ஞாயிறு, 26 நவம்பர், 2023

அன்னதானத்தின் அருமை !

*அன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை.*

 அன்னதானத்தைப் பற்றி 
*“நீங்கள்அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்”.*

கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் *அன்னதானம்* செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே.

ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள்.
உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான்.
அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது”

- என்றார் பகவான்

பசியோடிருக்கும் ஒருவனுக்கு நிறைய, அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் -போதும் என்று சொல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்குப் மீண்டும் பசிக்கவே செய்யும்.
பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.

அதனால்தான் ஔவையார்
*“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்*
*இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்*
*என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே*
*உன்னோடு வாழ்தல் அரிது. “* - என்றார்.

நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.
வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது.

அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம்.

ஆதலால் நண்பர்களே, அன்னதானம் செய்வதை நம் வாழ்வின் கடமையாக ஏற்போம். நம்மால் முடிந்த அளவுக்குப் பசி்ப்பிணியாற்றுவோம்.

*''தானத்தில் சிறந்தது அன்னதானம்!''*

கல்வி, வீரம் மற்றும் காருண்யத்தில் சிறந்து விளங்கிய போஜராஜன் ஆண்டு வந்த காலம் அது...

ஏழை விவசாயி ஒருவர், தன் மகளை மணமுடித்து கொடுக்க பொருள் வசதி இல்லாததால், மன்னர் போஜராஜனிடம் பொருள் உதவி பெற நினைத்தார். 

அதனால், தன் மனைவியிடம் வழியில் சாப்பிடுவதற்கு ரொட்டி செய்து தருமாறு கேட்டார். 

அவர் மனைவியும், நிறைய ரொட்டிகளை செய்து கொடுக்க, அவற்றை பெற்று, புறப்பட்டார். 

வழியில் பசி ஏற்படவே, குளக்கரையில் அமர்ந்து, ரொட்டி பொட்டலத்தை பிரித்தார். 

அப்போது, குட்டிகளை ஈன்றிருந்த பெண் நாய் ஒன்று, வாலை ஆட்டியபடி, அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தது.

அதைப் பார்த்த விவசாயி, 'ஐயோ பாவம்... ரொம்ப பசி போல...' என்று எண்ணி, ஒரு ரொட்டியை எடுத்து, நாயின் முன் போட்டார்.

அதை, 'லவக்'கென்று விழுங்கிய நாய், பசி அடங்காமல் மேலும் அவரைப் பார்க்க, இன்னொரு ரொட்டியை கொடுக்க, அதையும் விழுங்கியது நாய். 

இப்படியே, எல்லா ரொட்டிகளையும் நாய்க்கு போட்டவர், 'பாவம்... வாயில்லா ஜீவன்; சாப்பிட்டு, எவ்வளவு நாள் ஆயிற்றோ... நாம், இன்று ஒருநாள் சாப்பிடாவிட்டால், என்ன குறைந்துவிட போகிறது...' என்று எண்ணியபடி தன் பயணத்தை தொடர்ந்தார்.

அரண்மனையில் மன்னனை சந்தித்து, 'மன்னா... என் மகளின் திருமணத்திற்காக தங்களிடம் பொருள் உதவி பெற வந்துள்ளேன்...' என்றார் விவசாயி. 

'குடியானவனே... நீ ஏதாவது புண்ணியம் செய்திருக்கிறாயா...? சொல்... அந்த புண்ணியத்தின் எடைக்கு எடை தங்கம் தருகிறேன்...' என்றார், போஜராஜன்.

சில வினாடிகள் யோசித்து, பின், 'மன்னா... நான் புண்ணியம் ஏதும் செய்ததாக நினைவில்லை; ஆனால், வரும் வழியில், ஒரு நாய்க்கு சிறிது ரொட்டி கொடுத்தேன், அவ்வளவு தான்...' என்றார்.

'சரி... அப்புண்ணியத்தை, இதோ இந்த தராசின் ஒரு தட்டில் வைத்ததாக கற்பனை செய்து கொள்...' என்று கூறி, தராசை காட்டினார் போஜராஜன்.

அவ்வாறே விவசாயி கற்பனை செய்ய, மறு தட்டில் பொற்காசுகளை போட்டனர், அரண்மனை பணியாளர்கள். 

தட்டு, அசையாமல் நிற்கவே, மேலும் போட, அப்போதும் தட்டு நகரவில்லை. கஜானாவே காலியாகியும், தராசு தட்டுகள் சிறிது கூட கீழிறங்கவில்லை.

அதிர்ந்து போன அரசர், கைகளை கூப்பி, 'ஐயா... தாங்கள் யார்?' என, பணிவாக கேட்டார்.

'மன்னா... நான் சாதாரண ஏழை விவசாயி; என் பட்டினியை பொறுத்து, பசியோடு இருந்த நாய்க்கு, சில ரொட்டிகளை போட்டேன்; வேறெதுவும் செய்யவில்லை...' என்றார்.

கண்கள் கசிய. 'ஐயா... தாங்கள் செய்தது அளக்க முடியாத புண்ணியம்; இதோ, அப்புண்ணியத்திற்கு ஈடாக என் ராஜ்ஜியத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார், போஜராஜன்.

ராஜ்யத்தை மறுத்து, மகள் திருமணத்திற்கு தேவையான பொருளை மட்டும் பெற்று, நன்றி செலுத்தி சென்றார், விவசாயி.

*பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை.* அதனால், இயன்றவரை, தேவையானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்! 

*'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...'* என்றும், *'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...'* என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.

அன்னதானத்தின் சிறப்பு பற்றி மரணத்தை வென்ற மாபெரும் சித்தர், ஜீவகாருண்ய வள்ளல் ,ஒளிஉடம்பு பெற்ற மகான் ஆசான் இராமலிங்க சுவாமிகள் கூறுவது

*கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி*
*கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி*
*வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி*
*வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து*
*பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து*
*பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு*
*தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்*
*தயவில்லார் சத்தியமாய் முக்தியதை யடையார்."*

-ஆசான் வள்ளலார்-

-திருவருட்பா (இறவா நிலை)-

*இக் கவியின் சாரம்*
*************************

தான் செய்த பாவங்கள் நீங்குவதற்காக கங்கை, காவிரி இன்னும் அநேக புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவம் தீரும் என்று நினைப்பவர்கள் உண்டு. 

பெருமைக்குரிய கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்துவந்தால் இறையருள் பெருகும் என்று நினைப்பவர்களும் உண்டு. 

மேலும் விரத அனுஷ்டானம் கடைபிடித்து பட்டினி கிடந்து உடம்பை வருத்தி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. 

மேலும் அநேக வேதங்களில் சொல்லப்பட்ட வேள்விகள் செய்து அதன்மூலம் கடவுளின் ஆசி பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. 

இன்னும் சிலர் அந்தணர்களாகிய வேதியர்களுக்கு அவர் விரும்புகின்ற அனைத்தும் அள்ளித்தந்து இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. 

மேலும் பசுவை பூஜித்தும் அதனுடைய கழிவைப் பருகி இறையருள் பெறலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. மேலே சொல்லப்பட்ட அத்தனை கருத்துக்களையும் பின்பற்றி நடந்தபோதிலும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றி வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாவிட்டால் எந்த வகையிலும் ஆன்மலாபம் பெறமுடியாது என்பது அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய ஆசான் இராமலிங்கசுவாமிகளின் உபதேசமாகும். 

ஆன்ம லாபம் பெற விரும்புகிறவர்கள் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

*ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வோம் இறைவன் அருள் பெறுவோம்...✍🏼🌹*

திங்கள், 20 நவம்பர், 2023

வாழ்க்கை மாற்றம் !

*படித்ததில் திகைத்தது..!!*

இன்னும் 10 வருடத்தில் எந்தத் தொழிலும் இருக்காது...

கூர்ந்து கவனித்துப் படியுங்கள்...

புரியும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று...

தவறாமல் படியுங்கள்...

GOLDEN AGE COMING SOON?

2025 இல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?

என்னென்ன தொழில்கள் இருக்காது ??

நிலைமை இப்படியே தொடரும் னு எதிர்பார்க்கறது தவறு, நாம தான் நம்மள மாத்திக்கணும்...

1998 இல் தொடங்கின Kodak (Photo) நிறுவனம், ஒரு லட்சத்து எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கைப் போடு போட்டது...

இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்லை...

வெள்ளை பேப்பர்ல பிரிண்ட் எடுத்து தான் போட்டோ பார்க்க முடியும் அது ஆனால் இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும் னு அவங்க நினைக்கவே இல்ல...

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அது தான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்...

தெருவுக்கு தெரு முளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர், வாக்மேன், டிவிடி பிளேயர் என சொல்லிக் கொண்டே போகலாம்...

குண்டு பல்பும், டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்போ LED பல்பு தான்...

எதனால ? ஏன் இப்படி னு கேட்டால்?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence...

சிம்பிளாக சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள்...

மனித மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்...

உதாரணத்துக்கு சொல்லணும்னா..

சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வச்சிக்காமல், 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக் கொடுக்குது...கமிஷனோட... இல்லீங்களா..?

Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வச்சிக்காமல், இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...

இந்த மாதிரி Software Tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களைப் பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தைச் சொல்லலாம்...

உங்களுக்கு ஒரு சட்டச் சிக்கல் வருது...

என்ன பண்றது னு தெரியலை...

என்ன செய்வீங்க?

ஒரு நல்ல வக்கீலாகப் பார்த்து..யோசனை கேட்பீங்க...

சிக்கலோட தீவிரத்தைப் பொறுத்தோ அவரோட பிரபலத்தைப் பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய பீஸ் வாங்குவாரு...

இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ?

உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் டைப் பண்ணின உடனே, Section-னோட சரியான விவரங்களை Probabilities-டன் அந்தக் கம்ப்யூட்டர் கொடுத்தா? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலை ல துண்டைப் போட்டுக்கிட்டு தானே போகணும்...

வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாகச் சொல்லும்...

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத் தான் செஞ்சுகிட்டு இருக்கு...

ஒரு லாயரால் அதிகபட்சம் 70% தான் ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு சொல்ல முடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாமல் போய்டுவாங்க...

அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம் தான்...

ஆடிட்டர்கள் வேலையை Cleartax, Taxman போன்ற இணையத்தளம்...

டாக்டர்கள் வேலையை Ada app!...

ப்ரோக்கர்கள் வேலையை Magic Bricks, Quickr, 99acres, இணையத்தளம்...

கார் விற்பனையை carwale, cars24 இணையத்தளம்...

என சேவை இலவசமாக தருகின்றன...

UBER OLA வந்த. பிறகு சொந்தக்கார் தேவையில்லை...

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணி வரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்...

நெட்பிளிக்ஸ் வந்தப் பின் மேற்கத்திய நாடுகளில் தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை...

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS App மூலம் எடுத்துக் கொள்ளலாம்...

80% மேலான சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை...

கம்ப்யூட்டரே பார்த்துக்கும்...

'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பிழைக்க முடியும்...

2025 இல் Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்...

2023 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது...

அதோட ரிசல்ட் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...

ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்...

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இது தான்...

யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்க வேண்டிய தேவை இருக்காது...

'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும்...

பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு இடத்துக்குப் போகணும் னா...

உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...!

அடுத்த இரண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானாக ஒரு கார் வந்து நிற்கும். நீங்க போக வேண்டிய இடத்துக்கு சமர்த்தாக கொண்டுப் போய் விட்டுடும்...

கிலோமீட்டருக்கு இவ்வளோ னு நீங்க காசு கொடுத்தால் போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்...

இதனால என்னவாகும் என்றால்...

அடிக்கடி தேவைப்படாமல் பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர் னு ஒருத்தனும் இருக்கமாட்டான்...

சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம்...

'Accident' ரொம்ப குறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் கனரக வாகனங்களின் விற்பனை 90% கும் கீழே போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலைப் போகும்...

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்டில் தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும்...

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் தான். இப்போதே கூகுளுக்கு நீங்கள் எங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை, நீங்கள் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானம் செய்வது கூகுள் தான்...

எல்லாமே மின்சாரத்தில் தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியைக் கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10 -15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்...

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்க னு நீங்க நினைச்சால்..?

உங்க நினைப்பை மாத்திக்குங்க...

இன்னைக்குப் பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வைக்கப் போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்...

குறிப்பாக சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்கபடுற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா?

இல்லனா கூகுளைக் கேளுங்க...

அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு...

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்...

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்...

சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப் போய் பரவி வாழும் நிலை உருவாகும்...

வீட்டுப் பக்கத்திலேயே Green House வைச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்...

விவசாயம்..

இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்...

நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நிலைமை வந்துடும்...

இன்னும் சொல்லப் போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்...

விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு...

காற்றுல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ...

Moodies' ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை Scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...

2022 ல நீங்க பொய் சொல்றீங்களா, இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும்...

யாராலயும் ஏமாத்த முடியாது...

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளைச் செய்கிறது...

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012 ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க...

Tricoder - X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்டுக்கு வருது. உங்க செல்போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும்...

உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சுக் காற்றை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிடும்...

அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி...

டாக்டர்கள் க்ளினிக் வைக்கத் தேவையில்லாமல், Online -ல யே ஒரு Op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத் தான் Hospital...

மாற்றம் ஒன்றே மாறாதது...

மாற்றத்திற்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்...

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்குச் சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்...

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்தப் பத்தாண்டுகளில் நடக்கும்...

சந்திக்கத் தயாராவோம்.
எதிர்காலம் நம் கையில் இல்லை...

கடந்தக் காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா...

நான் படித்ததில் திகைத்த பதிவு

சனி, 18 நவம்பர், 2023

மூன்று வகை ஆன்மாக்கள்!

*ஆன்மாக்கள் மூன்று வகைப்படும்!*

எவ்வாறு எனில்? 

1,*பக்குவஆன்மா !*

2, *பக்குவா அபக்குவா ஆன்மா!*

3, *அபக்குவ ஆன்மா !*
 1,*தாவரம்,ஊர்வன,பறப்பன,நடப்பன யாவும் அபக்குவ ஆன்மாக்கள்,*

2,*அசுரர்,தேவர் பக்குவாஅபக்குவ ஆன்மாக்கள்*!

3,*மனிதர்கள் பக்குவ ஆன்மாக்கள்!* 

*மேலே கண்ட மூவகை பிறப்புகளிலும் பக்குவம்,பக்குவாபக்குவம், அபக்குவம் என மூன்று குணமுள்ள பிறப்புகள் உள்ளன.*

*அதேபோல் உயர்ந்த மனித பிறப்புகளிலும்  மூவை குணமுள்ள ஆன்மாக்கள் உள்ளன*

*தாவரம், ஊர்வன, பறப்பன, நடப்பன,அசுரர்,
தேவர்,
மனிதர்* போன்ற ஏழு வகையான பிற்விகளிலும்,*ஆன்மாக்களுக்கு உயிர் உடம்புகள் கொடுத்து, பல கோடி பிறவிகள் எடுத்து எடுத்து வாழ்ந்து வாழ்ந்து இறந்து இறந்து, பிறந்து பிறந்து இறுதியாக உயர்ந்த அறிவுள்ள மனிதப்பிறப்பு கிடைத்துள்ளது,*

*ஆகையினால் இந்த மனிதப்பிறப்பு லேசில் கிடைத்தது அல்ல,இந்த மனிதப் பிறப்பு போனால் மீண்டும் இந்த மனிதப்பிறப்பு கிடைக்கும் என்பது உறுதிஅல்ல என்கின்றார்!*

*இந்த மனிதப் பிறப்பு கொடுத்ததின்  நோக்கமே ஆன்மாக்கள் தன்னை அறிந்து தன்னை அனுப்பிய தன் தலைவனை அறிந்து தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று,மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழவேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுபெற்ற மனிதப்பிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது*

*மனிதர்கள் இதுவரையில் மரணத்தை வெல்ல முடியாமல் வாழ்வதற்கு காரணம் சமயம் மதங்களின் பொய்யான கடவுளின் கொள்கைகளாகும்* 

*வள்ளலார் பாடல்!* 

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே.! 

என்ற பாடலின் வாயிலாக சமயங்கள் மதங்கள் எல்லாம் உண்மையான கடவுள் யார்?* தெரியாமல்,*பொய்யான தத்துவக் கடவுள்களை அறிமுகப்படுத்தி அக்கடவுள்களுக்குண்டான ஆலயங்களை,சர்ச்சுகளை,மசூதிகளை,  பிரமீடுகளை அமைத்து வைத்து,மனிதர்களை பேய்பிடிப்புற்ற குரங்குகள் போல் ஆட்டம் ஆட வைத்து அலைய விட்டு விட்டார்கள், மேலும் தெய்வங்கள் பெயரால் உயிர்கள் பல பேதமுற்று போரிட்டு சண்டைப்போட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை என்கிறார் வள்ளல்பெருமான்*

மேலும் *ஒருபாடல்!*

கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
கூவுகின்றார் *பலன்ஒன்றும் கொண்டறியார்* வீணே

நீறுகின்றார் *மண்ணாகி நாறுகின்றார்* அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்

ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்கு திருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே

தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 

*என்ற பாடல்வாயிலாக எளிய தமிழில் பொய்யான சமயங்கள் மதங்களை சாடுகின்றார் இவைபோல் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.*

*ஏன்? எதற்காக இவற்றை எல்லாம் சொல்லி விளங்க வைக்கின்றார் என்றால், உண்மையான கடவுளை நேரிடையாக அறிந்து தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலைஅறிந்து அம்மயமாகி ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று,தான் வாழ்ந்து வந்த வழிமுறைகளைக் காட்டி,அவ்வாறே மனிதர்கள் மேல்நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆன்மநேய உரிமையுடன் தெரிவிக்கின்றார்*

*வள்ளலார் கண்ட உண்மைக் கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி! என்னும் கடவுளாகும், அக் கடவுளுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. அழிவும் இல்லை எக்காலமும் நிலையானது*

*வள்ளலார் பாடல்!*

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கை இல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புற வேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும் ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

*வள்ளலார் இவ்வளவு சொல்லியும் மனித ஆன்மாக்கள் ஏன் ? மேல்நிலைக்கு செல்லாமல் இருக்கும் காரணத்தையும் சொல்லி புரிய வைக்கின்றார்* 

*ஆன்மாக்களின் நிலை !* 

*ஆன்மாக்களை ஆணவம், மாயை, கன்மம், என்கின்ற மூன்று  மலங்கள் கவ்விக் கொண்டுள்ளன என்று சமயங்கள் மதங்கள் சொல்லுகின்றன,ஆனால் வள்ளல்பெருமான் அவர்கள் ஆணவம்,மாயை,மாமாயை,பெருமாயை,கன்மம் என்கின்ற ஐந்து மலங்கள் ஆன்மாவைக் கவ்விக் கொண்டுள்ளன என்று சொல்லுகின்றார்*

*ஆன்மாக்களை  ஐந்து மலங்கள் பற்றி கொண்டு உள்ளதாலும், அதற்கு மேலும் சமயங்கள் மதங்களின் கலை உரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டதாலும் அறியாமை, அஞ்ஞானம் என்னும் ஏழு வகையான அழுத்தமான திரைகள் ஆன்மாவைத் தெரிந்து கொள்ள முடியாமல்  மறைத்து கொண்டுள்ளன, அதனால் மனித உடம்பில் சிரநடுவில் உள்ள ஆன்மாவைத் தெரிந்து கொள்ள முடியாமல் மூடமாக உள்ளார்கள் என்கின்றார்*

*ஆன்மாவைத் தெரிந்து கொண்டால் மட்டுமே அருளைப் பெற்று மரண்தை வெல்லமுடியும் எனபதை தெரியப் படுத்துகின்றார் ஆன்மாவைத் தெரிந்து கொள்ளும் சுத்த சன்மார்க்க ஜீவகாருண்ய ஒழுக்க நெறியும் சாகாக்கல்வி கற்கும் வழிமுறைகளையும் சொல்லித் தந்துள்ளார் இவை யாவும் ஆறாம் திருமுறை திருஅருட்பாவில் தெளிவாகச் சொல்லி உள்ளார்*

*பக்குவ ஆன்மா !*

*வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை  முழுமையாக ஏற்று அவ்வாறு பின்பற்ற தொடங்கும் ஆன்மாக்கள் எல்லாம் அறிவு தெளிவுள்ள பக்குவம் உள்ள ஆன்மாக்களாகும்*

*பக்குவாஅபக்குவ ஆன்மாக்கள்!*

*சமயங்களிலும் மதங்களிலும் மற்றும் பல மார்க்கங்களிலும் பற்று வைத்துக் கொண்டும் சன்மார்க்கத்திலும் பற்று வைத்துக் கொண்டும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை விடமுடியாமல் உள்ளவர்கள் பக்குவாஅபக்குவம் உள்ள ஆன்மார்களாகும்.*

*சமயங்கள் மதங்கள் என்பது ஏதும் அறியாமல் தெரியாமல் புரியாமல் மூட பக்தியில் மூட நம்பிக்கையில் எல்லாச் சமய மதத் தெய்வங்களையும் வணங்கி வழிபாடு செய்பவர்கள் அபக்குவ ஆன்மாக்களாகும்*

*ஆதலால் சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றும் பக்குவம் உள்ள ஆன்மாக்களுக்கு வள்ளல்பெருமான் சொல்வது யாதெனில் ? எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும்,அவர்களை நம்மவர் ஆக்கிக் கொள்ளுங்கள் என்கின்றார்,அதுவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்*

*மேலும் அவர்களுக்கு சொல்லி புரிய வைப்பது சுத்த சன்மார்க்க அன்பர்களின்  கொள்கையும், உரிமையும் கடமையும் ஆகும்* 

*சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள்!*

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் !*

*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.* 

*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.*

*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.*

*பக்குவ ஆன்மாக்கள் ஆடாமல் சற்றும் அசையாமல் வேறு ஒன்றை நாடாமல் பொய் உலகை நம்பாமல்,வாடாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்கொண்டு மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்த சன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*

புதன், 15 நவம்பர், 2023

விபூதி பற்றிய விரிவான செய்திகள்!

*விபூதி பற்றிய விரிவான செய்தி.*
===============

*பேரன்பு மிக்க சன்மார்க்க சான்றோர் பெருமக்களே,*

🔥🔥🔥🔥🔥🔥🔥

 *சமீப காலமாக நமது சுத்த சன்மார்க்க சங்க அமைப்புகளுக்குள்ளே*
 *ஒரு மிகப்பெரிய* *விவாதம் நடந்து வருகிறது*

🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
*அதுதான் விபூதி பற்றியது.*

ஒரு சாரார்* *வள்ளலாருக்கு விபூதி இட வேண்டும் என்றும்*

 *வேறொரு சாரார் வள்ளலாருக்கு விபூதி தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.*

🎪🎪🎪🎪🎪🎪🎪
 *இது தற்பொழுது விஸ்வரூபம் எடுத்து சங்கங்களின் பிரிவினைக்கு இதுவே ஒரு காரணமாக அமைந்துவிடும் போல தோன்றுகிறது.*
💡💡💡💡💡💡💡
 *இதற்கு வள்ளல் பெருமான் திருவருட்பா மூலம் நமக்கு என்ன தெளிவை தருகிறார் என்பது பற்றி சிந்திப்போம்.*

🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
*துவக்க காலத்தில் வள்ளல் பெருமானும் திருநீறு* *அணிந்திருக்கிறார்.*
 *அதை சார்ந்து பல* *பாடலும் எழுதி* *இருக்கிறார்.*

 *திருநீறு அளி த்து பலருக்கு நோய்களையும் குணமாக்கி இருக்கிறார் என்பது நமக்கு வரலாற்றுச் சான்று.*

 *வள்ளல் பெருமானும் திருவருட்பா இரண்டாம் திருமுறையில்*💥   *சிவ*
 *புண்ணிய  தோற்றம்* 💥 *என்ற தலைப்பில் பத்து பாடல்களை* *பாடியுள்ளார்.*

*இதில் திருநீறிடாதவர்களை வள்ளல் பெருமான் கடுமையாக விமர்சித்தே பாடி இருப்பார். கடவுள் நீரிடா கடையறை, போற்றி நீரிடா* *பிழையரை, தெய்வ நீரி டா சிறியரை, தூய நீரிடா பேயர்களை, நல்ல நீரிடா நாய்கள், அருள் செய் நீரி டார் அமுதம் எனக்கு ஈடினும், முக்தி நேரிடார் முன் கையால்* *தொடினும், இனிய நீரிடார் ஈனநாய் புலையர், நிலைகொள் நீரிடா புலையர்,*

 *என பலவாறு திருநீர்  அணியா தவர்களை பெருமான் விமர்சனம் செய்து* *பாடியிருப்பார்கள்.*

 *அதேபோன்று திருநீறிடும் அன்பர்களை கண்டால் எந்த அளவிற்கு போற்றி ட வேண்டும் என்பதையும் பாடி இருக்கிறார்கள்.*

 *இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது* *என்னவென்று சற்று ஆராய்ந்து பார்த்தால்,*
 *ஒரு சமயத்தில்* *ஒருவருக்கு பற்று அதிகமாக இருந்தால்* *அதற்கு* *எதிரானவற்றையெல்லாம் தவறாக தான் நினைக்கத் தோன்றும்.*
 *அதே கருத்தில்தான் வள்ளல் பெருமானும் இந்த பாடலை* *பாடியுள்ளார்கள் என்று நாம் கருதத்* *தோன்றுகிறது.*
 *எனவே நமக்கு எந்த சமய பற்றுகளும் கூடாது என்பதை தான் இது உணர்த்துவதாக** *உள்ளது.*

*இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ந் தற்று,*
💥💥💥💥💥💥💥
 *என்பது உலகப் பேராசானின் திருக்குறள்.*

 *வள்ளல் பெருமானுக்கு திருக்குறளின் சாராம்சங்கள் அனைத்தும் அத்துபடி. அப்படி இருக்க திருநீர் இடா தவர்களை ஏன் இப்படி விமர்சிக்கிறார் என்ற சூழலை நாம் சற்று சிந்தித்தால், நமக்கு எந்த சமயத்தின் மீதும் பற்று கூடாது என்பதே உணர்த்துவதாக மீண்டும் மீண்டும் நாம் உணர முடிகிறது.*

 *திருநீறு என்பது சைவ சமயத்தின் உயர்ந்த புனித நெறி குறியீடு.*
💥💥💥💥💥💥💥💥
 *ஆனால் சுத்த சன்மார்க்கத்திற்கு அனைத்து சமய நெறிகளையும் நாம் கடந்து ஆக வேண்டும்.*

 *இதை வள்ளல் பெருமான் அகவலில் ல் மிகத் தெளிவாக சொல்லுகிறார்.*

 *சாதியும் மதமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி என்று.*

 *இதற்கு மேல் நாம் சமய பற்றுகளை விட  விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன்.*

 *சரி ஆரம்ப காலத்தில் வள்ளல் பெருமான் ஏன் சைவ சமயத்தை சார்ந்து சுத்த சன்மார்க்க கருத்துக்களை கூறியிருக்கிறார் என்பது பற்றி நாம் சற்று சிந்திப்போம்.*

*உலகத்தில் தோன்றிய சமயங்களில் கொல்லா நெறியை நேரடியாக ஏற்பது இரண்டு பிரிவு மட்டுமே.*

 *ஒன்று சைவ நெறி.   மற்றொன்று சமண மதம்.*

 *வைணவம் ஏற்றாலும் கொலையை அது தவறு என்று கூறவில்லை. இதற்கு எடுத்துக்காட்டு பாரதப்போராகும்.*

 *புத்த மதமும் அன்பை போதிக்கிறது. ஆனால் முழுமையான கொல்லா நெறியில் அது ஏற்கவில்லை.* *இதற்குபுத்தர் பெருமானின் வாழ்க்கையின் முடிவே நமக்கு  சாட்சியாக உள்ளது.*

 *சமண மதமும் கொல்லா நெறியை போற்றி புகழ்ந்து ஏற்றுக் கொள்கிறது, ஆனால் அது கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது இல்லை.*

 *இருப்பதில் சைவம் தான் கொல்லா நெறியை  ஏற்றுக் கொள்வதும், கடவுளைப் பற்றிய சிந்தனையும், ஆன்மா பற்றிய விளக்கமும், மறுபிறவிகள் பற்றிய செய்தியையும் உள்ளடக்கியதாக உள்ளது.*

 *இதன் அடிப்படையில் நாம் சற்று உற்று நோக்கினால், சுத்த சன்மார்க்கத்திற்கு மிக அருகில் உள்ளது சைவ சமய அனுபவம் ஒன்றே.*

 *இதனை கருத்தில் கொண்டு  சு த்த சன்மார்க்க நெறியை துவக்க காலத்தில் சைவ நெறியை சார்ந்து கூறியுள்ளார்கள் என்று கருதத் தோன்றுகிறது.*
💡💡💡💡💡💡💡
 *நான்காம் திருமுறையில் பிரசாதம் மாலை என்ற தலைப்பில் பத்து பாடல்களை வள்ளல் பெருமான் பாடியிருக்கிறார்கள்.*

 *இந்தப் பாடல்களில் இறைவனிடம் தான்* *திருநீரைக் கேட்டதாகவும்*
 *அதற்கு இறைவன்* *அவற்றையெல்லாம் நாம் உமக்கு முன்னரே* *கொடுத்து விட்டோம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
 *இப்பொழுது செஞ்சுடர் பூ, தகுசுடர் பூ, மண ச்செழும்பு, அருள் மணப்பூ, அருண் மணப்பபூ, செழுமண ப்பூ, கொளு மணப்பூ என்ற அனுபவ நிலைகளை தந்ததாக கூறியுள்ளார்.*
💥💥💥💥💥💥💥
 *வள்ளல் பெருமான் கேட்ட திருநீருக்கு பதில், இது போன்ற அனுபவ நிலைகளை வள்ளல் பெருமானுக்கு* *இறைவன் தந்ததாக உறுதிப்பட கூறுகிறார்.*

💡💡💡💡💡💡💡
 *என் வடிவம் தலைப்ப ஒரு பொன் வடிவந் தரித்தே,*

 *என் முன் அடைந்து என்னை நோக்கி இளநகை செய்தருளித்*

 *தன் வடிவ திருநீற்றுத் தனிப்பை அவிழ்த்து எனக்குத்*

 *தனி சுடர் பூ அளிக்கவும் நான் தான் வாங்கி களி த்து*

*மின் வடிவப் பெருந்தகையே திருநீரும் தருதல்*

 *வேண்டுமென முன்னரது விரும்பி அளித்தனம் நாம்*

 *உன் வடிவிற் காண்டியென உரைத்தாருளி நின்றாய்*

 *ஒளிநடைஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே* .

 *உதாரணத்திற்காக இந்த ஒரு பாடலை நாம் இதில் பதிவிட்டுள்ளோம்.*

 *இந்தப் பாடல்கள் மூலம் நாம் அறிவது* *என்னவென்றால்*
 *வள்ளலார் திருநீறு பூசி நிலையை கடந்துவிட்டார் என்பதே*
 *அதாவது சைவ சமய அனுபவத்தை கடந்து, சுத்த சன்மார்க்க நெறியை முழுவதுமாக அடைந்து  விட்டார் என்பதற்கு ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம்.*

 *இதற்கு மேலும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ள ஆறாம் திருமுறை பாடலையும் பார்ப்போம்.*

 *பொடி எடுக்க போய் அதனை மறந்து மடி எ டுத்தரை யில் புனைவேன் சில் ல்லோர்*

 *தடியெடுக்க காணில் அதற்குளங் க லங்கி ஓடு வனித்  தரத்தேன் இங்கே*

 *முடி எடுக்க வல்லேனோ இறைவா நின் அ ருள் இளதே ல்முன்னே*

 *அடி எடுக்க முடியாதே அந்தோ இச்சிறி யே னால் ஆவது என்னே.*

 *இந்தப் பாடலை சற்று உள்நோக்கினால்*

 *சைவ சமயம் சார்ந்தவர்கள் மற்றும் சிவனடியார்கள் காலையில் குளித்து முடிந்தவுடன்*
 *அந்த ஈரத் துண்டு உடனையே நெற்றி மற்றும் உடலெங்கும் திருநீற்றை* *பூசிக்கொண்டு  பின்புதான் ஆடை அணிவார்கள்*

 *ஆனால் பெருமான் இந்த பாடல் குறிப்பிடுவது என்னவென்றால் "பொடி எடுக்கப் போய் மறந்து என்கிறார் "*

 *அதாவது தான் திருநீர் அணிவதை விட்டு விட்டதை அங்கே குறிப்பிடுகிறார்.*

 *அதுவும் தன் செயல் அல்ல இறைவன் செயல் என்று அடுத்த வரியிலேயே அதை குறிப்பிடுகிறார்.*

 *மேலும் வள்ளல் பெருமான் தனது சுத்த சன்மார்க்க அனுபவத்தை கூறும் பொழுது*

 *மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்ரிடாஇயல் எனக்க ளித்தனை என்று சொல்லி,*

 *தான் சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் பெற்று இறைவனுடைய ஒளி உடலை பெற்றதையும் நமக்கு குறிப்பிடுகிறார்.*

 *அப்படி ஒளி தே கம் பெற்றவருக்கு நாம் எப்படி திருநீறு அணிய இயலும்?*

*என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது*

 *இதன் அடிப்படையில் பார்த்தோமேயானால் நமக்கு ஒரு தெளிவான முடிவு தெரிகிறது.*

 *வள்ளல் பெருமானுடைய திருவருவத்திற்கு திருநீறு இடுவது அவசியம் இல்லை என்பது.*

 *ஆனால் சமய வழிபாட்டில் இருந்து வந்த அன்பர்கள் திருநீறு அறிந்து கொள்கிறார்கள்.*

 *அதை நாம் பெரிய குறையாகவோ தவறு என்றும் சொல்லிவிட இயலாது.*

 *மேலும் ஆறாம் திருமுறையில் மற்றும் ஒரு பாடலில் வள்ளல் பெருமான் ஒரு கருத்தை இங்கு பதிவிடுகிறார் அதையும் காண்போம்.*

          *திரு அருட்கொடை என்ற தலைப்பில்.*
   💡💡💡💡💡💡    

 *ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நி ன் அருளமுதெ ன்*

 *கை வரச்செய்து உ ண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்த அணிந்தாய்*

 *சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்தருளிச்*

 *தெய்வம் என்று வளர்க்கின்றார் சிற்சபையில்  நடிக்கின்றாய்.*
💡💡💡💡💡💡💡💡
*இந்தப் பாடலின் படி பொருள் பார்த்தால்* *சைவ உணவு முறையில் இருப்பவர்கள் என்னை தெய்வம் என்று வணங்கும்படி* *செய்துள்ளாய். என்று குறிப்பிட்டுள்ளார்.*
 *பொதுவாக நமது சன்மார்க்கத்தில் உள்ளவர்களில்* *பெரும்பாலானவர்கள் சைவ சமயத்தை சார்ந்து தான் வந்திருக்கிறார்கள்.*
 *சிலர் சுத்த* *சன்மார்க்கத்தை உணர்ந்து அந்த நெறியில் மேல் அனுபவத்திற்காக பயணிக்கிறார்கள்*
💥💥💥💥🎪🎪🎪💥
 *ஆனால் பலர் சைவ சமயத்தைச் சார்ந்தே இன்னும்* *இருக்கிறார்கள். அவர்கள் வள்ளல் பெருமானை தெய்வமாகவே தான் வணங்குவார்கள். என்ற நிலை இருந்து கொண்டு தான் இருக்கும் என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுவது போல் இங்கு உள்ளது.*

 *எனவே சுத்த சன்மார்க்கம் பேசுபவர்கள், மேற்படி சமயம் சார்ந்த சன்மார்க்க அன்பர்களை வேறுபாடாக கருதுதல் கூடாது.*
🎪💥💥💥💥💥🎪
 *ஏனென்றால் கொலை புலை தவிர்த்து வாழ்வதே மிகப்பெரிய வாழ்வியல் முறையாக இருக்கிறது. இந்தச் சூழலில் அவர்களை சமயத்தவர் என்று விலக்கி விட்டால் அது சரியான செயலும் அல்ல.*

 *எவ் உயிரையும் தம்முயிர் போல் என்னும் குணத்தை நாம் வருவித்துக் கொள்ள வேண்டும் என்று பெருமானார் கூறுகிறார்.*

*ஆனால் நாம் சன்மார்க்கத்துக்குள்ளேயே இரு பிரிவினராக பார்த்தால் எப்படி அந்த குணம் நமக்கு வரும்?*
💥💥💥💥💥💥💥
 *இனிமேலாவது சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் இந்த வேறுபாடுகளை கருதாது பழக வேண்டும்.*

 *சுத்த சன்மார்க்கம் பேசும் அன்பர்கள், வெறுமனே பேச்சுடன்* *இருந்துவிடாமல்,*
💥💥💥💥💥💥
 *வள்ளல் பெருமான் கூறக்கூடிய அந்த அனுபவ நிலைகளை நோக்கிச் சென்று,* *அதாவது உணவு முறை மற்றும் ஒழுக்கங்களில் எல்லாம் தீவிரமாக கடைபிடித்து, வள்ளல் பெருமான் அடைந்த சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் அடைய முயற்சி செய்தல் வேண்டும்.*
🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
 *அதைவிடுத்து வேறுபாடு பேசி, ஒருவர் வை ஒருவர்* *கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து கொள்வது* *அவ்வளவு சரியல்ல.*
 *பொதுவாக இன்று சுத்த சன்மார்க்கம் பேசுவோர் பெருமான் கூறக்கூடிய அந்த உணவு* *ஒழுக்கத்தில் இல்லை.*
💡💡💡💡💡💡
 *எனவேதான் அவர்கள் சுத்த சன்மார்க்கம் பேசினாலும் ஒருவர் கூட இதுவரைக்கும் தேறவில்லை.*

 *எனவே இனிமேல் சுத்த சன்மார்க்க ம் பேசுபவர்கள் அனுபவ நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் .*

💥🎪🎪💥💥💥💥
 *சமயத்தில் இருந்து வந்த பெருமக்கள், சமய ஈடுபாடை குறைத்துக் கொண்டு சுத்த சன்மார்க்கநெறியை போற்றி வாழ முயற்சி செய்தல் வேண்டும்.*
🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦🇻🇦
  *திருநீறு தவிர்த்து மற்ற புறச் சின்னங்களை அணியாமல் இருப்பது மிகவும் நன்று.*



 *கிட்டத்தட்ட 1990 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சனை சன்மார்க்கத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் தான் இந்த கட்டுரையை அடியேன் இப்பொழுது வெளியிட நேர்ந்தது.*
💡💡💡💡💡💡💡
 *நீங்களும் இதுபோன்று திருவருட்பா* *ஆதாரத்துடன்*
 *வெளியிடலாம்*

  *நமது கருத்துப் பரிமாற்றம்அனைவருக்கும் ஒரு பொதுவான அறிவு விளக்கத்தை தரும்படி இருக்க வேண்டும். வீண் வாதத்திற்காக எதையும் எழுதுதல் கூடாது.*

 *அன்புடன் வள்ளலார் வருகை சத்தியமூர்த்தி.*

💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

செவ்வாய், 14 நவம்பர், 2023

ஞானம் மூவகைப்படும் !

*மூவகை ஞானம்!*

*ஞானமென்பது மூன்று வகைப்படும்.!*

*அவை உபாயஞானம், உண்மைஞானம், அனுபவஞானம். இவற்றின் தாத்பர்யம்:*
 *நக்ஷத்திரப்பிரகாசம் போல் தோன்றிய ஜீவஅறிவே உபாயஞானம்;* *சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்மஅறிவே உண்மைஞானம்;* 

*எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுளறிவே அனுபவஞானம்* 

*ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது இந்திரியக்காட்சி, இந்திரியஅறிவு* 

*கூடமாக அறிதல் கரணக்காட்சி, கரணஅறிவு;*

*இன்னதென்று தெரிதல் ஜீவக்காட்சி, ஜீவஅறிவு;*

*எதையுந் தானாக அறிதல் ஆன்மக்காட்சி, ஆன்மஅறிவு;*

*இதற்குத் தோன்றுமறிவு 1, தோற்றுமறிவு 1, தோற்றுவிக்குமறிவு 1, பதியறிவு 1.*

*ஆதலால், ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவா; அதை அனுபவிக்க வேண்டுமென எழுந்தது ஆசை; அதன் மயமாதல் காமம்; அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம்;* 

*எந்த வஸ்துவிடத்திலும் மோகமாதிக ளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும்.*

*அவாமாத்திரம்
இந்திரியக்காட்சி என்பது ஒரு வஸ்துவின் நாமரூபமின்றிக் காணுதல்;* 

*கரணக்காட்சி என்பது அந்த வஸ்துவைப் பற்றல்; அதை அனுபவிக்கவேண்டு மென்கிற சித்தவிருத்தி உண்டாகிறது ஆசை என்னும் காமம்;* 

*அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகம்.*

*ஆதலால் எந்த வஸ்துவினிடத்திலும் மோகம் காமம் முதலியவை யின்றி அவா மாத்திரமா யிருத்தல் வேண்டும்.*
 *சன்மார்க்கத்தில் அவாவும் ஏகதேசத்திலும் கூடாது.*

*ஞான வகை!*

*உபாய ஞானம் - ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.*

*உண்மை ஞானம் - ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.*

*அனுபவ ஞானம் - கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.*

*உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு.*

*உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு.*

*அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு.*

*ஆகையால் கடவுளை ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.*

*கடவுள் அறிவை தெரிந்து கொள்ள மேலே கண்ட மூன்று வகையான ஞானம் படிப்படியாக அறிந்து தெரிந்து வாழ்க்கையில்  கடைபிடிக்க வேண்டும்* 

*வள்ளலார் பாடல்!*

அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே

தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம்என் றறியாயோ மகளே.!

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
கனுபவ மாகின்ற தென்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.!

அறிவில் அறிவை அறியும் பொதுவில்
ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்

செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி
செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி.! 

