திங்கள், 24 அக்டோபர், 2016

29-10-2016,ஆம் நாள் தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள் !

29-10-2016,ஆம் நாள் தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள் !
ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமை உடைய அனைவருக்கும் தீப ஒளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள் .தீபாவளி எதற்க்காக வருகிறது என்பதை விளக்க வேண்டுமானால் கதைகளும் கற்பனைகளும் நிறைந்து உள்ளது,அவற்றிற்கு நாம் போக வேண்டாம் .நமக்கு மகிழ்ச்சித் தரும் திரு விழாவாக தீபாவளி கொண்டாடுகிறோம்.

எப்படி இருப்பினும் நாம் தீபாவளியைக் கொண்டாடுவது ''தீபத்தை'' முன் வைத்துக் கொண்டாடுகிறோம்.அந்த தீப ஒளியே உலகத்தின் முழு முதற்கடவுள் ஆகும்.அந்த ஒளிக்கு வள்ளலார் ''அருட்பெருஞ்ஜோதி '' என்று பெயர் வைத்து உள்ளார் .. அதன் அடையாளமாகத்தான் .வள்ளலார் அவர்கள்  ஞான சபையைத் தோற்றுவித்து.1872,ஆண்டு .தீப ஒளி வழிப்பாட்டை உலகிற்கு அறிமுகப் படுத்தினார் .   
அதன் அடையாளமாக நினைந்து கொண்டு தீப ஒளி அன்று நாம் அனைவரும் புத்தாடை உடுத்தி ,பட்டாசுகள் வெடித்து ,பலகாரங்கள் செய்து .உற்றார் உறவினர் ,நண்பர்கள் ,அனைவரும்  கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் உங்கள் உள்ளங்களில் நானும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகிறேன் .
ஒரு முக்கியமான வேண்டுகோள் !
அந்த தீப ஒளி அன்று ஒரு சில குடும்பங்களில்,ஏதும் அறியாத வாயில்லாத,பல அப்பாவி  உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உணவாக சுவைத்து உண்கிறோம்,அவைகள் என்ன பாவம் செய்தது !.இறைவன் படைப்பில் அதுவும் ஒரு உயிர் அல்லவா?! நாம் மகிழ்ச்சி அடைவதற்காக அதன் உயிர்களை கொள்வது கடவுள் சம்மதம் ஆகுமா ? என்பதை சிந்திக்க வேண்டும் யாரோ அறியாமல் காட்டிய வழி முறைகளை நாம் பின் பற்றி செய்து வருகிறோம் அறிவுள்ள மனிதர்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் .
இந்த தீப ஒளித்  திருநாளில் இருந்து உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருப்பதாக் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எல்லா உயிர்களும் உங்களை கடவுளாக நினைந்து கை கூப்பி வணங்கும் இதுவே நீங்கள் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும் .
உங்கள் அனைவரையும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழி காட்டுவார்
அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அமபலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் .
பொருட் சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர்  நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிய வாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற சபையில் விளங்கு கின்ற தெய்வம் அதே தெய்வம் !
சிற்சபை என்பது கடவுள் உயிர் ஒளியாக எல்லா உயிர்களிலும் இருக்கும் இடமாகும் அதலால் உயிர்களை கொல்வது இறைவனைக் கொள்வதாகும் .என் உயிரினும் மேலான ஆன்ம நேய அன்புடைய அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தீபாவளியை உயிர்க் கொலை செய்யாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் .உங்கள் அனைவருக்கும் தீப ஒளி நல வாழ்த்துக்கள் .
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
அன்புடன் ஆனமநேயன் --கதிர்வேலு
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு