கொண்டு உள்ளார்கள்.


*வள்ளலார் பாடல் !*


உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும் புற் றெழுந்தும்

ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்


பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய

பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே


நண்ணுகின்ற *பெருங்கருணை அமுதளித்து* என் உளத்தே

நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்


எண்ணுகின்ற படிஎல்லாம் *அருள்கின்ற சிவமே*

இலங்கு நடத்தரசே என் இசையும் அணிந் தருளே.! 


மேலும் பாடலில் சொல்லுகின்றார்!


 நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந் திரர்கள்

நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம்


வான்முகத்தில் தோன்றி *அருள் ஒளிசிறிதே அடைந்து*

வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே


தேன் முகந்துண் டவர் எனவே விளையாடா நின்ற

சிறுபிள்ளைக் கூட்டம் என அருட்பெருஞ்சோ தியினால்


தான்மிகக் கண் டறிக எனச் சாற்றிய சற் குருவே

சபையில் 

நடத்தரசே என் சாற்றும்அணிந் தருளே.! 


அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம் போனபடி சிறுபிள்ளைகளின் கூட்டம்போல் திரிந்தார்களேத் தவிர *அவர்களின் அருட்கண்கள் பூரணமாக திறந்து மெய்ப்பொருளைக் காணும் கண்களாக தோன்றவில்லை* என்கிறார் வள்ளலார். 


*வள்ளலாரின் அருட்கண் திறந்த்து !*


மருள்நெறி சேர் *மலஉடம்பை* அழியாத விமல

வடிவாக்கி எல்லாஞ்செய் வல்லசித்தாம் பொருளைத்


தருணமது தெரிந்தெனக்குத் தானே வந்தளித்த

தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயைப்


பொருள்நிறை 

சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்

புகல் அரிதாம் சுத்தசிவ பூரணமெய்ச் சுகத்தைக்


கருணைஅருட் பெருஞ்சோதிக் கடவுளை *என் கண்ணால்*

கண்டுகொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.! 


மேலே கண்ட பாடலில் அணுக்களால் பின்னப்பட்ட மருள்(இருள்) உடம்பை அழியாத  அருள் உடம்பாக்கி  அருட்கண் திறக்கப்பெற்று சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக் கருணை அருட்பெருஞ்ஜோதி கடவுளை என் கண்ணால் கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன்

கலந்து கொண்டேன் களித்தேன் என்கிறார்.


நாம் புறக்கண்களால் காணும் காட்சிகள் அனைத்தும் அநித்தியமானது.காதால்

கேட்டதெல்லாம்  பழுதானது.

நாம் கற்றதெல்லாம் பொய்யானது.

நாம் களித்தது எல்லாம் வீணானது.நாம் உண்டது எல்லாம் மலமாகிப் போனது .

உட்கொண்டது எல்லாம் குறைபாடு உடையதானது. இதுவரையில் உண்மை என்னவென்று தெரிந்து கொல்லாமல் வீணான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் என்கிறார்.


*வள்ளலார் பாடல்!*


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என் *இனிநீர் சமரசசன் மார்க்க*

*மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து* *மெய்ப்பொருள்நன் குணர்ந்தே*


எண்டகு சிற்றம் பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!


இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காமல். *சமரச சுத்த சன்மார்க்க சத்திய மெய்நெறியை கடைபிடித்து* மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து நமது தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக்கொண்டு மரணத்தை வென்று அருள் உடம்புடன் ஞானக்கண் என்னும் அருட்கண் திறக்கப்பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.


அருட்கண் திறக்க ஒரேவழி பொய்யான சாதி சமய மதங்களைப் பின்பற்றாமல்.

ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் இடைவிடாது *சத்விசாரம் பரோபகாரம்* செய்தால் மட்டுமே அருட்கண் திறக்கும்.


*சன்மார்க்க அன்பர்களே மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறுவது எளிதான காரியம் அல்ல சிந்தித்து செயல்படுங்கள்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

ஆன்மா அருள் தேகம் எடுக்க வேண்டும்!

 *ஆன்மா அருள் தேகம் எடுக்க வேண்டும்!* 


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் தலைமை இடம் அருள் நிறைந்த அருட்பெருவெளி என்பதாகும் அந்த மாபெரும் பிரமாண்ட பெருவெளியில் அருள்சத்தி நிறைந்து இருக்கின்றது.

அந்த இடத்திற்கு கடவுள் சமூகம் என்று பெயர். 


*அக்கடவுள் சமூகத்தில் ஆன்ம ஆகாயம் என்ற ஓர்இடம் உண்டு*  *அங்கு ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றது*.

*ஒவ்வொரு ஆன்மாக்களும் சாதாரண சிற்றணு வடிவமான ஒளித்தன்மை உடையதாகும்.* 


*பஞ்சபூத உலகம்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் பஞ்ச பூத உலகம் படைக்கப்படுகிறது*


எதற்காக என்றால்? 


*ஆன்மாக்கள் ஜீவதேகம்  எடுப்பதற்கும் வாழ்வதற்கும் பஞ்சபூத உலகம் படைக்கப்படுகின்றன.*


தேகம் இல்லாமல் பஞ்சபூத உலகத்திற்கு அனுப்பபட்ட ஆன்மாக்கள் வாழ்வதற்கு பஞ்சபூத அணுக்களைக்கொண்டு உடம்பு என்னும் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது.

அவ்வுடம்பில் ஆன்மா வாழ்வதற்கு மாயா சக்தியால் உயிர் என்னும் சக்தி மிகுந்த ஒளிக் கருவி பொருத்தப்படுகிறது. உயிர் என்னும் ஒளிக் கருவி ஆன்மாவுடன்  இணைக்கப்படுகிறது. 


ஆன்மாவிற்கும்  உயிருக்கும் ஒரு ஒளி இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதன்பின் 

உயிருக்கும் உடம்பிற்கும் தொடர்பு கொடுக்கப்படுகிறது உடம்பில் உள்ள கருவிகள் இயங்குவதற்கு வெளியில் உள்ள காற்றை மூக்கின் வழியாக சுவாசித்து  பிராணவாயுவை எடுத்துக் கொண்டு அசுத்த காற்றை வெளியே தள்ளிவிடுகிறது.

*பிராணவாயுவால் உடம்பு இயங்குகிறது.*


உடம்பும் அதன் கருவிகளும் இயங்குவதற்கு வாதநாடி பித்தநாடி சுழுமுனைநாடி என்கின்ற மூன்று நாடி தேவைப்படுகிறது.

அதாவது காற்று. தண்ணீர்(இரத்தம்) வெப்பம் ஆகிய மூன்றும் ஒரே நரம்பின் வழியாக உடம்பு முழுவதும் செலுத்தப்படுகிறது.


உடம்பின் நான்கு பகுதிகளான இந்திரியங்கள்.

கரணங்கள்.ஜீவன்.ஆன்மா ஆகிய  நான்கிற்கும் அந்நரம்பின் வழியாக சமமாக இடைவிடாது செலுத்தி  இயங்க வைத்துவருகிறது.


*ஜீவதேகம் !*


*ஆன்மா இயங்க முக்கியமானது உயிர். ஆதலால் இவ்வுடம்பிற்கு ஜீவதேகம் என்று பெயர் வழங்கப்படுகிறது*. 

உயிர் தன்னாட்சி செலுத்தி இயங்குகின்றவரை ஆண்டவர்  தொடர்பும் அருளும் கிடைக்க வாய்ப்பே இல்லை.


*ஆன்மா ஜீவதேகத்தில் வாழ்ந்து கொண்டே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று அருள் தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்*.


*ஆன்மா உயிர் உடம்பு!*


உடம்பையும் உயிரையும் ஆன்மாவை விட்டு பிரிக்கவோ  அழிக்கவோ கூடாது அழித்தாலும் பிரித்தாலும் அதற்குப்பெயர் மரணம். *மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு கட்டாயம் உண்டு*


*வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில்நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்த பிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


மரணம் வருவதற்கு காரணம் உடம்பு முதிர்ச்சி அடைந்து நரை திரை பிணி மூப்பு காரணமாக இருக்கின்றது. *அதற்கு காரணமாக உள்ளது நாம் உண்ணும் உணவுமுறை வாழ்க்கைமுறையாகும்.* 


*உணவு முறையும் வாழ்க்கை முறையையும் மாற்றி மரணம் வராமல் பாதுகாக்க  சிறந்த வழியைக் காட்டுவதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற மார்க்கமாகும்*.

உயர்ந்த பிறப்பான இந்த மனிதப்பிறப்பிலே நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் பாதுகாத்து கொள்ளலாம் வாருங்கள் என ஆன்மநேயத்துடன் அன்புடன் அழைக்கிறார் வள்ளலார்


*ஆன்மா வாழ்வதற்கு துணைக்கருவிகளாக சேர்த்து பின்னப்பட்டுள்ள* . *உயிர் உடம்பின் அசுத்த பூதகாரிய அணுக்களை அழிக்காமல் சுத்த பூதகாரிய அணுக்களாக மாற்றி மேலும் மாற்று இவ்வளவு என்று சொல்லமுடியாத மாற்றுக்குறையாத சுத்த பசும்  பொன்னாக உடம்பை மாற்றிக்கொள்ள வேண்டும்* என்கிறார்


*பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா*

*என்னுளங் கலந்த என்றனி யன்பே!* (அகவல்)


*ஆன்மா அருள் தேகம் பெறுவதே மரணம் இல்லாப்  பெருவாழ்வு என்பதாகும்*.


அருள் பெறும் வழிகளைப்பற்றி *பல ஞானிகள் பல வழிகளைக் காட்டியுள்ளார்கள்*. *ஒருவர் கூட நேர்வழியைக் காட்டவில்லை*.

*எனவேதான் சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்மின் இங்கே என்கிறார் மேலும் பிறந்த இப்பிறவியிலே நித்திய மெய்வாழ்வு என்னும் பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் வந்திடுமின் என்கிறார்*.


அருள் பெறுவதற்கு *உளவு* ( இரகசியம்) ஒன்று உள்ளது அவற்றைத் தெரிந்து கொள்பவரே *அறிவில் சிறந்த சன்மார்க்கியாவார் என்கிறார்* 


உளவினில் அறிந்தால் லொழிய மற்று அளக்கின்

அளவினில் அளவா வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


*வள்ளலாரின் ஒழுக்கநிலை உண்மைநிலையை அறிந்து அருள்பெறும்  உளவை ஆண்டவரே காட்டியுள்ளார்*


*பாடல்*!


உள்ளானைக் கதவு திறந் துள்ளே காண

*உளவெனக்கே* உரைத்தானை உணரார் பாட்டைக்


கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக்

கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத்


தள்ளானைக் கொலை புலையைத் தள்ளா தாரைத்

தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி


எள்ளானை இடர்தவிர்த் திங்கென்னை ஆண்ட

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.!


*கடவுளைக் காணாமல் அருள் பெறவே முடியாது* *கடவுளைக் காணும்  உளவைக்  கண்டுபிடித்த ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே!*


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வள்ளலார் கண்டவுடன் ஆண்டவரே வந்து அருள் வழங்கி அருள் தேகம் கொடுத்து ஆட்கொண்டார்.


பாடல்!


மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்

வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்


*பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்* செய்திடவே பணித்துப்

பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே


உன்னுகின்ற தோறும் எனக் குள்ளமெலாம் இனித்தே

ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே


மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே

மெய்யும்அணிந் தருள்வோய் என் பொய்யும்அணிந் தருளே.! 


மேலும்


*தந்தேகம் எனக்களித்தார்* *தம்அருளும் பொருளும்*

*தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார்*


எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார்

என்உயிரில் கலந்த நடத்திறையவர் 

காலையிலே


வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே

மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச்


சந்தேகம் இல்லை என்றன் தனித்தலைவர் வார்த்தை

சத்தியம் சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே.!


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வள்ளலார் தொடர்பு கொண்டதால் அருள்தேகம் அளித்து அவர் தேகத்தில் கலந்து பிரியாமல் வாழ்ந்துகொண்டு உள்ளார்.*


நாம் எப்போது எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை அறிந்து தொடர்பு கொள்ளுங்கள்.


நாமும் வள்ளலார் காட்டிய உளவை அறிந்து தெரிந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள்தேகம் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

பெண்களை நெருங்காத வள்ளலார் !

 *பெண்களை நெருங்காத வள்ளலார்!* 

வள்ளலார் சென்னையில் ஏழுகிணறு வீராசாமி தெரு 38 ஆம் எண் வீட்டில் வாழ்ந்த காலத்தில்  

*சன்னதி வீதி வழியாக திருவெற்றியூர் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.*

*அத்தெருவில் வள்ளலார் செல்லும் போது அவரைப்பார்த்து அவர் அழகில் மயங்கி அவரை அடைய நிறைய பெண்கள் விரும்பி உள்ளார்கள்.* 

பொருளைக் கொடுத்தும் வசப்படுத்தவும் முயற்சி செய்துள்ளார்கள்.

*ஆனாலும் அவர்களை திட்டியதும் இல்லை*. *அவர்களின் ஆசைக்கு இசைந்ததும் இல்லை*

*அவர்களிடம் சிக்கியதும் இல்லை என்பதை பல பாடல்களின் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார்*

பாடல்! 

வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந் தடுத்தபின் நினைந்தே

மலிந்திவர் காணில் விடுவர் அன்றிவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ

நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும் எனப் பயந்தே

மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.!

அடுத்த பாடல்!

வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்

சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்

பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள் முதலியகொடுத் திசைத்தும்

கை கலப்பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்! 

என்னும் பல பாடல்கள் வாயிலாக தெரிவிக்கின்றார்.

வள்ளலார் எந்த பெண்களையும் நேருக்கு நேர் பார்த்ததும் பேசியதும் நெருங்கியதும் இல்லை பயந்து நடுநடுங்கி ஓடியது உமக்குத் தெரியுமே எந்தாய் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே முறையிடுகின்றார்

மேலும் இதுபோல் பெண்கள் என்னிடம் வராதவாறு என்னை விரும்பாதவாறு  செய்தல் வேண்டும் என ஆண்டவரிடத்தில் வேண்டுகிறார்.  

அடுத்து வள்ளலார் சன்னதிவீதி வழியாக கோயிலுக்குப்  செல்வதை விடுத்து தெற்கு வீதியில் உள்ள நெல்லிக்காய்ப் பண்டாரச் சந்தின் வழியாக செல்வதை வழக்கமாக கொண்டார்.  

*வள்ளலார் உடல் அமைப்பு* 

வள்ளலார் உருவத்தில் சாதாரண உயரம் உள்ளவர்.மெலிந்த சரீரம் உடையவர் எலும்புகள் தெரியும் ஆயினும் வீரிய பலமுள்ளவர்.

நிமிர்ந்த தேகம். தெளிந்த மாநிற சிவப்பு மேனியர். (சாதாரணசிவப்பு) வேகமாக நடக்கும் பழக்கம் உடையவர்

நீண்ட மெல்லிய நாசி உடையவர். பறந்த பொறி பறக்கும் கண்களை உடையவர்.

இவருடைய முகத்தில் சதா சற்று விசனக்குறியாகவே காணப்படுவார்.

வள்ளலார் யோகிகளுக்கு வழக்கம் இல்லாத பாதரட்சையைத் தரித்திருந்தார்.( ஆற்காடு சோடுபோன்றது)

அவருடைய உடை இரண்டு வெள்ளை ஆடையைத்தவிர வேறில்லை என்று சொல்லுவார்கள்.

ஒரே ஆடையை உடுத்தி இருந்த்தாகவும் கேள்வி. 

*அவர் ஆடையை  துவைத்து உணர்த்தி இருந்ததை யாரும் கண்டதில்லை*. 

அவர் கடும் நிராகாரத் தபசிபோல் இருப்பார்.

இவர் இளைப்பாறினதாக எவரும் அறிந்ததில்லை.

இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை ஒரு கவளம் உண்பார்.

இரண்டு மூன்று மாதகாலம் உபவாச விரதம் எடுப்பார்.

அப்போது கொஞ்சம் சர்க்கரை கலந்த  பானத்தைத் தவிர வேறு ஒன்றையும் உட்கொள்ள மாட்டார்.

சாதி சமய மதங்களின் வேற்றுமையை விரும்பமாட்டார்.

எனினும் பல சாதி சமய மதங்களைச் சார்ந்தவர்கள் அவரைச் சுற்றி பெருங் கூட்டமாகச் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

கூட்டமாக கூடியவர்கள் வள்ளலார் சொல்லிய போதனைகளைக் கேட்டு பின் பற்றுவதற்காக வரவில்லை. அவர் அற்புத சித்திகளைப் பெற்றவர் என்பதை கேள்வியுற்று அவ் அற்புதங்களைப் பார்க்க வந்தவர்களாகவே இருந்தனர்.

அவரால் பொருள் வசதி வாய்ப்புக்கள் கிடைக்கும் என நினைத்து அவருடன் இருந்துள்ளார்கள்.

கூட்டமாக வந்தவர்களுக்கும் எமது கொள்கை *சமரச சுத்த சன்மார்க்க சத்திய புதிய கொள்கை* என்றும் பலமுறை சொல்லியும் ஒருவரும் கேட்பாரில்லை என்பதை அறிந்து வருத்தப்பட்டும் இருந்துள்ளார்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக  வடலூரில் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் நாள். ஆதரவு அற்ற பசித்த ஏழை எளியவர்களுக்கு உணவும் உடையும் அளிக்கப்பட்டு வந்தது.

இன்றுவரை  தொடர்ந்து அன்னதானம் மட்டும் நடைபெற்றுக் கொண்டும் வருகிறது. 

சன்மார்க்க சங்கங்கள் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் ஆரம்பித்து அன்னதானம் மட்டும் செய்துகொண்டு  வருகிறார்கள் சன்மார்க்க கொள்கைகளை எவரும் பின்பற்றியதாக தெரியவில்லை.

1872 ஆம் ஆண்டு சாதி சமயம் மதம் பேதமற்ற பொது வழிப்பாட்டுக்கென சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்தார்.

*ஜட தத்துவ உருவமான சிலை வழிப்பாட்டை தோற்று விக்காமல். ஆன்ம தத்துவ உருவமான ஒளிவழிப்பாட்டை துவக்கி வைத்தவர் வள்ளலார் இது உலகின் புதிய வழிப்பாட்டு முறையாகும்*. 

வள்ளலாருக்கு 51 வயது கடந்தபோது தாம் உலகை விட்டு ப்போவதாகச் சொல்லி சீடர்களுடைய மனதை ஒருவகை ஆறுதலுக்குக் கொண்டு வந்தார். சிலகாலம் நிட்டையில் அமரப் போவதாகக் தமது விருப்பத்தைக் காட்டிக் கொண்டே வந்துள்ளார்.

கடைசி ஆறுமாத காலமாக சகோதர உரிமையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை பற்றியும் வெகு விமரிசையாக போதித்து வந்துள்ளார்.

கடைசியாக 30-01-1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கடைசியில் பேசத் தொடங்கி இனி நடக்கப்போகும்  விஷயங்களை எச்சரிக்கையாக கொடுத்துள்ளார்.

*வள்ளலார் ஞானத்தினால் சொன்ன  விஷயங்கள் யாவும் உலகம் முழுவதும் வேறு வேறு அறிவுசார்ந்த நபர்களால்*

*அறிவியல் ரீதியாகவும்*

*பகுத்தறிவு ரீதியாகவும்*.

*மூடநம்பிக்கை இல்லாத ஆன்மீகவாதிகளாலும் தவறாமல் நிறைவேறிக் கொண்டு வருகின்றன*.

*எனவேதான் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்பதின் நோக்கமே இதுதான்*

*மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்பது சிறிதளவும் பற்று இல்லாமல் வாழ்ந்த வள்ளலாருக்கு பூரண அருள் வழங்கி ஐந்தொழில் வல்லபத்தை கொடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டார் என்பதே உண்மையான வரலாற்று உண்மையாகும்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் மாற்றிக் கொண்டார்!

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் மாற்றிக் கொண்டார்*!


18-7-1872 ஆம் ஆண்டு  வள்ளலார் வெளியிட்ட *ஞானசபை விளக்க விபவ பத்திரிகை!*


அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் ! 

இன்று தொடங்கி சபைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்* சாலைக்கு *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* என்றும் *சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்றும் திருப்பெயர் வழங்குதல் வேண்டும்.


*இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்* *ஞான சபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் என்கிறார்*. 


(மேலே கண்ட வாக்கியத்தை ஊன்றி கவனிக்க வேண்டும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது *அருட்பெரும் சித்தி வெளிப்படும் வரைக்கும்* வள்ளலார் சொல்லியவாறு ஞானசபை செயல்பட வேண்டும் என்பதே வள்ளலார் விருப்பமாகும்)


பித்தளை முதலியவற்றால் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலே ஏற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம் தகரக் கண்ணாடி விளக்கு வைக்கும் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் *தேகசுத்தி கரணசுத்தி உடையவர்களாய் திரு வாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி 12 பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது. 72 எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையில் கொடுத்தாவது *உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில்  வைத்து வரச் செய்வித்தல் வேண்டும்*


*நான்கு நாளைக்கு ஒருவிசை* காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும்.


தூசு துடைப்பிக்க புகும்போது *நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து முட்டிக்கால் இட்டுக்கொண்டு தூசு துடைப்பிக்கச் செய்விக்க வேண்டும்*. *விளக்கு வைக்கின்ற போதும் இங்கனமே செய்விக்க வேண்டும்* என்கிறார்


விளக்கு வைத்தற்கும் தூசு துடைத்தற்கும் தொடங்குகின்ற 12. பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவரும்.72.எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியரும் *பொருள். இடம். போகம் முதலியவற்றில் சிறிதும் இச்சை இல்லாதவர்களாய்  தெய்வ நினைப்பு உடையவர்களாய் அன்புடையவர்களாய் இருத்தல் வேண்டும்*.


விளக்கு வைக்கும்போதும் தூசு துடைக்கும்போதும்.

*நம்மவர்களில் நேர்ந்தவர்கள் புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதிசெய்தல் வேண்டும்*.

*யாவரும் யாதொரு காரியம் குறித்தும் தற்காலம் உள்ளே போதல் கூடாது.ஞானசபைத் திறவுகோல் ஒருவர் கையிலும் வெளிப்பட இருக்கப்படாது.*


அத் திறவுகோலை வேறொரு பெட்டிக்குள் வைத்து அப்பெட்டியைப் பூட்டி அப்பெட்டியைப் பொற்சபைக்குள் வைத்து அப்பெட்டித் திறவுகோலை ஆஸ்தான காவல் உத்தரவாதியாய் இருக்கின்றவர் கையில் ஒப்புவித்தல் வேண்டும்.


*தொடர்ச்சி காலம் நேர்ந்த தருணம் எழுதுகிறேன்*.

இங்கனம்

சிதம்பரம் இராமலிங்கம்.

என்று கையொப்பம் இட்டு  தெரிவிக்கின்றார்.


மேற்குறித்தபடி ஞானசபையில் உட்புற வாயில்களுக்குச் சபீபங்களில் வைத்து வரச் சொன்னாரேத் தவிர சபையின்  மத்தியில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க சொல்லவில்லை. 


*அந்த செயல்பாடுகள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ்ஜோதி சித்தி வெளிப்படும் வரைக்கும் அவ்வாறு செய்து வரவேண்டும் என்று வள்ளலார்  கட்டளை இடுகின்றார்*.


*வள்ளலார் சொல்லியவாறு ஞானசபையில் ஒருவரும்  பின்பற்றவில்லை. கடைபிடிக்கவில்லை. ஆதலால் கோபமாக வெளியில் சொல்லாமல் சத்திய ஞானசபையை பூட்டிக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிடுகின்றார்* 


*தைப்பூசம் ஜோதிதரிசனம் காட்டச் சொல்லவில்லை!* 


வடலூரில் தைப்பூச ஜோதிதரிசனம். மற்றும்

மாதப்பூச தரிசனம் வள்ளலார் காட்டவும்இல்லை.

காட்ட சொல்லவும் இல்லை.


வள்ளலார் சித்தி அடைந்த பின்பு பின்னாளில்  சமய மதம் சார்ந்த ஆடூர் சபாபதி குருக்கள் அவர்கள் வேட்டவலம் ஜமீன்தார் அவர்களின் ஆதரவுடன் மற்றும் சில சமய மதவாதிகளின் துணைக் கொண்டு.  சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு விரோதமாய் தைப்பூச ஜோதிதரிசனம் மாதப்பூச தரிசனம் காட்டும் பழக்கம் உருவானதாகும்.

அந்த பழக்கம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. 


*வள்ளலார் கொள்கை மக்கள் மத்தியில்  பரவவிடாமல் தடுக்கும் நோக்கத்துடன் சமய மதவாதிகள் செய்த சூழ்ச்சி என்பதை சன்மார்க்கிகள் அறிந்து கொள்ள வேண்டும்*


*அவற்றை எதிர்த்து தடைசெய்யும் தைரியம் ஒழுங்குபடுத்தும் நெறிமுறைகள் எந்த சன்மார்க்கிகளுக்கும் தோன்றவில்லை. காரணம் அப்போது வள்ளலார் உடன் இருந்த சன்மார்க்கிகளுக்கு வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கம் என்னவென்றும் தெரியாது. கடவுளின் உண்மை என்னவென்றும் தெரியாது*.


*(அந்த உண்மைக்கு புறம்பான பழக்க வழக்கங்கள் எதிர்காலத்தில் சுத்த சன்மார்க்கிகளால் அருள் உண்டாகும் காலத்தில் மாற்றம் கண்டிப்பாக வெளிப்படும் இது ஆண்டவர் கட்டளை.)*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் விருப்பத்தை மாற்றிக் கொண்டார்*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விருப்பபடி வள்ளலார் சொல்லியவாறு சத்திய ஞானசபைக்குள்  சென்று  அருட்பெருஞ்ஜோதியுடன் வள்ளலார் கலந்து இருக்க வேண்டும்*. 


அதற்கு சாட்சியாக மேட்டுகுப்பத்தில் சன்மார்க்க  கொடியேற்றி பேருபதேசம் செய்யும் தொடக்கத்திலேயே  கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்.


*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்.*


 *இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்து தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள்*என்கிறார்*

அதனுடைய விளக்கம் என்னவென்றால்.? 


*சாலைக்கு போகும் தினம் என்பது வடலூர் சத்திய தருமச்சாலை அருகில் உள்ள ஞானசபையை குறிப்பதாகும்*.


அதுவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை என்று பேருபதேசத்தை நிறைவு செய்கிறார்.


1865 ஆம் ஆண்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தொடங்கியது.


23--5--1867 சத்திய தருமச்சாலை தொடங்கியத்.


18-7-1872 ஆம் நாள் ஞானசபை வழிபாட்டு விதி விபரம்  வெளியிட்டது..சங்கம் சாலை சபை பெயர் மாற்றம் செய்த்து.


25-11-1872 ஆம் நாள் சத்திய ஞானசபை விளம்பர பத்திரிகை வெளியிட்டது.


22-10-1873.ஆம் நாள் கொடி ஏற்றி உபதேசம் செய்த்து.


30-1-1874 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு சித்தி பெற்றது.


*இடையில் நடந்தது என்ன ?*


25-1-1872 ஆம் ஆண்டு சத்திய ஞானசபை  முதற்பூசை அதாவது தைப்பூசத்தன்று தொடங்கியதாக திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ளார்கள்.


( தைப்பூசம் முதற்பூசை என்பது முன்னுக்குபின் முரண்பாடாக உள்ளது. அவற்றைப்பற்றி பிறகு சிந்திப்போம்.) 


*வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தொடர்புகொண்டு ஆறாம்திருமுறை எழுதிக்கொண்டு இருக்கும் காலத்தில்*.

வடலூரில் மாமிசம் உண்பவர்களைக்கொண்டு ஆடம்பரமான பெரிய பந்தல் அமைத்து விழா எடுக்க ஆரம்பித்து உள்ளார்கள்.

அவற்றை அறிந்து வள்ளலார் நினைத்த மாத்திரத்தில் பந்தலை  எரித்துள்ளார்கள்.

தீயினால் ஞானசபைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது அன்பர்கள் சொல்லிய  வரலாற்று உண்மையாகும் .


*வள்ளல் பெருமான் பேருபதேசத்தில் சொல்லியவாறு பத்து நாட்கள் கழித்து ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து இருக்க வேண்டும் அப்படி எதுவும் நடைபெறவில்லை*.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் ஞானசபைக்குச் செல்லாமல் வள்ளலார் தங்கி இருக்கும் இடமான மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் உள்ள திருவறையில் வந்து அமர்ந்து கொண்டார்*.

*அந்த உண்மையை அறிந்து கொண்ட வள்ளலார் அவசரம் அவசரமாக மக்களுக்குத் தெரிவிக்கிக்கின்றார்*.


*ஞானதீப விளக்கம் என்னும்*

தலைப்பில் 

ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து தடைபடாது ஆராதியுங்கள்.


இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம்.இனி கொஞ்சகாலம் எல்லோரும்.ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வீணே கழிக்காமல்.


நினைந்து நினைந்து  என்னும் தொடக்கம் உடைய *ஞானசரியை 28 பாசுரங்கள் அடங்கிய பாடலிற் கண்டபடி* தெய்வப் பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் .


நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் என்று


*ஸ்ரீமுக வருடம் தைமாதம் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை..*


நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.

ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறுவீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.

என்னைக் காட்டிக்கொடார்.


சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.

நாம் திருக்கதவை மூடியிருக்கும்கால் அதிகாரிகள் திறக்கும்படி ஆக்ஞாபிக்கின் ஆண்டவர் அருள் செய்வார். என்று அன்பர்களுக்குத்  தெரியப்படுத்துகின்றார்.


மேலும் இதற்கு ஆதாரமான *சத்திய அறிவிப்பு என்னும் தலைப்பில் 4 நான்கு பாடல்களை பதிவுசெய்கின்றார்*


1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை


மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன்


துய்யன் அருட் பெருஞ்சோதி துரிய நடநாதன்

சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க


வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.! 


2.தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தை வருகின்ற

தருணம் இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்


இனித்த நறுங் கனிபோன்றே என்னுளம் தித்திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற


மனித்தஉடம்பு இதைஅழியா வாய்மை 

உடம்பாக்கி

மன்னிய சித் தெல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே


கனித்த சிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே

களித்திட வைத் திடுகின்ற காலையும் இங்கிதுவே.!


3. சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!


4. *என்சாமி எனதுதுரை* *என்உயிர்*

*நாயகனார்*

*இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில் அமர் கின்றார்*


பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனதுபேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்


தன்சாதி உடைய பெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம் சத்தியமே


மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின் தனக்கே

வெளியாகும் இரண்டரை 

நாழிகை கடந்த போதே.!


 இத்திருப்பாட்டின் கீழ் *இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி உரைத்துள்ளேன்* என வள்ளலார் தெரிவித்துள்ளார்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளல் பெருமான் சத்திய ஞானசபையின் உள் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து இருக்க வேண்டியது.* *அவ்வாறு நடைபெறாமல் வள்ளல்பெருமான் இருக்கும் இடத்திற்கே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வந்து கலந்து கொண்டது உலகின் பெரிய அதிசயம் அற்புதமாகும்.*


*வள்ளலார் பாடல்*! 


ஐயுறேல் இதுநம் ஆணை நம்மகனே

அருள்ஒளித் திருவை நின் தனக்கே


மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம்

விரைந்து இரண் டரைக்கடி கையிலே


கையற வனைத்தும் தவிர்ந்து நீ மிகவும்

களிப்பொடு மங்கலக் கோலம்


வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக

என்றனர் மன்றிறையவரே.!


மேலும் பாடல்


ஐயர் எனக் குள்ளிருந்திங் கறிவித்த வரத்தை

யார்அறிவார் நான்அறிவேன் அவர்அறிவார் அல்லால்


பொய்உலகர் அறிவாரோ புல்லறிவால் பலவே புகல்கின்றார் அதுகேட்டுப் புந்திமயக் கடையேல்


மெய்யர்எனை ஆளுடையார் வருகின்ற தருணம்

மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே


தையல் ஒரு பாலுடைய நடத்திறைவர் ஆணை

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம் சத்தியமே.!


இந்த உண்மை சம்பவம்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் வள்ளல் பெருமானுக்கும் மட்டுமே தெரியும்.வேறு எவருக்கும் தெரியாது இது சத்தியம் என்கிறார்.


வள்ளலார் மக்களுக்கு சொல்லியது *வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே* என்று மட்டுமே சொல்லி உள்ளாரேத்தவிர *நேரம் காலம் நாள் மாதம் வருடம் போன்ற நாட்களில்தான் ஜோதிதரிசனம் காண்பிக்கப்படும் என்று எந்த இடத்திலும் (திருஅருட்பாவில்) சொல்லவில்லை.* 

*காலங் கடந்த கடவுளைக் காணற்குக்*

*காலங் கருதுவ தேன்* - நெஞ்சே

காலங் கருதுவ தேன்!  என்னும் பாடலிலும் தெரிவிக்கின்றார்.


*வடலூர் பொறுத்தவரை மக்கள் எந்த நேரம் வந்தாலும் ஜோதிதரிசனம் காணலாம் சத்திய ஞானசபை  திறந்தே இருக்கவேண்டும் என்பதே வள்ளலார் விருப்பமாகும்*


*எது எப்படியோ வள்ளல் பெருமான் உலகிற்கு போதித்த சுத்த சன்மார்க்க கொள்கையானது.*


எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று *சுத்த பிரணவ ஞானதேகத்தோடு பேரின்ப சித்தி பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே சத்திய வார்த்தையாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

கொடிகட்டிக் கொண்டோம்!

 *கொடிகட்டிக் கொண்டோம்!*


*வள்ளலார் பாடல்*


கொடிகட்டிக் கொண்டோம் என்று சின்னம் பிடி

கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி

அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி

அருளமுதம் உண்டோம்என்று சின்னம்பிடி. 


மேலே கண்ட பாடலில் அருள் அமுதம் உண்டோம் என்றும் அதனால்  கொடிகட்டிக் கொண்டோம் என்று ஆனந்தமாகப் பாடுகின்றார்.


வடலூருக்கு அடுத்த மேட்டுகுப்பம் என்னும் இடத்தில் கொடி ஏற்றி வைத்து  பேருபதேசத்தில் வள்ளலார் சொல்லியது!


*இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.*


*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது* அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: 


நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; 


இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும் என நீண்ட உபதேசம் செய்கிறார்.


*கொடி என்பது ஒரு அடையாளம்!*

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அடையாளமாக கொடி இருக்கும்.

அதேபோல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும்.

ஆன்மீகத்திற்கும்.இயக்கத்திற்கும் அடையாளமாக  வெளிமுகத்தில் கொடி கட்டிக்கொள்வது உலகியல் வழக்கம்.


வள்ளலார் தன்னுடையக்   கொள்கைக்காகவும் இயக்கத்திற்காகவும் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* தோற்றுவித்து அதன் அடையாளக் குறிப்பாக இன்றையதினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டிக் கொண்டது என்கிறார். இனி எல்லோருக்கும் நல்ல அறிவின்கண் அனுபவம் தோன்றும் என்கிறார். 


*அக்கொடியின் வண்ணம்* !


நமது நாபிமுதல் புருவமத்தி ஈறாக  ஒரு ஜவ்வு தொங்குகிறது யாதெனில் ?


அதாவது ஆன்மா இருக்கும் இடம் புருவமத்தி என்பதாகும்.

ஆன்மாவிற்கும் தொப்புள் கொடிக்கும் ஒரு ஜவ்வு ஏறவும் இறங்கவும் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்கும்.


தாயின் கருவறையில் தாயின் தொப்புளுக்கும்  குழந்தையின் தொப்புளுக்கும் ஒரு ஜவ்வுபோன்ற கொடியின் தொடர்பு இருக்கும்.அதன் வழியாக தாயின் தொப்புள் கொடிக்கும் அக்குழந்தையின் தொப்புள் கொடிக்கும் அமுதக்காற்றை மெல்லென லேசாக அனுப்பி உணவாக வழங்கப்படுகிறது. 


தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த போது தாய்க்கும் குழந்தைக்கும் தொடர்புள்ள தொப்புள் கொடி துண்டிக்கப் படுகிறது.


வெளியில் துண்டிக்கப் பட்டதும் குழந்தையின் இயக்கத்திற்கு அதன் அகத்தில் புருவமத்தியில் உள்ள உள் ஒளியான ஆன்மாவைத் தொடர்பு கொள்கிறது. குழந்தையின் தொப்புளுக்கும்    ஆன்மாவிற்கும்  உள்ள ஒரு ஜவ்வுன் வழியாக வெளிக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்து விடுகிறது.

அக்காற்றுக்கு பிராணவாயு என்றும் பிராணன் என்றும் ஜீவன் என்றும் உயிர் என்றும் சொல்லப்படுகிறது


அக்காற்றானது மூக்கின் வழியாக சுவாசித்து ஆன்மாவில் சூடுஏற்றி அங்குள்ள ஜவ்வின் வழியாக தொப்புள் கொடிக்கு சென்று சுத்தகாற்றான பிராணவாயுவை தேவையான அளவை எடுத்துக்கொண்டு அசுத்த காற்றை வெளியே தள்ளிவிடுகிறது.அந்த இயக்கம் தொடர்ந்து இடைவிடாது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.


அந்த இயக்கம் எப்போது துண்டிக்கப்படுகிறதோ அப்போது உயிர்வேறு உடம்பு வேறாக பிரிந்துவிடுகிறது.அதற்குத்தான் மரணம் என்று பெயர்.


புருவ மத்தியில் தொங்கும் ஜவ்வின் வண்ணம் அடிப்புறம் வெள்ளைவர்ணம்.மேற்புறம் மஞ்சள் வரணமாக உள்ளது என்கிறார்.

 

*ஆன்மாவின்  மேற்புறம் மஞ்சள் வர்ணம் என்பது அருளைக் குறிக்கும். அடிப்புறம் வெள்ளை வர்ணம் என்பது அருள் பிரகாசத்தை குறிப்பதாகும்*.


ஒவ்வொரு ஆன்மாவும் பிராணவாயுவை சுவாசிக்கின்ற வரை மரணம் வந்து கொண்டே இருக்கும்.


*ஏறவும் இறங்கவும் இயங்கிக் கொண்டு இருக்கும்  ஜவ்வுபோன்ற நரம்பின் வழியாக செல்லும் பிராணவாயுவு உள்ளே செல்ல வொட்டாமல் நிறுத்திக் கொள்கிறார் அதுவே கொடிக்கட்டிக் கொண்டதாகும்*


பொருள் உணவை நிறுத்தி அருள் உணவால் உயிரையும் உடம்பையும் அழிக்காமல் இயங்க வைப்பதே சுத்த சன்மார்க்க அனுபவமாகும். 


அருளைப் பெற்று அருள் உணவால்  அனுபவிக்கின்ற  பொழுது பொருள் சார்ந்த பிராணவாயுவுக்கு வேலை இல்லாமல் போகிறது.


அருள் உடம்பில் நிறைகின்ற போது  ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட்டு பஞ்சபூத அணுக்களை அருள் அணுக்களாக (வேதியல்) மாற்றம் செய்யப்படுகிறது.


தன்னையே யெனக்குத் தந்து அருள் ஒளியால்

என்னை வேதித்த என்றனி யன்பே! (அகவல்)


அந்த உடம்பிற்கு பொன் உடம்பு என்றுபெயர். அந்த மாற்றத்தைத்தான்  வள்ளலார்.

*பொன்னுடம்பு  எனக்குப்* *பொருந்திடும் பொருட்டாய்* 

*என்னுளங் கலந்த என்றனி யன்பே !* ( அகவல்)


பொன்னடி கண்டு அருட் புத்தமு துணவே

என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே! ( அகவல்)


என்று அருள் உணவை உட்கொண்டு தான் அனுபவித்ததை  வெளிப்படையாக சொல்லுகிறார்.

இதைத்தான் அனுபவத்தால் அறிக என்கிறார்.


 புருவ மத்தியில் உள்ள சவ்வின் வழியாக மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டு இருந்த நரம்பின் வழியாக செல்லும் காற்றை நிறுத்த வேண்டுமானால்.அந்நரம்பை கட்டிவிட்டு கொடியை பறக்கவிட வேண்டும்.  

அகத்தில் கண்ட இயற்கைஉண்மை அனுபவத்தை  புறத்தில் அதன் விளக்கமாக   கொடி  கட்டிக் கொண்டது என்கிறார் வள்ளலார்.


சுத்த சன்மார்க்கத்தில் சாகாமல் வாழும் கல்வியை போதிப்பதே சாகாக்கல்வி என்றும்.

*சாகாதவனே சன்மார்க்கி* என்றும் அழுத்தமாக சொல்லிஉள்ளார்.


*வள்ளலார் பாடல்!*


காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது

கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்


*கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்*

*கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்*


சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம் நின் றிடவே

சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்


பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே

பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.! 


செயற்கையால் பஞ்சபூதக் கருவிகளால் கட்டிக் கொடுக்கப்பட்ட அசுத்த பூதகாரிய உடம்பை மாற்று இவ்வளவு என்று சொல்லமுடியாத.

எதனாலும் அழிக்கமுடியாத

பசும் பொன்னாக மாற்றி சுத்த பிரணவ ஞானதேகத்தை பெற்று எங்கு செல்ல வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் செல்லும் ஆற்றலைப் பெறுவதே கொடிக்கட்டிக் கொள்வதாகும். 


*சிறிய உதாரணம்*


*ஆன்மா இயங்கும் புருவமத்தி கோழி முட்டை போன்ற வடிவமானது.*


*கோழி முட்டையின் மத்தியில் ஒருபுள்ளி வடிவமாக உள்ளதே உள்ஒளியாகும்*

*அதன் மேல்புறம் மஞ்சள் வர்ணம்.கீழ்புறம் வெள்ளை வர்ணம்.அதில் கரு உருவாகிவிட்டால்  மஞ்சள்வர்ணமும் வெள்ளை வர்ணமும் உடம்பாகவும் உயிராகவும் மாற்றம் அடைந்துவிடும்*


*முட்டை உடைந்து கோழிக்குஞ்சு வெளியே வந்துவிடும்*.

*அவ்வாறே பிறப்பு இறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.*


*மஞ்சள் வர்ணம் வெண்மை வர்ணம் உயிராகவும் உடம்பாகவும் உற்பத்தி செய்யாமல் அருளைப்பெற்று இயங்க வைப்பதே ஆன்மதேகம் அருள்தேகம் ஒளிதேகம் சுத்த பிரணவ ஞானதேகம் என்றும் சொல்லப்படுகின்றது*. 


*மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் உடம்பிற்கும் உயிருக்கும் வேலை கொடுக்காமல் அருளைப்பெறுவதே கொடிகட்டிக் கொள்வதாகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

கொடி விளக்கம் !

 *கொடி விளக்கம்* 


*21-10-1873 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பகல் 8-00 மணிக்கு*  *மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் முன்* *முதன்முதலாக சன்மார்க்கக் கொடி கட்டினவுடன்* 

*மகாஉபதேசம் என்னும்* *பேருபதேசம் செய்கிறார்* 


*இப்படி ஒரு வித்தியாசமான உபதேசத்தை உலகில் எந்த ஞானியும் வெளிப்படுத்தவில்லை*


அப்போது வள்ளலார் சொல்லியது

இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். 

*இது கடைசி வார்த்தை என்கிறார்* 


*அதுசமயம் இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டுஇராதீர்கள் என்று அழுத்தமாகச் சொல்லுகிறார்*. 


*பலமுறை படிக்கவேண்டும்*


நாம் பேருபதேசத்தில் உள்ள உண்மையான வார்த்தைகளை கருத்துக்களை  நாம் ஊன்றி  கவனித்துப் பலமுறைப் படித்து அதில் உள்ள உண்மைகளை அறிந்து வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.


*சுத்த சன்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்கள் எவற்றை எல்லாம் பின்பற்ற வேண்டும்* *எவற்றை எல்லாம் ஒதுக்கிவிட வேண்டும்*.

*என்பதை மிகச் சுருக்கமாக  தெளிவாக பேருபதேசத்தில் விளக்கி உள்ளார்*.


*அதில் நமக்கு முக்கியமாக சொல்லிஉள்ளது*


 *இயற்கை உண்மை பெருநெறி ஒழுக்கம் யாதெனில் *கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக* *என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது*


அவை யாதெனில்*  *தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது* *என்று தெளிவுப்படுத்துகிறார்*.


*இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு முடிவான இன்பா அனுபவித்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை*


*தமது உண்மையை  வெளிப்படக் காட்டும் மகா மந்திர வாக்கியத்தை எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய்அறிவின் கண்  அனுபவித்து எழுந்த  உண்மை அனுபவ ஆனந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய*


*ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன் குறிப்பிப்பேன்*


*நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே ஆண்டவர் முதற்சாதனமாக*


*அருட்பெருஞ்ஜோதி*

*அருட்பெருஞ்ஜோதி*

*தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோதி!*


*என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக  எடுத்துக் கொண்டார்*

 

*ஆண்டவர் எடுத்து கொடுத்த மகா மந்திர மகாவாக்கியத்தை மட்டுமே தினமும் இடைவிடாது தோத்திரம் செய்து கொண்டே இருந்தால் எங்குரு தீமையும் நம்மை தொடராமல் பாதுகாக்கப்படும்* என்கிறார்.


மேலும் *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே*! ( அகவல்)


*எங்கெங்கு இருந்து உயிர் ரேதெது வேண்டினும்*

*அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ் ஜோதி!* (அகவல்)


*உலகிலே மிகச்சிறந்த உண்மை மகாவாக்கிய மகாமந்திரத்தால் அடையும் இன்பத்திற்கு அளவேயில்லை என்பதை நாம் சத்தியமாக அறிந்து தெரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும்* 


*மகா மந்திரத்தின் முழுமையான பயன் எப்போது நமக்கு கிடைக்கும் என்றால்?* 


வள்ளலார் சொல்லுவதை சரியான முறையாக பின்பற்றினால் கிடைக்கவேண்டிய ஆன்மலாபம் நிச்சயம் கிடைக்கும்.


இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த *வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்*. ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் *தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்*.


மேலும்.


இதுபோல், *சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், *அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை*. 


*மேலும், இவைகளுக்கு எல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன் என்று மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்*


நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல்! 


*ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்* 


*நாம் வள்ளலார் சொல்லியவாறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றி ஒருநாளாவது அல்லது ஒருமணி நேரமாவது சிந்தித்து விசாரம் செய்து  கொண்டு இருந்து இருந்தால் வேறு பொய்யான தத்துவ தெய்வங்கள் மீது பற்று வருமா?* 


 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  மட்டும் விசாரம் செய்து  சுத்த உஷ்ணத்தை உண்டாக்கி இருக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.* 

 

*வள்ளலார் பாடல்*


உண்மையுரைக் கின்றேன் 

இங்கு வந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித்து உளறிவழி யாதீர்


எண்மையினான் எனநினையீர் எல்லாஞ் செய் வல்லான்

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்


தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்


கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.! 


*மேலே கண்ட பாடலில் உண்மை உரைக்கின்றேன் என்று சொல்கின்றார் அதற்கு அர்த்தம் என்ன?* *மற்றவர்கள் எல்லாம் பொய் சொன்னவர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்* மேலும் என்னுள் இருந்து இறைவன் இசைக்கின்றான் என்கிறார்.

ஆதலால்

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார் உருவில் வந்து மக்களின் நன்மைக்காக உண்மையை வெளிப்படுத்துகிறார்.*


மக்களை சுத்தப்படுத்தவே  சுத்த சன்மார்க்கம் தோற்றுவிக்கப்பட்டது


கொடியேற்றுவிழாவில் இறுதியாக சொல்லுகிறார்.


*இதற்கு சாட்சியாக  இப்போதுதான் சன்மார்க்க  கொடி கட்டிக்கொண்டது அக்கொடி இப்போதுதான் கட்டிக்கொண்டது*

*அக்கொடி உண்மையில் யாதெனில் ?* 


கட்டுரை நீளமாக உள்ளதால் அடுத்த கட்டுரையில்  சிந்திப்போம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

அண்டங்களின் இயக்கம் !

 *அண்டங்களின் இயக்கம்!* 

(பொருமையாக படிக்கவும்.)

அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்எண்டற விளக்கு மென்றனிச் சித்தே!

அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுளபண்டமுங் காட்டிய பரம்பர மணியே!(அகவல்)

அண்டம் பேரண்டம். பிரமாண்டம் என்ற பெயர் இவ்வுலகத்திற்கு பலவாறாக சொல்லப்படுகிறது*

*நாம் வாழும் இவ்வுலகம் பஞ்ச பூத அணுக்களின் கலவை நிறைந்த உலகம்.*

*இந்த உலகத்தின் வடிவம் தட்டை என்றார்கள்*.

*உருண்டை என்றார்கள் இரண்டும் உண்மை அல்ல*.

*இந்த உலகத்தின் வடிவம் கோழிமுட்டை வடிவம் போன்றது*.

*இதுபோன்று எண்ணில் அடங்கா கோடானுகோடி உலகங்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு உள்ளன*. *இவைகள் பலகோடி மைல் வேகத்தில் ஓய்வு இல்லாமல் சுழன்றுகொண்டே உள்ளது* நாமும் பலகோடி மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு உள்ளோம்.

ஒவ்வொரு உலகங்களுக்கும் இடையில் உள்ளவெளி அளவில் அடங்காத வெற்றிடம் உடையதாகும்.

*எல்லா அண்டங்களும் உலகங்களும் ஒவ்வொன்றும் விரிந்து சுருங்கும் தன்மை உடையதாகும்*

*இந்த உலகங்களை இயக்கி கொண்டுள்ளவர் யார்?*  *அவர் எங்கிருந்து இயக்கிக் கொண்டுள்ளார்?*   *அவர் இருக்கும் இடத்திற்கு பெயர் என்ன?* 

*அவர் என்பதால் மனித உருவமா? அணு உருவமா? அருள் உருவமா ? வேறு ஏதாவது ஆற்றல் உடையதா ? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல்.மெய்ஞான ஆன்மீகவாதிகளும் விஞ்ஞான அணு அறிவியல் கண்டுபிடிப்பாளர்களும் ஒன்றுகிடக்க ஒன்றை சொல்லிக் கொண்டுள்ளார்கள்*.

*ஒவ்வொரு சமய மதம் சார்ந்த கர்த்தாக்களும் படைப்பாளிகளும்.போதகர்களும் மற்றும் சித்தர்கள் அருளாளர்கள் என்று மதிக்கப்படுபவர்களும் போற்றப்படுபவர்களும்* 

*அவரவர்களுக்கு தெரிந்த அறிந்த அறிவுசார்ந்த அனுபவத்தின் வாயிலாக கற்பனைக் கதைகளையும் அதில் வரும் கதாபாத்திரங்களான கதாநாயகன் கதாநாயகிகளுக்கும் பெயர் வைத்து அவர்களையே கடவுள்களாக படைத்துள்ளார்கள்* 

*அவர்கள் உண்மையாகவே இருப்பதுபோல் ஆலயங்கள்.

கோயில்கள்.

சர்சுக்கள்.

மசூதிகள்.

பிரமிடுகள்.

புத்தகயா போன்றவைகளை தோற்றுவித்து *அதற்கு தகுந்தாற்போல் இடம் வாகனம் ஆயுதம் வடிவம்  ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி ஜட தத்துவ உருவங்களை உருவாக்கி கடவுள்என நம்ப வைத்துள்ளார்கள்*.  

மேலும் தெய்வத்தினுடைய உண்மை என்னவென்று *அணுவளவும்*  தெரியாமல்  பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டி உள்ளார்கள் கைலாசபதி என்றும்.

வைகுண்டபதிஎன்றும் . சத்திய லோகாதிபதிஎன்றும். பரலோகம் என்றும். சொர்க்கம் என்றும் 

மேலும் துன்பம்தரும் இடத்திற்கு நரகம் என்றும் உண்மைக்கு புறம்பாகவே சொல்லிவைத்துள்ளார்கள்.

*இவைகள் எல்லாம் எங்கு இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள்*

மேலும் *கடவுள்களுக்கு குடும்பம் மனைவி குழந்தைகள் இருப்பதுபோல் காட்டி மக்களை நம்ப வைத்துள்ளார்கள்*.

*அண்டங்களையும் அவற்றை இயக்கும் மெய்ப் பொருளையும் கண்டுபிடித்தவர் வள்ளலார்.*

*வள்ளலார் கண்ட மெய்பொருளான கடவுளுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பெயர் வைத்துள்ளார்*. *அவ்வாறு விளங்குகின்ற ஆண்டவருக்கு இயற்கை உண்மை என்றும்.  இயற்கை விளக்கம் என்றும். இயற்கை இன்பம் என்றும் செயல்பட்டுக்கொண்டு உள்ளது எதுவோ அதுவே அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள்நிறைந்த பேரொளியாகும்*.

*அக்கடவுள் இயங்கும் இடம் அருட்பெருவெளி என்பதாகும்.அதாவது பஞ்ச பூதங்கள் அற்ற அருள் நிறைந்த பெருவெளியாகும்*.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்செங்கோல் நடத்தும் இடத்தை கண்டு களித்து கனிந்து கலந்து வெளிப்படுத்துகிறார் வள்ளலார்!*

அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

அமைந்த சரா சர அளவு எவ்வளவோ அவ்வளவும்

கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்

காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க

விண்டகு 

*பேரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே*

*விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி* *அருளாம்*

*தண்டகும் ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்*

*தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே*.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

மேலும்.

அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்

கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

கலந்தகலப்பு எவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே

விண்தகும் ஓர் நாதவெளி சுத்தவெளி மோன

வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்

கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்த சிவமயமே

குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.! 

*பல கோடி அண்டங்களையும் அதன்  இடையே உள்ள வெளிகளையும் அவற்றில் உள்ள பொருள்களையும் உயிர்களையும் படைத்தும். காத்தும். பக்குவம் வருவித்தும். தெளிவு செய்வித்தும். துரிசுநீக்கியும் ஐந்தொழில் செய்து கொண்டு உள்ள ஒரே கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*

*மேலே கண்ட அனுபவங்களை பெறுவதற்கும் காண்பதற்கும் முக்கியமானது அருளாகும்.அந்த உயர்ந்த பொருளாகிய அருளைப் பெறுவதற்கு தனித்தகுதி வேண்டும்.அருள் பூரணத்தை பெற்று பஞ்சபூத அணுக்களால் பின்னப்பட்ட ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதே அருள் உடம்பாகும். அருள் உடம்பிற்கு மரணம் கிடையாது. அதற்கு மரணம் இல்லாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.* 

*வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றதால் ஆண்டவரையும் அவரால் இயக்கப்படும் அண்டங்களையும் அவற்றில் கண்ட காட்சிகளையும் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்* வள்ளலார்.

மேலும் சொல்லுகின்றார்!

அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே

அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே

பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னை யே

பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னையே.* 

என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல்

எனக்கும்உனக்கும் இசைந்த பொருத்தமோ என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ என்று போற்றுகிறார்.

மேலும் ஒருபாடலில் சொல்கிறார்!

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையேஉன்னமுடியாது அவற்றின்

ஓராயிரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்உற்ற கோடாகோடியே

திருகலறு பலகோடி ஈசன்அண் டம் சதாசிவ அண்டம் எண்ணிறந்த

திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்சீரண்டம் என்புகலுவேன்

*உறுவும் இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்*

*உறுசிறு அணுக்களாக*

*ஊடசைய அவ்வெளியின்* *நடுநின்று நடனமிடும்*

*ஒருபெருங் கருணைஅரசே*

*மருவிஎனை ஆட்கொண்டு* *மகனாக்கி அழியா*

*வரந்தந்த* *மெய்த்தந்தையே*

*மணிமன்றின் நடுநின்ற* *ஒருதெய்வ மேஎலாம்*

*வல்லநட ராஜபதியே.!* 

*எல்லா அண்டங்களையும் இயக்கிக் கொண்டுள்ள ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே*

*ஒரு அண்டத்தையே அளக்க முடியாது தவிக்கின்றார்கள்* !

*ஒரு பஞ்சபூத உலகத்தின் ஐங்கருவிகளான மண் நீர் அக்கினி காற்று ஆகாயம் போன்றவற்றின் அகம் புறம் நடு கீழ் மேல் எவற்றையும் எந்த அளவுகோல் கொண்டும் மற்றும் கருவிகளைக்கொண்டும் அளக்கமுடியாது அளவுகாண முடியாது என்றால்.பலகோடி அண்டங்களையும் அவைகளை இயக்கும் இடமான அருட்பெருவெளியையும்.அங்கிருந்து எல்லாவற்றையும் இயக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் எவ்வாறு அளவு காணமுடியும்*

*வள்ளலார் பாடல்!*

கிளக்கின்ற மறைஅளவை ஆகமப் பேரளவை

கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவை 

அறிவளவை

விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங் காலம்

மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே

அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே

அன்றி ஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே

துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்

சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.! 

வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசம் சாத்திரங்களைக் கொண்டும்.

அவர்கள் பெற்ற மெய் அறிவைக்கொண்டும் ஞானயோகம் ஞானத்தில்ஞானம் பெற்ற அருளைக்கொண்டும் அளந்து பார்த்தார்கள் அளவுகாண முடியவில்லை.

மேலும் விஞ்ஞானம் அறிவியல் கணக்குகளைக்கொண்ட கருவிகளைக் கொண்டும் அளந்து பார்த்தார்கள்

அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்ததே அன்றி அளவு கண்டார் எவரும் இல்லை என்கின்றார். 

என்னால் ஒருவாறு அளவு சொல்ல முடியும் உங்களால் தெரிந்து கொள்ளமுடியமா ?என்றால் முடியாது.

கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்களால் மட்டுமே அளவு காணமுடியும் அளவு சொல்லமுடியும்.

அவ்வளவு அரிய பெரிய தெய்வம்தான் அருட்ஜோதிதெய்வம்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உலக மக்கள் எப்போது தெரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் உலக உயிர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழமுடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 11 ஆகஸ்ட், 2021

தூக்கத்தை தொலைக்க வேண்டும் !

 *தூக்கத்தை தொலைக்க வேண்டும்*


உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எல்லாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலரே என்பார் வள்ளலார்.


*ஒரு மணிதன் ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் தூங்கப் பழகினால் ஆயிரம் வருடம் உயிரோடு வாழலாம் என்பார்*


இவ்வுலகில் தூங்குவதே சுகம் என்பதால் நிறைய நேரம் மக்கள் தூங்கிக்கொண்டே இருப்பார்கள்.

தூங்காமல் விழித்திருக்கும் சூது(உளவு) அறிவித்து எனையாண்ட துரையே என்பார் வள்ளலார்.


தூக்கமுஞ் சோம்பலும் என் துன்பமும் அச்சமும்

ஏக்கமும் நீக்கிய என் தனித் ததாயே! ( அகவல்)


தூக்கத்தால்  சோம்பல் துன்பம் அச்சம் ஏக்கம் உண்டாகி உயிர் பிரியும் நிலை ஏற்படுகிறது.

எனக்கு அவ்வாறு உண்டாகாமல் தூக்கத்தை நீக்கிய என் தனித்தாயே என்கிறார் வள்ளலார்.


*உணவு உண்பதாலும்  உழைப்பதாலும்* *உடம்பில் உள்ள தத்துவ உறுப்புகள் அதிகமாக இயங்குகிறது*. இயக்கத்தின் கலைப்பால் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உண்டாகி தூக்கம் வருகிறது.


*தூக்கம் வருவதற்கு காரணம் உணவு*


வள்ளலார் பாடல்!


அன்னம் உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்

அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன்

உன்னைநினைத் துண்டேன் என் உள்ளகத்தே வாழும்

ஒருதலைமைப் பெருந்தலைவர் உடையஅருட் புகழாம்


இன்னமுதில் என்னுடைஅன் பென்னும்நறுங் கனியின்

இரதமும் என் தனிக்கணவர் உருக்காட்சி எனும்ஓர்

கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தே

களித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன்உள் ளகத்தே.! 


பசியின் உணர்வில்லாமல் இறை உணர்வோடு வாழ்ந்தவர் வள்ளலார்.

வள்ளலாரின் பசியை அறிந்து பொருள் உணவை நீக்கி அருள் உணவை வழங்கினார் ஆண்டவர்.


உடம்பு இயக்கம் ! 


*தூங்குகின்ற தருணத்தில் ஆன்மா உயிர் விழிப்பு நிலை இழந்து மயக்க நிலைக்கு வந்து விடுகிறது*.

*அதனால் உடம்பிற்குள் இருள் சூழ்ந்துவிடுகிறது.இருளில் தத்துவங்கள் தன் விருப்பம் போல் இயங்கி ஆன்ம சக்தியை கிரகித்து கொண்டே இருப்பதால் உடல் உறுப்புக்கள் அதிகம் பாதிப்படைந்து முதிர்ச்சி பெற்று சோர்வடைந்து இறுதியில்  இயங்க முடியாமல் உடம்பை விட்டு உயிர் பிரிந்து விடுகிறது.* 


உதாரணம் !


*ஒருவீட்டில் வெளிச்சம் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் தூங்கினால் திருடன் வீட்டிற்குள் புகுந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிக்கொண்டு சென்றுவிடுவான்*.

*அதே போல் நாம் தூங்குகின்ற தருணத்தில் நம் உடம்பில் உள்ள விலை மதிப்பில்லா ஆன்மசக்தி கலைகள் மற்றும்  பிராண சக்திகள் அதிகம் விரயமாகிவிடும். அதனால் உயிர் இயக்கம் குறைந்து  தத்துவ உறுப்புக்கள் இயங்க முடியாமல்  உடம்பின் இயக்கம் நின்று  மரணம் வந்து விடுகின்றது.


*வள்ளலார் தூங்கிய வரலாறே இல்லை !*


வள்ளலார் பாடல் !


*தூக்கமும் துயரும் அச்சமும் இடரும்*

*தொலைந்தன* *தொலைந்தன* எனைவிட்

டேக்கமும் *வினையும் மாயையும்* *இருளும்*

*இரிந்தன ஒழிந்தன*  முழுதும்


*ஆக்கமும் அருளும்* *அறிவும்மெய் அன்பும்*

*அழிவுறா உடம்பும்*

 *மெய் இன்ப*

*ஊக்கமும்* *எனையே உற்றன*  உலகீர்

*உண்மை இவ் வாசகம் உணர்மின்.!* 


*தூக்கம் வந்தால் மாயை. வினை. இருள் மூன்றும் ஆன்மாவை கவ்விக்கொள்ளும் என்பதால் நான் தூங்காமல் விழித்திருந்து ஆக்கமும் அருளும்  அறிவும் மெய் அன்பும் மெய் இன்ப ஊக்கமும் பெற்றேன் இவ்வுண்மை வாசகத்தை அறிந்து தெரிந்து நான் சொல்வதை உணர்ந்து பின்பற்றுங்கள் என்கிறார்* 


*தூங்குகின்றவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்க வாய்ப்பே இல்லை* 


*எனவேதான் பசித்திரு தனித்திரு விழித்திரு என்கின்றார்*


*வள்ளலார் பாடல்!*


 தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது

துரைவரும் ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ


ஈங்கினி நான் தனித்திருக்க வேண்டும் ஆதலினால்

என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடைய தாக்கி


ஏங்கலறப் புறத்தே போய்த் தூங்குக நீ தோழி

என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே


ஓங்குறவே நான் அவரைக் கலந்தவரும்எல்லா நானும்

ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே.! 


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்போது வருவார் என்பது தெரியாது. தூங்கிவிட்டால் ஆண்டவர் வந்து அருள் வழங்காமல் சென்றுவிடுவார்.

ஆதலால் நான் தூங்காமல் விழித்து இருக்கின்றேன் என்றும் தூக்கத்தை விரட்டி அடிக்கின்றார். தூங்காமல் இருந்தால்தான் என் கணவர் வந்து எனை இணைந்து  அணைந்து அருள்வழங்குவார் என்பார்.


மேலும் சொல்லுகின்றார்.


தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே

ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - 


ஆக்கமிகத்

தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க

வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.! 


தூக்கம் கெடுத்ததான் சுகம் கொடுத்தான் என் ஏக்கம் எலாம் தீர்த்தான் என்றும் மேல்கொண்டு ஆக்கம் எல்லாம் தந்தான் என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லுகின்றார்.


உண்மையுடன் ஆண்டவரை நினைப்பவர்களுக்கு அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்பார்.


*ஆதலால் சோறு போடுவதால் மட்டுமே மரணத்தை வெல்லமுடியாது*


அது ஆரம்பநிலை  நாம் உண்ணாமலும் உறங்காமலும் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்*


அருள் உணவிற்காக விழித்திருப்பவரே சுத்த சன்மார்க்க சுகநிலை அடையும் தகுதிப் பெற்றவராகும்.

  

வள்ளலார் பாடல்!


தூக்கம் தொலைத்தான்

என்று ஊதூது சங்கே

துன்பம் தவிர்த்தான்என்று ஊதூது சங்கே

ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே

ஏம சபையான் என்று ஊதூது சங்கே.!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

இரவு பகல் இல்லாத இடம்!

 *இரவு பகல் இல்லாத இடம் !* 


*நாம் வாழும் இவ்வுலகில் இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றது.* 


*ஆதலால் இன்பமும் துன்பமும்.பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது.*

மேலும் நினைப்பு மறைப்பு.விழிப்பு தூக்கம்.பற்று பற்றில்லாமை.

உறவினில் பகைமை.பகைமையில் உறவு போன்ற  வேற்றுமையில் ஒற்றுமை.

ஒற்றுமையில் வேற்றுமையின் வாழ்க்கை முறைகளாலும் மேலும் சாதி சமய மதங்களினாலும் அகம் கருத்து புறம் வெளுத்து மயக்க நிலையில் ஆன்மாக்கள் சிக்கித் தவித்துக்கொண்டு உள்ளன. 


*இவ்வுலகில் அறியாமை அஞ்ஞானம் மூட நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து  ஆன்மாவின் அருள் தன்மையைத் தெரிய வொட்டாமல் மாயாத் திரைகள் மறைத்துக் கொண்டுள்ளது.*


*அருள்பெறுவதே ஆன்மாவின் குறிக்கோளாகும்*


*ஆன்மா உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு  அருள் பெற்று *உயிர் உடம்பை  அழிக்காமல் மாயையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு இரவு பகல் இல்லாத அருள் பெருவெளிக்கு  செல்வதே ஆன்மாக்கள் பெறும் ஆன்ம இன்ப லாபமாகும்*.


*இராப்பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே நானும் இருக்க  எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே*! 


இரவு பகல் அற்ற இடத்திற்கு நான்  வரவேண்டும் என்று ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்கின்றார் வள்ளலார். 


*வெண்ணிலா என்பது இங்குள்ள நிலவைக் குறிப்பது அல்ல!*


*வெண்ணிலா என்பது வெள்ளை நிறம் உடையது சுத்தமான இடத்திற்கும் வெண்மை என்று பெயர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான அருட்பெருவெளிக்கும் வெண்ணிலா என்று பெயராகும்*.

*கலவை இல்லாத அருளுக்கும் வெண்ணிலா என்று பெயராகும்* 


*அருட்பெருவெளி என்பது அருள் நிறைந்த பெருவெளியாகும் அங்கு பஞ்சபூதங்களான ஜட தத்துவங்கள் கிடையாது அங்கு இரவு பகல் என்பது கிடையாது*.


*அங்கு செல்ல வேண்டுமானால் பொன்மை வெண்மை கலந்த அருள் உடம்பாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்பதை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.


வள்ளலார் பாடல்!


இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே

இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே


அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டியே

அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல்அமுதம் ஊட்டி யே.!


எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ ! என்று போற்றுகிறார்.

மேலும்


இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே

எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே

கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே

களித்தென் தனையும் *சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவ னே*.

எனக்கும் உனக்கும்


*இரவுபகல் அற்ற  இடமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான அருட்பெருவெளிக்குள்ளே  ஆன்மாக்கள் செல்ல வேண்டிய சொந்த  இடமாகும்*


*இரவு பகல் அற்ற இடம்தான் நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கோட்டையாகும்*.


ஆன்மாக்கள் அங்கு செல்ல வேண்டுமானால் இங்கு தூங்காமல் இருக்கும் சூதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கோட்டையைத் திறந்து உள்ளே செல்லும் சாவியை இங்கே பெறவேண்டும்


தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே

ஆக்கமென ஓங்கும் பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்

நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்

தாங்கினேன் சத்தியமாத் தான்.!


தூக்கம் இல்லாமல் வாழ்ந்து அருள் பெறுவது எவ்வாறு என்னும் சூதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

சனி, 7 ஆகஸ்ட், 2021

விந்துநாதம் பரவிந்து பரநாதம் !

 *விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் !*



*விந்து நாதம் ! பரவிந்து பரநாதம் ! என்றால் என்ன ?*


விந்து என்றால் சுக்கிலம் ! இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று *மேல்நிலை சுக்கிலம்* ஒன்று *கீழ்நிலை சுக்கிலம்* இவை இரண்டும் மனித உடம்பில் உற்பத்தியாகிறது


*நாம் உண்ணும் பஞ்ச பூத உணவினால் உண்டாவது கீழ் நிலை சுக்கிலம்* 

*இறைவன் அருளினால் உண்டாவது மேல் நிலை சுக்கிலம்* .


விந்து என்ற சுக்கிலத்தால் நாதம் என்னும் சத்தம் உண்டாகிறது அந்த நாதம்தான் நாம் பேசும் மொழிகள் வார்த்தைகள்.


*குழந்தை பேசுகின்றது !*


தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்தததும் சத்தமும் வராது பேச்சும் வராது தாயிக்கும் குழந்தைக்கும் தொடர்பு உடைய தொப்புள் கொடியை துண்டிக்கும் போது வெளிக் காற்று  உள்ளே போகும் போதுதான் வீர் என்று சத்தம் வரும். சத்தம் என்னும் நாதம் வந்தால் குழந்தை நன்றாக உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.


அதன் பின்பு தாயின் பாலைக் குடித்து குழந்தை வளருகின்றது.ஆனாலும் குழந்தைக்கு பசிக்காக அழும் சத்தம் மட்டுமே வரும் ஆனாலும் பேசுவதில்லை ...நாம் உண்ணும் உணவை கொஞ்சம் கொஞ்சமாக  குழந்தைக்கு கொடுத்து உணவு உண்ணும் பழக்கத்திற்கு கொண்டு வந்து விடுகின்றோம்.


*உணவினால் சுக்கிலம் உண்டாகிறது.*


தினம் ஆகாரங் கொண்டால் அவ் ஆகாரம் மார்பின் இடத்தில் ஓர் தட்டில் தங்கும்.அந்த தட்டின் மேல் கடவுள் கடவுளை என்று இரண்டாக இருக்கின்றது.

உண்ட அன்னத்தை ஒரு மணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய தத்துவங்களுக்கு { உறுப்புகளுக்கு } ஊட்டுகின்றது .


மறுபடியும் இரண்டு மணிக்குள் மேற்படி அன்னத்தினது  மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் *சுக்கிலமாக்கி* இரண்டரை வராகன் எடையில் கோச நுனியில் ஒன்றும்.நாபியில் ஒன்றும் .பிரமந்திரத்தில் அறையுஞ் ...சேர்த்து மற்றவைகளைக் கொண்டு ஆங்காங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ஈளை .குறும்பை.

நகத்தூசி .தொப்புள் அழுக்கு ,கண் பீளை .முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது


மேற்படி அன்னத்தை மூன்று மணி நேரத்தில் அதில் உள்ள திரவத்தைப் பிரித்து உதிரமாக்கி யூட்டுகின்றது  .

மூன்று மணிக்கு மேல் சக்கையை மல பாகத்தில் தள்ளி விடுகின்றது. இதுபோல் எந்த வஸ்துக்களையும் பிரிக்கின்றது .ஆதலால் ஆகாரங் கொண்ட மூன்று மணிக்கு மேல் தான் ஆகாரங் கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார்.


*ஒரு குழந்தையின் உடம்பில் இவ்வளவு வேலைகளையும் மாற்றங்களையும் யார் ? செய்வது* சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஐந்தொழில் வல்லபம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு குழந்தை பிறந்தவுடன் பேசாது,உண்ணும் உணவை அரைத்து திரவமாக்கி அதில் மத்திய தரமாகிய திரவத்தை இரத்தமாக்கி.உடம்பிற்கு தேவைப் போக வீரியம் உள்ள இரத்தத்தை சுக்கிலமாக மாற்றுகின்றது. சுக்கிலம் என்னும் விந்து மூலாதாரம் என்னும் குண்டலனிவட்ட பையில் சேர்க்கின்றது.

அந்த சுக்கிலம் என்னும் விந்து கொஞ்சம் கொஞ்சமாய்  சேர்ந்து சேர்ந்து .அதன் ஆவி ஆறு ஆதாரங்களின் வழியே சென்று குரல் வலையில் உள் நாக்கின் வழியாக வரும் போதுதான் குழந்தை பேச ஆரம்பிக்கின்றது ..அக் குழந்தை உலகியல் தாய் தந்தை பழக்கத்திற்குத் தகுந்தாற் போல் தன்னை வளர்த்துக் கொள்கின்றது .

விந்துவின் தன்மைக்குத் தகுந்தாற் போல் விந்துவின் உணர்ச்சிக்குத் தகுந்தாற் போல் பேச்சு என்ற ஒலியும் அறிவு என்ற விளக்கமும் பெறுகின்றது ..


பஞ்ச பூத விந்து !


*பஞ்ச பூத உணவால் உண்டாவது தான் வீரியமுள்ள பூத விந்து பூநாதம் என்பதாகும்* அதனால் வரும் ஒலிதான் விந்து நாதம் என்பதாகும்.

விந்து சக்தியால் தான் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் பேசிக்கொண்டு உள்ளார்கள்.  


*பேச்சின் ஒலித்தன்மைக்குத் தக்கவாறு எழுத்து என்ற வரிவடிவம் உருவடிவம் தோன்றியது*. 


அதற்கு வரி வடிவம்

ஒலி வடிவம் தன்மை வடிவம்

உணர்ச்சி வடிவம் உண்மை வடிவம் என்று பெயர் வைத்துள்ளார்கள் .இந்த விந்து சக்தியின் துணையுடன் பரவிந்து சக்தியுடன் தொடர்பு கொண்டு இறை அருளின் ஏக தேசத்தைக் கொண்டு  சில பல அருளாளர்களால் .உலகில் உள்ள மொழிகளின் இலக்கணம்.

இலக்கியம் மற்றும் வேதம் .ஆகமம்.

புராணம்.

இதிகாசங்கள் .

சாத்திரங்கள் யாவும் தோன்றின.


*விந்துவில் (சுக்கிலம்) இரண்டு வகை!*


*தாவர  உணவால் உண்டாவது சுத்த பூதகாரிய விந்து.*

*மாமிச உணவால் உண்டாவது அசுத்த பூதகாரிய விந்து என இரண்டு வகை உண்டு*.


*அசுத்த பூத காரிய மாமிச உணவு உண்பவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கிடைக்க வாய்ப்பே இல்லை.*


*சுத்த பூத காரிய தாவர உணவு உண்பவர்களுக்கு மட்டுமே பரவிந்து பரநாதத்தின் தொடர்பு கிடைக்கும்.*


*பரவிந்து பரநாதம் !*


பரவிந்து பரநாதம் என்பது உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் இருந்து பெறும் அருளும் அதில் தோன்றும் நாதம் என்பதாகும்.


*மனித தேகம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட உயர்ந்த அறிவுள்ள தேகம். இந்த மனித தேகத்தனால மட்டுமே உயர்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.இங்கே உயர்ந்த அறிவு என்பது உலகியல் அறிவு அல்ல அருள் அறிவைப் பெறுவதே உயர்ந்த அறிவாகும்* 


ஏழாவது பிறப்பாகிய மனித தேகத்தில் 

 இந்திரிய அறிவு.

கரண அறிவு.

ஜீவ அறிவு.

ஆன்ம அறிவு என நான்குவிதமான உயர்ந்த அறிவு  உள்ளன.


*கடவுளிடம் உள்ளது பரவிந்து பரநாதம்*!


*ஆன்ம அறிவுக்கு மேல் அருள் அறிவும்*

*அதற்குமேல் கடவுள் அறிவும்* *எனகின்ற உயர்ந்த அறிவும் பெறவேண்டும்*. 

*அந்த உயர்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ளத்தான் மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளன.*


*இந்திரிய ஒழுக்கத்தால் இந்திரிய அறிவும்

கரண ஒழுக்கத்தால் கரணஅறிவும் 

ஜீவ ஒழுக்கத்தால் ஜீவ அறிவும் ஆன்ம ஒழுக்கத்தால் ஆன்ம அறிவும் முழுமை பெற்றால் மட்டுமே *பரவிந்து பரநாதம்* என்ற ஆண்டவர் தொடர்பு கிடைக்கும். 


*அருள்அறிவும் கடவுள்அறிவும் ஆன்மஅறிவில் ஒன்று பட்டால் தான் மரணத்தை வெல்ல முடியும்*. அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடையும் முறையாகும்.


அருள் பெறுவது எப்படி !


நாம் உணவு உட்கொள்ளுகின்ற வரை.பரவிந்து என்னும் அருள் சுரக்காது .பர நாதம் என்னும் இறை ஒலி தோன்றாது .இறை ஒலி தோன்றினால் தான் .இறை ஒளி என்னும் அருட் பிரகாசம் தோன்றும்.


*நாம் உண்ணும் உணவுகளின் அசுத்தங்களை வெளியேற்ற ஒன்பது துவாரங்கள் உள்ளன.உணவை நிறுத்தி ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட வேண்டும்.இடைவிடாது இறைவனிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே ஒன்பது துவாரங்களும் இறை உணர்வால் அடைக்கப்படும்.அப்படி அடைக்கப் பட்டால் தான்  துரியக் கதவுத் திறக்கப்படும். அதுதான் மோட்ச வீட்டின் கதவு என்பதாகும்*.


அந்த மோட்ச வீட்டின் கதவைத் திறக்க திறவுகோல் என்னும் அருள் வேண்டும்.

அருள் பெறுவதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் வேண்டும்.


*நாம்பெற வேண்டுவது அன்பு தயவு அருள் 

கருணை என்பதாகும்* கருணையே அருளாக மாற்றம் அடையும்.கருணை என்னும் சுத்த உஷ்ணத்தினால் மேல் வீட்டுக் கதவு திறக்கும்.கதவு திறந்தால் அருள் மலரும்.அருள் மலருவதே  பரவிந்து பர நாதம் என்பதாகும்.*


*கருணையும் சிவமும் பொருள் என காண்க* என்கிறார் வள்ளலார்


வள்ளலார் பாடல் !


இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார்

எல்லாஞ் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார்

அன்பர் உளத்தே இனிக்கும் அமுதர் வருகின்றார்

அம்பலத்தே நடம் புரியும் ஐயர் வருகின்றார்

என்பு உருவம் பொன் உருவாக்க எண்ணி வருகின்றார்

என்று திரு நாத வொலி இசைக்கின்றது அம்மா

துன்பம் அறத் திருச்சின்ன வொலி அதனை நீயுஞ்

சுகம் பெறவே கேளடி என் தோழி எனைச் சூழ்ந்தே !


என்னும் பாடலில் தான் அனுபவித்த பர நாத ஒலியையும் அதனால் கிடைக்கும் பரவிந்து என்னும் அருளையும் .அதனால் அடைந்த பேரின்பத்தையும். அளிக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றார் நீங்களும் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை வாருங்கள் வாருங்கள் என்று உலக மக்களை அன்புடன் அழைக்கின்றார் 


விந்து நாதத்தை நிறுத்தி பரவிந்து பர நாதத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஞானசரியை என்னும் 28.பாடல்களில் விளக்கி உள்ளார் படித்து பயன் பெறலாம்.


*முதல்பாடல்*


நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு


நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என் உரமை நாயகனே என்று


வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியிலீர்

மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்


புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

ஆசைப்பட வேண்டும்!

 *ஆசைப் படவேண்டும்!*


வள்ளலார் பாடல்!


ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்


ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே


மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.! (ஞானசரியை பாடல்)


*உலகில் மனிதன் வாழ்வதற்கு அடிப்படைக் காரணம் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்ற மூன்று வகையான ஆசைகளே காரணம் காரியமாக உள்ளன.இந்த மூவகையான ஆசைகளிலே மூழ்கி முழுமையாக அனுபவிக்க முடியாமல் இறுதியில் துன்பம் வந்து மனிதர்கள்  மாண்டுபோகிறார்கள்*.


*ஆசையை ஏன் ஒழிக்க வேண்டும்?*


*துன்பத்திற்கு காரணமே ஆசைதான் என்கிறார்கள்*


*மனிதர்கள் அழிவிற்கும் துன்பத்திற்கும் ஆசைகளே காரணம் என்பதால் ஆசைகளை விட்டு இறைவனை தொடர்புகொண்டு அருளைப்பெற்று சொர்க்கம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் போன்ற இடங்களில் சென்று துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று ஆன்மீக அருளாளர்கள் மக்களுக்கு நிறைய போதித்து வருகிறார்கள்*


சில அருளாளர்கள் *அறுமின் அறுமின் ஆசையை அறவே அறுமின் ஈசனோடுயாயினும் ஆசையை அறவே அறுமின் என்றும் போதித்து உள்ளார்கள்* *கடவுளிடத்திலும் ஆசை வைக்ககூடாது என்றும் சொல்லுகிறார்கள்* 


*ஆசை இல்லாத மனிதபிறப்பே உலகில் கிடையாது*.

*ஆசை இல்லாத ஆன்மா உணர்ச்சி இல்லாத  ஜட தத்துவம் போலாகிவிடும்*


*மேலே சொன்ன மூன்று ஆசைகளையும் துறந்த துறவிகளும் சன்னியாசிகளும் சித்தர்களும் தன் உயிர்மீதும் உடம்பு மீதும். உணவுமீதும் ஆசை வைத்துள்ளார்கள்.அதுவும் ஒருவகையான ஆசைதான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*இங்கேதான் வள்ளலார் தனித் தன்மையுடன் நிற்கிறார்*!


*மனிதர்கள் ஆசை இல்லாமலும் பற்று இல்லாமலும் வாழவே முடியாது. ஆசையையும் பற்றையும் அழிக்கவே முடியாது.ஆனால் அவற்றை மாற்ற முடியும் என்பதால் ஆசை உண்டேல் வம்மின் இங்கே என்று அன்புடன் அழைக்கிறார் வள்ளலார்* 


*ஆசைகளிலே பெரியது பெண்ணாசை என்கிறார்கள்*.

*வள்ளலார் ஆண் ஆசைதான் பெரியது  என்கிறார்.*

*ஏன் என்றால்?*

ஆன்மாக்கள் எல்லாம் பெண்தன்மை உடையது.

ஆன்மாக்கள் ஆன்மாக்களுடன் ஆசை வைப்பது ஒர்இனச் சேர்க்கை வைப்பதற்கு ஒப்பாகும் என்கிறார்.


*வள்ளலார் பாடல்!*


கண்ணாறு படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்

கணவர் திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்


எண்ணா என் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா

தெனை ஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ


*பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்*

*பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே*


உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்

உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே.! 


என்னும் அனுபவமாலை பாடலிலே தெளிவாக சொல்லுகின்றார்.


என்னால் ஆசையை அழிக்கவோ ஒழிக்கவோ முடியவில்லை. என்னுடைய  ஆசையானது வெள்ளம்போல் என் சொல்வழி கேட்காமல் செல்ல வேண்டிய செலுத்த வேண்டிய இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கின்றது.


எங்கு என்றால்? அவர்தான் என்கணவர் பொன்மேனி கொண்டவர் ஆண் அழகர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் ஆண்தன்மைக் கொண்டவர்

அவரிடம் நான் இணைந்து இடைவிடாது அனுபவிக்கிறேன். நான் அனுபவிக்கும் செய்தி வெளியில் தெரிந்தால் கண்பட்டுவிடும் ( கண்ணேறு) என்று நான் அஞ்சுகிறேன் என்கிறார்.


மேலும் *பெண்ணாசை பெரியது என்று சொல்லும் மண்.நீர்.அக்கினி காற்று மற்றும் விண்ணை ஆள்பவர்களுக்கும் பெண்ணாசை பெரியதல்ல ஆண் ஆசையே பெரியதென்று வள்ளலார் சொல்லுகின்றார்*

*நான் அனுபவித்த அதே இன்பத்தை நீங்களும் அனுபவிக்கலாம் ஆசை உண்டேல் வாருங்கள் என்று அன்புடன் மக்களை அழைக்கின்றார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே ஆன்மாக்களுக்கு இன்பம் தரமுடியும் அதுவே ஆன்ம இன்பலாபம் என்றும். என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும் சொல்லப்படுகிறது* 


*உயிரும் உடம்பும் அனுபவிக்கின்றது பொருள் இன்பம் நிலையற்றது*.

*ஆன்மாவும் அருட்பெருஞ்ஜோதியும் அனுபவிக்கின்றது அருள் இன்பம் என்றும் அழியாதது.*


*மனிதப்பிறப்பு எடுத்த ஒவ்வொரு ஆன்மாவும் இப்பிறப்பிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காதலித்து அனுபவிப்பதே அருள்பெறும் இன்பமாகும்* .


உலகம் முழுவதும் *தோற்றுவித்தல்*

*விளக்கம் செய்வித்தல். துரிசுநீக்குவித்தல் பக்குவம் வருவித்தல். பலன்தருவித்தல்  போன்ற ஐந்தொழில் செய்கின்ற  இயற்கை உண்மைக்  கடவுளாகியவர் எல்லாம் வல்லவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டுபிடித்து காதலித்து கணவராக்கி அனுபவித்து அருள்பெற்றுக் கொண்டவர் வள்ளலார் ஒருவரே என்று எல்லோரும் போற்றுகிறார்களாம்.*


*வள்ளலார் பாடல்*


*எல்லாஞ்செய் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்*

*எவ்வுலகில் யார் எனக்கிங் கீடுரைநீ தோழீ*


நல்லாய்மீக் கோளுடையார் *இந்திரர்* 

*மாமுனிவர்*

*நான்முகர்* 

*நாரணர்எல்லாம் வான்முகராய் நின்றே*


*பல்லாரில் இவள்புரிந்த பெருந்தவத்தை* *நம்மால்*

*பகர்வது அரிதென் கின்றார்* *சிற் பதியில்நடம் புரியும்*


*வல்லானை மணந்திடவும்* *பெற்றனள்*

*இங்கிவளே*

*வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே*.! 


என்று *நாம் வணங்கி போற்றுபவர்களே வள்ளலாரை போற்றி பாராட்டி மகிழ்கிறார்கள்*.


*அருள் பெறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது ஆசைப்படவேண்டும் என ஆன்மநேயத்துடன் அழைக்கிறார் வள்ளலார்*


*பொருள் இன்பத்தால் மரணம் வரும். அருள் இன்பத்தால் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 4 ஆகஸ்ட், 2021

சரியை கிரியை யோகம் ஞானம் !

 *சரியை கிரியை யோகம் ஞானம் என்றால் என்ன*?


*வள்ளலார் பாடல்!*


*சரியைநிலை நான்கும்* *ஒரு கிரியைநிலை நான்கும்*

*தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்*


*உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்*

*ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்*


அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்


பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்

பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.! 


என்னும் பாடலை தன் அருள் அனுபவத்தால் கண்டு அனுபவித்து *அனுபவமாலை என்னும் தலைப்பில்* பதிவு செய்கிறார்.


*ஆன்ம இன்ப லாபம் அடைவதற்கு ஆன்மீக அருளாளர்கள் காட்டிய படிகள் 16. அவை*


சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் வரிசையில் 

ஒவ்வொன்றிலும் நான்கு படிகள் உள்ளன.


சரியையில் சரியை

சரியையில் கிரியை

சரியையில் யோகம்

சரியையில் ஞானம்


கிரியையில் சரியை

கிரியையில் கிரியை

கிரியையில் யோகம்

கிரியையில் ஞானம்.


யோகத்தில் சரியை 

யோகத்தில் கிரியை

யோகத்தில் யோகம்

யோகத்தில் ஞானம்


ஞானத்தில் 

சரியை 

ஞானத்தில் கிரியை 

ஞானத்தில் யோகம்

ஞானத்தில் 

ஞானம்*


*என்னும் 16 படிகள் உள்ளன*


மேலே கண்ட 16 படிகளில் சென்று கடவுளைக்கண்டு அருளைப் பெறுவதற்கு நமக்கு காலம் நேரம் போதாது அதற்குள் மரணம் வந்துவிடும்.


எனவே வள்ளலார் *ஞானசரியை யில் இருந்து தொடங்கி* ஞானத்தில்

கிரியை ஞானத்தில்

யோகம் *ஞானத்தில் ஞானம் என்னும்  நான்காவது படியில் கடவுளைத் தொடர்பு கொண்டு  அருளைப் பெற்று மரணத்தை சுலபமாக வென்று விடலாம் எனபதை தெளிவாகச் சொல்லுகிறார்.* 


*அருளைப் பெறுவதற்கு நான்கு வகையான ஒழுக்கமே முக்கியமான வழியாகும்*


1. *ஞானசரியை என்பது இந்திரிய ஒழுக்கம்.*

2. *ஞானகிரியை என்பது கரண ஒழுக்கம்*.

3. *ஞானயோகம் என்பது ஜீவ ஒழுக்கம்*.

4. *ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கம்* 


*மேலே கண்ட நான்கு ஒழுக்களில் முதல் ஒழுக்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்*.

*அதாவது ஜீவர்களுக்கு (உயிர்களுக்கு) உண்டாகும் *பசி பிணி தாகம் இச்சை எளிமை பயம் கொலை* போன்ற துன்பங்களைப் *புறப்புறக் கருவிகளான *கண் காது மூக்கு வாய் கை கால் உடம்பைக் கொண்டு* 

*அத்துன்பங்களைப் போக்குவதே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்*


*எனவேதான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்*


இரண்டாவது ஒழுக்கம் கரண ஒழுக்கம். *மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கருவிகளை* *வெளியில் செல்ல விடாமல் *கடவுள் விளங்கும் இயங்கும் இடமான ஆன்ம சிற்சபையில் இடைவிடாது மனதைச் செலுத்துவதே *சத்விசாரம்* *என்னும் கரண ஒழுக்கமாகும்*.


*இந்த இரண்டு ஒழுக்கங்களை முழுமையாக அதி தீவிர முயற்சியுடன் கடைபிடித்தால் ஜீவஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்ற இரண்டு ஒழுக்கங்களும் தானே கைகூடும்.* *அதாவது கடவுள் போனஸாக அதாவது இலவச பரிசாக  வழங்குவார்.*  


நாம் முக்கியமாக தெரிந்து கொள்வது யாதெனில் ?  


*உலகில் பல ஞானிகள் பல கடவுள்களை பலப்பல உருவங்களில் பல இடங்களில் புறத்தில் ஜட தத்துவங்களைப் படைத்துள்ளார்கள்* *அதில் எந்தக் கடவுள் உண்மையான கடவுள். எந்தக்கடவுள் உயிர் உணர்வு உள்ளவர். பேசும்கடவுள்யார்? பேசாத கடவுள்யார் ? என்பது தெரியாமல் எல்லாக் கடவுள்களையும் வணங்குகிறார்கள் வழிபடுகிறார்கள்*  *ஆதலால் நாம் கடவுளை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாமல் அருளைப்பெற முடியாமல் மரணம் அடைந்து பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளோம்*.


*ஆன்மா உயிர் உடம்பு உள்ளவைகளையே கடவுள் விளங்கும் ஆலயமாக்க் கருதி உபகாரம் செய்வதே கடவுள் வழிபாடாகும்* 


*உண்மைக் கடவுள் ஒருவரே !  அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதைக் கண்டுபிடித்து உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றார் வள்ளலார்* 


*அந்தக் கடவுள் மனித தேகத்தில் இயங்கும் இடம் உச்சிக்கும் கீழே உள்நாக்கிற்கும் மேலே மூலையின் மத்தியில் உள் ஒளியாக இருந்து உயிரையும் உடம்பையும் இடைவிடாது இயக்கிக் கொண்டு இருப்பதே ஆன்மா என்னும் உள்ஒளியாகும்* 


*அந்த உள்ஒளியான ஆன்மாவானது வேறுபாடு இல்லாமல் உருவ பேதம் இல்லாமல் எல்லோருக்குள்ளும்  ஒரேத்தன்மை உடையதாக இருக்கின்றது* *ஆதலால் புறத்தில் கடவுளைத் தேடாமல் அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்வதே சத்விசாரம் என்னும் கரண ஒழுக்கமாகும்.*


*வள்ளலார்பாடல்*

*எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே*

*இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்*


கவ்வைபெறு *குருடர்கரி கண்டகதை போலே*

*கதைக்கின்றார்* *சாகாத கல்விநிலை அறியார்*


நவ்வி விழியாய் இவரோ சிலபுகன்றார் என்றாய்

*ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்*


செவ்வைபெறு *சமரசசன் மார்க்கசங்கந் தனிலே*

*சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே*.! 


மேலே கண்ட பாடலை ஊன்றி படித்து பொருள் உணர்ந்து தெரிந்து கொள்ளவும்.


உயர்ந்த அறிவுள்ள மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக *ஞானசரியை*

*என்ற தலைப்பில் 28 பாடல்கள் ஆறாம் திருமுறை நூலில் எழுதி வைத்துள்ளார்*. 

அந்த பாடலில் கண்டுள்ளவாறு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.


*ஞானம் என்பது உயர்ந்த அறிவு உயர்ந்த அருள் என்பதாகும்.*


உயர்ந்த அறிவையும் உயர்ந்த அருளையும் பெறுவதே ஞானசரியை

ஞானகிரியை

ஞானயோகம்

ஞானத்தில் ஞானம் என்னும் ஒழுக்க நெறிகளாகும்


*அகம்என்பது ஆன்மா*.  *அகப்புறம் என்பது ஜீவன்.* *புறம்என்பது கரணங்கள்.* *புறப்புறம் என்பது இந்திரியங்கள்*.

*இவை நான்கும் சேர்ந்ததே உடம்பாகும்* 


*இவ் உடம்பையும் உயிரையும் அழிக்காமல்  ஆன்மாவுடன் இணைந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலப்பதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*


கடவுளுடன் கலப்பதற்கு அருள்தான் முக்கியமானதாகும் அருள் வழங்கும் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ! என்பதால் அவரையே தொடர்புகொண்டு அருளைப்பெறுவோம்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொள்ள இடைத்தரகர்கள் தேவை இல்லை. இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கம் மட்டுமே முக்கியமானதாகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருவருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

ஆன்மாவின் குடும்பம்!

 *ஆன்மாவின் குடும்பம்!*

ஆன்மாக்கள் பஞ்சபூத இவ்வுலகில் வாழ்ந்து  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறுவதற்காகவே  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

*ஆன்மா தனித்து வாழ்வதற்கு இங்கு வாய்ப்பு இல்லை. தனித்து வாழ்வதற்கு இவ்வுலகில் வாடகை வீடு கிடைப்பதில்லை*  

*எனவே ஒரு புதிய குடும்பத்தை ஆன்மா ஏற்படுத்திக் கொள்கிறது*

*குடும்பத்தின் விபரம் வருமாறு*!

வள்ளலார் குடும்ப கோரம்  என்னும் தலைப்பில்  சொல்லியதை சுருக்கமாக சொல்கிறோம்.

*ஆன்மாவிற்கு முதல் மனைவி ஆணவம் என்பதாகும்.முதல் மனைவி ஆணவத்திற்கு பிறந்த குழந்தை அஞ்ஞானம் என்னும் மூடப்பிள்ளை உயிர் என்னும் ஜீவன் என்பதாகும்* *அந்த ஜீவன் ஆன்மாவை விட்டு பிரிவதே இல்லை*.

*முதல் பிள்ளை மூடப்பிள்ள என்பதால் இரண்டாவது மனைவி கட்ட நேர்ந்தது*.

*ஆன்மாவிற்கு இரண்டாவது மனைவி மாயை  என்பதாகும்*

*மாயையைக்கு பிறந்த குழந்தைகள்*

*மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கு குழந்தைகள்* *நான்கு குழந்தைகளும் ஆன்மா மாயை சொல்லும் பேச்சை கேட்காத தருதலைகளாக இருந்தன.*

*மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்குபேரும் கூட்டு களவாணிகள்*

ஆதலால் *மூன்றாவது மனைவியாக காமியம் என்னும் கன்மத்தைக் கட்டிக் கொண்டது*.

*கன்மத்திற்கு பிறந்த குழந்தைகள் மூன்று அவை*.

*வாதம் பித்தம் சிலேத்துமம் என்பதாகும்*.

*ஆன்மாவைத் சேர்த்து மொத்த குடும்ப உறுப்பினர்கள் 12 நபர்கள்*.

*12 நபர் வாழக்கூடிய வாடகை வீடுதான் மனிததேகம்* *இந்த 12 நபர்களுக்கும் உருவமற்ற அருஉருவம் என்னும் அணு உணர்ச்சி  ஒளித்தன்மை உடையதாகும்..*

*மனித தேகத்திற்கு ஆறாறு முப்பத்தாறு முக்கிய தத்துவங்களால் ஆன உள் உறுப்புக்களைக்  கொண்டு தாங்கி இயங்கிக் கொண்டு உள்ளது* 

*வாடகை வீட்டிற்கு வசூல் செய்து  கொடுக்கும் வாடகை வீட்டின் தலைவர்கள்தான் வாத பித்தம் சிலேத்துவம் என்பதாகும்* *வாடகை என்பதுதான் குடிக்கூலி என்னும் உணவு (பிண்டம்) என்பதாகும்* 

*வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றும் வரையில் ஆன்மாவானது வேறு வேறு வாடகை வீட்டிற்கு தன் குடும்பத்துடன் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்* 

*இதில் மாயை என்னும் இரண்டாவது மனைவியின் குழந்தைகளான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கரணங்கள்*.

*புற உறுப்புகளான கண் காது மூக்கு வாய் கை கால் உடம்பு போன்ற உறுப்புக்களை தன் வசமாகமாற்றுக்கொண்டு இஷ்டம் போல் செயல்பட்டுக்கொண்டே உள்ளது*. 

*மாயை கன்மம்  என்னும் இரு மனைவிகளும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் ஆன்மா சொல்வதை கேட்காமல் தங்கள் விருப்பம்போல் செயல்படுவதால் சொந்த வீடு கட்டிக்கொள்ள முடியாமல்  ஆன்மா வேறு வேறு வாடகை வீடாக மாற்றிக்கொண்டு  தவியாய் தவிக்கிறது.*

*பக்குவம் உள்ள ஆன்மா* ! 

*அபக்குவம் உள்ள ஆன்மாக்களை மேலே கண்ட சிக்கலில் இருந்து மீட்க வந்தவர்தான் பக்குவம் உள்ள ஆன்மா என்னும் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று பெயர்பெற்ற பரசுத்தமான பக்குவ ஆன்மாவாகும்* 

*ஆன்மாவின் குடும்பத்தின் உறுப்பினர்களான 12 நபர்களையும் வாடகை வீடான (ஜீவதேகம்) உடம்பையும் அழிக்காமல் அருளினால் மாற்றம் செய்து சொந்த வீடான ஆன்மதேகத்தில் வாழும் வழியைக் காட்ட வந்தவர்தான் ஆன்மஅருள் தேகம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் வள்ளலார்*

நாமும் வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து. *ஜீவதேகமான வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றி ஆன்மதேகம் என்னும் அருள்தேகத்தில் பேரின்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வோம்*

மாயையும் என்னும் மனைவியையும் கன்மம் என்னும் மனைவியையும்  அடக்கும் பாடல் !

*வள்ளலார் பாடல்!*

*பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை* *நீதான்*

*பெற்றவுடம் பிது* சாகாச் சுத்தவுடம் பாக்கி

ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன்* 

*இனிநின்*

*உபகரிப்போர்* *அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்*

*அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின்றது*  *நீ*

*அறியாயோ* என்னளவில் அமைகஅயல் அமர்க

தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ

*சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே*.! 

மேலும்...

கன்மம் எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே

*கங்குகரை காணாத கடல்போலே வினைகள்*

நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி

நடத்தினை நின் நடத்தைஎலாம் சிறிதும் நடவாது

என்முன் இருந் தனைஎனில் நீ அழிந்திடுவாய் அதனால்

இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்

இன்மையுற மாய்த்திடுவேன் *என்னையறி யாயோ*

*எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.*!

மேலே கண்ட பாடல்கள் போல் தத்துவவெற்றி என்னும் தலைப்பில் 20 பாடல்கள் ஆறாம் திருமுறையில் பதிவு செய்துள்ளார்.

படித்து உணர்ந்து தெளிவுபெற்று பயன் பெறவும்.

*ஆன்மாக்களின் வாழ்க்கை முறை குழப்பத்திற்கு அடிப்படைக் காரணம் சமயங்கள் மதங்கள் காட்டிய ஆன்மீக வாழ்க்கை  வழிமுறைகளே என்று சொல்லி குடும்பகோரத்தை நிறைவு செய்கிறார்* !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

.

ஆண் பெண் உருவம் தோன்றும் விதம்!

 *ஆண் பெண் உருவம் தோன்றும் விதம்.!* 

*வள்ளலார் பாடல்!*

*விண்ணிடத்தே முதன் *முப்பூ* *விரியஅதில்* *ஒருபூ*

*விரிய* *அதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக்*

கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே

கட்டவிழ வேறொரு பூ விட்ட *எழு பூவும்*

*பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப்*

பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம்

நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும்

நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி.!

*பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி!*(அகவல்)

*கரு உற்பத்தி*

ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும் விதம் யாதெனில்? 

*மண் நீர் அக்கினி காற்று ஆகாயம் பிரகிருதி ஆன்மா என்னும் ஏழும் கூடி சுக்கில சுரோணித சம்பந்த சேர்க்கையால்  சப்த தாதுவாய் ஒன்று சேர்ந்து சிருஷ்டிக்குக் காரணமாயின* என்கிறார் வள்ளலார்.

ஆதலால் *ஆண்பாகம் சேராது பெண் உருவப்படாது*.

*பெண்பாகம் சேராது ஆண் உருவப்படாது*

நாம் உண்ணும் உணவை ஒருமணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய  உறுப்புக்களுக்கு

(தத்துவங்களுக்கு) ஊட்டுகின்றது.மறுபடியும் இரண்டுமணி நேரத்திற்குள். மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறிக்கும் திரவத்தை *சுக்கிலமாக்கி*

( விந்துசக்தி) *இரண்டரை பாகமாக்கி கோசநுனியில் ஒன்றும்.நாபியில் ஒன்றும் பிரமந்திரத்தில் அரையும் சேர்த்து*.

மற்ற சக்தியைக் கொண்டு உடம்பில் அங்கங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ஈளை குரும்பை நகத்தூசு தொப்புள் அழுக்கு கண்பீளை முதலான அழுக்கை வெளியேற்றுகிறது.  *இவ்வாறு உட்ம்பின் செயல்பாடுகளை சொல்லி மாளாது* சுருக்கமாக சொல்லுகிறேன்..

*ஆணில் மூன்று பெண்ணில் நான்கு*

மேற்படி சுக்கிலத்தின்  செயல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே விதமானது.

ஆணின் சுக்கிலத்தில் மூன்றாவன.. *ஆகாசம்.பிரகிருதி ஆன்ம உணர்ச்சி* இவைகள் ஒருமித்துச் சுக்கிலமாகத் தடித்து கோசத்தடியில் செம்பரத்தம் பூவிதழ்போல் மூன்றும் ஒன்றாய் அடுக்கியது போல் இருக்கும்.

பெண்ணிடத்தில் நான்காவன.

*பிருதிவி(மண்)* *அப்பு(நீர்)* *தேயு(உஷ்ணம்)* *இயமான்ன்*

*(காற்று)* ஆக நான்கும் ஒருமித்தப் பல்லி முட்டைபோல் நான்கு பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் பெண்ணின் யோனிக்குள் இருக்கும். 

*ஆணும் பெண்ணும் உணர்ச்சியுடன் உடல் உறவு கொள்ளும்போது ஆணிடத்தில் உள்ள ஆகாசம் பிரகிருதி ஆன்மா ஆகிய மூன்றும் பெண்ணின் சுரோணித பையில் சென்றுவிடும்*.

*பெண்ணிடம் உள்ள பிருதிவி அப்பு தேயு இயமானன் என்னும் நான்கும்  உணர்ச்சியால் வெளிப்பட்டு மேலே சொல்லியுள்ள ஆணிடம் உள்ள  மூன்றும் பெண்ணிடம் உள்ள நான்கும் ஆக ஏழு விதமான அணுக்களும் கூடி ஒருமித்துச் சுக்கிலம சுரோணித சம்பந்தப்பட்டு பெண்ணின்  கருவறைக்குள் சென்று பிண்டமாகும்.*.

இதற்கு சப்த தாது என்று பெயர் அதாவது. *தோல்.

அஸ்தி.தசை.

மூளை.சுக்கிலம்.இரத்தம்.இரசம் ஆக ஏழும் சேர்ந்து உடம்பு உற்பத்தியாகிறது*.

நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

*ஆன்மா என்னும் ஒளி ஆணின் சுக்கிலத்தில் வந்து தங்கி.பெண்ணின் சுரோணிதத்தில் கலக்கும் போது உயிர் என்னும் ஜீவன் ஏழுவித அணுக்களின் கூட்டுக் கலவையால் பெண்ணிடத்தின் கருவறையில் தோன்றுகிறது*. 

*ஆன்மா என்னும் ஒளியும்* *உயிர்  என்னும் ஜீவ ஒளியும்* சேர்ந்து இயங்குவதற்கும் இவ்வுலகில் வாழ்வதற்கும்.

அனுபவிப்பதற்கும் பஞ்சபூத அணுக்களால் கட்டிக் கொடுக்கப்படுவதுதான்

உடம்பு என்னும் வீடாகும்*

பெண்ணின்  கருவறையில் பயங்கர இருட்டுல் தான் ஏழுவிதமான அணுக்களைக்கொண்டு உடம்பு பின்னப்படுகிறது

*ஆண் பெண் புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாகப் புணர்ந்தால் ஆணும்.இடது புறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண்  குழந்தையும் பிறக்கும் என்கிறார் வள்ளலார்*

கருவறையில் *ஐந்தமாதம் வரையில் குழவியாயிருக்கும்காலம் ஒன்று*. *அவயங்கள் உற்பத்திகாலம் ஒன்று*. *பிண்டம் வெளிப்படும் காலம் ஒன்று*. *குழந்தைப்பருவம் ஒன்று*. *பாலப்பருவம் ஒன்று*. *குமாரப்பருவம் ஒன்று*. *விருத்தப்பருவம் ஒன்று* *ஆக ஏழு பருவங்கள் உண்டு.*

*இவ்வாறே தாவரம் முதல் எல்லாப் பிறவிகளுக்கும் பொருந்தும்* 

*சிருட்டி ஞாயம்* என்ற தலைப்பில் வள்ளலார் மிகத்தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்.

சுருக்கமாக சொல்லியுள்ளேன்.

சுத்த சன்மார்க்கம் என்ன சொல்கிறது? 

மனிததேகம் எடுத்த பஞ்சபூத ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதே சுத்தசன்மார்க்கம் சொல்லித்தரும் ஆன்ம இன்ப லாபமாகும்.

நம்மை படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று  ஜீவ தேக அணுக்களை(அழிக்காமல்) கரைத்து பிரித்து வெளியேற்றிவிட்டு  ஆன்மாவை அருள்தேகமாக மாற்றிக் கொள்வதே சுத்த சன்மார்க்கம் சொல்லித்தரும் சாகாக்கல்வி என்பதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896