*மேலே கண்ட பாடல்களில் அறிவின் விளக்கத்தை தெளிவாகத் தெரியப்படுத்துகின்றார் வள்ளல்பெருமான்.*

*இதற்கு ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாற வேண்டும். அவ்வாறு மாறினால் மட்டுமே கடவுள் அறிவை அறிந்து அருளைப் பெற முடியும்.*

தொடரும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் *சுத்தசன்மார்க்க சுடர் முனைவர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9864939896*

வியாழன், 9 நவம்பர், 2023

சன்மார்க்க கொடி விளக்கம் !

*சன்மார்க்க கொடி கட்டுதல்!*

*22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள்7 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை காலை் 8 மணிக்கு முதன் முதலில் சன்மார்க்க கொடியை கட்டிய பின்புதான் நீண்ட பேருபதேசம் செய்கின்றார்*

*இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவசியம், கொடியை ஏற்றி உபதேசம் செய்ய வில்லை. கொடியை கட்டிக் கொண்ட பின்புதான் உபதேசம் செய்கின்றார்*

*கொடி சம்பந்தமான  சிற்சக்தி துதி என்னும் தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்துள்ளார்* 

*சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு சங்கங்களிலும் கொடியை ஏற்றும் போதும் ஒவ்வொரு பாடல்கள் பாடி கொஞ்சம் கொஞ்சமாக கொடியை ஏற்றி இறுதியாக கொடியின் கயிற்றைக் கட்டி ஜோதிப் பாடல்களும் மற்ற பாடல்களும் பாடி வழிபாடு செய்துகொண்டு வருகிறார்கள் அவ்வாறு செய்வது சரியா?*

*கொடியை முழுவதுமாக மேலே ஏற்றி கம்பத்தில் கட்டிவிட்ட பின்பு  வழிபாடு செய்வதே சிறந்த வழிபாடாகும்*

*வள்ளலார் கொடி கட்டிக் கொண்டேன் என்றே சொல்கின்றார்,கொடியை ஏற்றுகிறேன் என்று சொல்லவில்லை,என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்* 

*கொடியின் விளக்கம்!*

*இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.!*

*இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்:?*

*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது.இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.*

*பஞ்ச பூத உடம்பில் இயங்கி கொண்டு இருந்த ஆன்மாவை, ஜீவன் என்னும் உயிரை,மற்றும் உடம்பை அருளால் அருள் பிரகாசத்தால் அருள் உடம்பாக மாற்றிக் கொண்டார் வள்ளல்பெருமான், அதனால் திருஅருட் பிரகாச வள்ளலார் என்றுபெயர் சூட்டப்பெற்றது,அவற்றிற்குஅருள் தேகம் என்றும் பெயர். சுத்த பிரணவ ஞானதேகம் என்றும் பெயர்.*

*அதனாலே கொடி கட்டிக் கொண்டோம் என்று சின்னம்பிடி என்னும் பாடலில் தெரியப்படுத்துகின்றார்*

*வள்ளலார் பாடல்!*

*கொடிகட்டிக்கொண்டோம்என்று சின்னம் பிடி*

*கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி*

*அடிமுடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி*

*அருளமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி.!*

மேலும்.....

*தானேநான் ஆனேன் என்று சின்னம் பிடி*

*சத்தியம் சத் தியம் என்று சின்னம் பிடி*

*ஊனே புகுந்ததென்று சின்னம் பிடி*

*ஒளிவண்ணம் ஆனதென்று சின்னம் பிடி.!*

மேலே கண்ட பாடலில் சத்தியம் வைத்து தெளிவாகத் தெரியப் படுத்துகின்றார்

*கோடி சூரிய பிரகாசம் உள்ள ஆன்மா என்னும் ஒளி தேகமானது,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று அருள் ஒளி தேகமாக மாற்றம் அடைந்துள்ளது. அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறிவிட்டது என்பதாகும்.*

*வள்ளலார் பாடல்!*

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

*மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!*

*இப்போது கொடியின் வண்ணம்!*

*மேல் பாகம் மஞ்சள் நிறம் வண்ணம் கால் பாகமும், கீழ்பாகம் வெண்மை நிறம் வண்ணம்  முக்கால் பாகமும் கலந்த   இரண்டு வண்ணங்களாக கலந்து உள்ளன என்பதை தெரியப் படுத்துகின்றார்* 

*மஞ்சள் வண்ணம் அருளைக் குறிக்கின்றதுவெள்ளை வண்ணம் "அருள் பிரகாசத்தைக் குறிக்கின்றது*

*இராமலிங்கம் என்னும் பெயர் கொண்ட உடம்பு உயிர்  ஆன்மாவைத் (அடையாளம்)  தாங்கியவர்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிய அருளால், திருஅருட்பிரகாச வள்ளலாராக மாற்றிக் கொண்டார்.*

*எனவே  கொடிக்கட்டி கொண்ட படியால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம் என்று அழுத்தமாகச் சொல்லுகின்றார்* .

*சன்மார்க்க காலம் என்றால், மனிதகுலம் மரணத்தை வெல்லும் சாகாக்கல்வி கற்கும் மார்க்கமே சுத்த சன்மார்க்க காலம் என்பதாகும்* 

*ஆன்மா அற்ற, உயிர் அற்ற, உடம்பு அற்ற  அருள் ஒளி தேகமாக மாற்றிக்கொண்டு என்றும் அழியாத அழிக்க முடியாத,பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ்வதாகும்.அதன் உண்மையை வெளிப்படுத்தும் காரண காரியமாக, வெளிப்புறத்தில் அடையாள வண்ணமாக   சுத்த சன்மார்க்ககொடிகட்டிக் கொண்டதே அதன் விளக்கமாகும்*
*உதாரணம் கோழி முட்டை வடிவம்!*

*கோழி முட்டை மத்தியின் மேல்புறம் மஞ்சள் வண்ணம் உள்ளதுபோல்,கீழ்புறம் வெள்ளை வண்ணம் உள்ளது போல் அருள் தேகம் மஞ்சள் வண்ணம் கால்பாகம் வெள்ள வண்ணம் முக்கால் பாகம் கொண்டதாகும்.*

*நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியைக் கடைபிடித்து,அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக்!

அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் சுத்த சன்மார்க்கசுடர் ஈரோடு கதிர்வேல்*
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
*9865939896*