ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

எவரும் தவறாக நினைக்க வேண்டாம்!

எவரும் தவறாக நினைக்க வேண்டாம்.!

கொரோனோ தொற்று வைரஸ் பரவியதைப் பற்றி உலகம் முழுவதும்.பல ஆராய்ச்சி யாளர்கள்.பல மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள்.  பல அறிவியல் விஞ்ஞானிகள் பலபேர் பலவிதமாய் பேசிக் கொண்டும். கருத்துக்களை சொல்லிக் கொண்டும். உள்ளார்கள்.

மருந்து கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

நம் தமிழக முதல்வர்கூட இது பணக்கார்ர்களுக்கு வந்த நோய் என்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த தொற்று நோய் என்றும் சொல்லி உள்ளார்.

நாங்கள் பின்பற்றும் வள்ளலார் கொள்கையின்படி ஆராய்ச்சி செய்து பார்த்தால்.உயிர்க்கொலை செய்பவர்களுக்கும். அதன் மாமிசம் உண்பவர்களுக்கும்.எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

எனவே விஷத்தன்மையுள்ள வைரஸ் தொற்று  மாமிசம் உண்பவர்களை சீக்கிரம் பற்றிக்கொள்ளும் வாய்ப்பு நிறைய உள்ளது. 

எனவே உயிர்க் கொலை செய்பவர்களுக்கும் அதன் மாமிசம் உண்பவர்களுக்கும்.இரத்த வெறி பிடித்த  கொரோனோ தொற்று  வைரஸ்.

இரத்தம் உள்ள உயிர்களை கொன்று தின்பவர்களை சீக்கிரம் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை வள்ளலார் சொல்லும் ஆன்மீக அறிவு அருள் வல்லபத்தால் உணர்கிறோம்.

உயிர்க்கொலை செய்பவர்களுக்கும் புலால் உணவு உண்பவர்களுக்கும் இறை அருள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் இறைவன் தொடர்பு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும்   வள்ளுவரும் வள்ளலாரும் தெளிவாக சொல்லி உள்ளார்கள்.

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும் ! ...திருவள்ளுவர்.

வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு என்பெலாம் கருக இளைத்தனன்...வள்ளலார்

எனவே தாவர உணவான சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனோ தொற்று  வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்புக்கள் ரொம்ப குறைவு என்பதை நாங்கள் உணர்கிறோம்.

எனவே உயிர்க்கொலை செய்யாமல் அதன் புலாலை உண்ணாமல் இருந்தால்.கொரோனோ வைரஸ் தொற்றாமல்  தப்பித்துக் கொள்ள நிறை வாய்ப்பு உள்ளது.

சிந்தியுங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் தெளிவு பெறுங்கள்.

உலகிலே சிறந்த உணவு சைவ உணவு என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

உணவே மருந்து.மருந்தே உணவு என்பதை மறந்துவிட வேண்டாம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு