திங்கள், 27 ஏப்ரல், 2020

வள்ளலார் சொன்னார் !

*வள்ளலார் சொன்னார்* !

வள்ளலார் சொன்னார் கேட்கவில்லை !

150 ஆண்டுகளுக்கு முன்னாடியே வள்ளலார் சொன்னார் !

*பசித்திரு. தனித்திரு. விழித்திரு என்று வள்ளலார் சொன்னார்*.

அதனால் அடைய வேண்டிய ஆன்மலாபத்தையும் அருள் வல்லபத்தையும் தெளிவாக சொல்லியும் எவரும் கேட்கவில்லை பின்பற்றவில்லை.

வள்ளலார் சொல்லியபடி கடைபிடித்து வாழ்ந்து இருந்தால். *துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம்* வராது.என்பதை தெளிவாக சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார்.

*தான் சொல்லிய வண்ணம் வாழ்ந்தும் காட்டி உள்ளார்*.

அதே நேரத்தில் நான் எதுவும் சொல்லவில்லை.அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் என் உள் இருந்து இயங்கி கொண்டுள்ளார்.அவர்தான் சொல்லுகின்றார் என்கிறார்.

வள்ளலார் பாடல் !

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியதை  அப்படியே சொல்லியும் எவரும் கேட்கவில்லை.நான் அடைந்த அருள்  சுகத்தை. *உங்களின் மீது உள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையால்* இரக்கத்தால் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.

நான் சொல்லியதை தவறாமல் கடைபிடித்து வாழ்ந்து இருந்தால் இறைவன் அருள் பெற வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்.உயர்ந்த பதவி.உயர்ந்த சுகம் கிடைக்கும் என்றும் சொல்லி உள்ளார்.

உலகில் ஒருவரும் வள்ளலார் சொல்லியதை கேட்கவில்லை  பின்பற்றவில்லை.என்பதை உணர்ந்து சலிப்பும் வேதனையும் அடைந்தார்.

*இப்போது நான் சொல்வதை கேட்கமாட்டோம் என கங்கனம் கட்டி உள்ளீர்களா* என்று வேதனையுடன் அப்போதே தெரிவித்துள்ளார்.

*உங்களை எப்படி கேட்க வைக்க முடியும் திருத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும்*.

இப்போது உலகில் உள்ள அனைவரையும்.
*பசித்திருக்கவும்*.
*தனித்து இருக்கவும்.விழித்திருக்கவும்*. இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி கடைபிடிக்க வைத்து விட்டார்.

உலகையே அச்சுறுத்தி பயமுறுத்தும் கொரோனோ தொற்று வைரஸை அனுப்பிவிட்டார். *இறைவனே அனுப்பியதால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை*.

உலக மக்களுக்கு இதுவும் ஒரு நல்ல அதிர்ச்சி அனுபவமே !

முன்பே வள்ளலார் சொல்லியவாறு ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்து  பழகி இருந்தால்  துன்பபட வேண்டிய சோதனையும் சூழ்நிலையும்.
அவசியமும் வந்திருக்காது.சிரமப்படவேண்டியதில்லை.

வள்ளலார் வருவிக்க உற்ற நோக்கமும். அவருடைய பெருமையும் புகழும்.அருள் ஆற்றலும்.ஆட்சி செய்யும் தமிழக அரசுக்கும் தெரியவில்லை.மத்திய அரசுக்கும் தெரியவில்லை.உலக மக்களுக்கும்.அறிவு சார்ந்த மக்களுக்கும் தெரியவில்லை.
தெரிந்து கொள்ளும் பக்குவமும் எவருக்கும் இல்லை.

வள்ளலார் சொல்லியதை பின்பற்றி இருந்தால் பசிப்பிணியைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

எல்லாமே பழக்கத்தின் ஒழுக்கத்தின் வழியாக  மனித உடம்பின் தன்மை.உயிரின் தன்மை.ஆன்மாவின் தன்மைக்கு தகுந்தவாறு உயர்ந்த அனுபவமாக மாறி இருக்கும்...

ஒவ்வொன்றையும் அனுபவத்தால் அறிந்து கொள்ள வேண்டும் என்பார் வள்ளலார்.

இப்போது பரவிவரும் கொரோனோ போன்ற தொற்று நம்மை அனுகாமல் எதிர்ப்பு சக்தியுடன்.பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருக்கலாம்.

*குற்றம் புரிதல் நமக்கு இயல்பே.குணமாக கொள்ளல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயல்பே*.

இனிமேலாவது வள்ளலார் சொல்லிய உண்மை ஒழுக்க நெறியை கடைபிடித்தால். எல்லா ஆபத்தில் இருந்தும் காப்பாற்றப்படுவீர்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயற்கையில் அன்பு தயவு தனிப்பெருங்கருணை உள்ளவர் .அருள் நிறைந்த ஆற்றல் உள்ளவர்.நம்மை படைத்தவர்.நம்மை காப்பாற்றும் தகுதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மட்டுமே உள்ளது.

வள்ளலார் பாடல் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

*உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே கடவுள்! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* !  என்னும் உண்மை உணர்ந்து .சாதி.சமய.
மதம் என்ற குப்பைகளை அகற்றி இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்.
இயற்கை இன்பம்
பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் ஒன்றி இணைந்து வாழவேண்டும்.

*இதுவே இயற்கை கடவுள் சம்மதம்* !

பல தத்துவ கடவுள்களை வழிபடுவதாலும் தொடர்பு கொள்வதாலும் நமக்கு எந்த பிரச்சினைகளும் தீவினைகளும் எக்காலத்தும் விலகாது.

எனவே உண்மை உணர்ந்து *ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை கடைபிடித்து தீவினையை அகற்றி நல்வினையை ஆன்மாவில் நிறைப்பி.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தொடர்பு கொண்டு அருள் பெற்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு