செவ்வாய், 21 ஏப்ரல், 2020

வயிற்றில் புதைப்பதை நிறுத்துங்கள்!

*வயிற்றில் புதைப்பதை நிறுத்துங்கள்*!

கொரோனோ தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற  இரவு பகலாக  உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள் மருத்துவர்கள்.

அந்த வழியில் பணியாற்றி வந்த மருத்துவர் டாக்டர் திரு சைமன் அவர்கள் தன் உயிரை இழந்து விட்டார் என்ற செய்தி அனைத்த்து மருத்துவர்களுக்கும்.மக்களுக்கும்.அரசாங்கத்திற்கும்.சுகாதார துறைக்கும் பயமும் வருத்தமும் உண்டாகி இருக்கிறது.

இறந்த டாக்டரை  அடக்கம் செய்ய இடம் தரமாமல் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்த அறிவு கெட்ட ஜென்மங்களை (மக்களை) என்னவென்று சொல்வது எப்படி  திட்டுவது என்றே தெரியவில்லை. *இருந்தாலும் நம்மவர்களே* !

ஒவ்வொரு நாளும் பல உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை(புலாலை) உங்கள் வயிற்றில் புதைக்கின்றீர்களே.

உங்கள் வயிறும் ஒரு சுடுகாடுதானே ! நீங்கள் மக்களுடன் சேர்ந்து வாழலாமா ? நீங்கள் நடமாடும் சுடுகாடாக வாழ்ந்து வருகின்றீர்களே உங்களுடன்  எங்கனும் இனைந்து வாழ்வது சிந்திக்க வேண்டும்.

நீங்கள் இறந்துவிட்டால் உங்களை எந்த சுடுகாட்டில்.இடுகாட்டில் எரிப்பது அடக்கம் செய்வது.இந்த உலகத்தில் வாழ்வதற்கே உங்களுக்கு தகுதி இல்லையே என்று உலகத்தை படைத்த .உயிர்களை படைத்த. உங்களைப் படைத்தை எல்லாம் வல்ல இறைவன் நினைத்தால் என்ன செய்வீர்கள்.

இன்னும் அறியாமையில் மூடநம்பிக்கையில் வாழும் மனிதர்களே ! திருந்துங்கள் சிந்தியுங்கள்.

முதலில் ஜீவகாருண்யம் என்றால் என்ன என்பதை சிந்தியுங்கள்.ஜீவ தயவு .கடவுள் தயவு என்றால் என்ன என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

*உயிர்களிடத்தில் அன்பு.தயவு.கருணை.இரக்கம் காட்டுங்கள்*.

மனித நேயம் ஆன்மநேயம் என்றால் என்ன ? என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து உணர்ந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

மனிதனாக பிறந்தவன் என்ன என்ன தவறுகள் செய்யக் கூடாது என்பதை.
*மனுமுறைகண்டவாசகம்* என்னும் நூலில் வள்ளலார் தெளிவாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் எழுதி பதிவு செய்துள்ளார்.

*நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ*!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு
உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!

வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!

கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!

கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசிநின்றேனோ!

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!

பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!

ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!

சிவனடியாரைச் சீறி வைதேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ!

தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

என்று மனுநீதிச்சோழன் மகன் வீதிவிடங்கன் ஆலய வழிபாட்டிற்காக தேர் ஓட்டிச்செல்கின்றபோது.தேர் சக்கரத்தில் அகப்பட்டு ஏதும் அறியாத  பசுங்கன்று இறந்து விடுகின்றது.

தன் குழந்தையை இழந்த தாய் பசுவானது நீதிகேட்டு அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியை தன் கொம்புகளால் அடித்து ஒலி எழுப்புகிறது.

 அதை அறிந்த மன்னன் பசுவின் கோபத்தையும் சோகத்தையும் அறிந்த மன்னன்  நீதி வழங்குகிறார்.வரலாறு.

பசுங்கன்று இறந்த செய்தி கேட்டு நீதி வழங்கிய மன்னன். மேலே கண்ட பாவங்கள் எல்லாம் நான் செய்தேனோ என்று இறைவனிடம் புலம்புகிறார்
மேலே கண்ட பாவச்செயல்களை செய்யாமல் வாழ்ந்தால் எந்த கொடூரமான வைரஸும் தொற்றாது.வியாதியும் வராது எமனும் நம்மைத் தேடி வரமாட்டான்.மரணபயம் இல்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழலாம்.

*இறை அருள் பெற்று மரணத்தை வென்ற மகான்களின் அருள் வாக்கியங்களை கேட்டு படித்து உணர்ந்து வாழ்க்கையை புனிதமாக மாற்றிக் கொள்ளுங்கள்*.

*உயிர் கொலை செய்யவும் அதன் புலாலை உண்ணவும்  வழிகாட்டும் எந்த சாதி.சமயம்.மதங்களையும் நம்பாதீர்கள்.இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டார்*.

இனிமேலாவது திருந்தி வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

*கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார்*.

*எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி!*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு