செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மரணம் வராமல் வாழும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் !

*மரணம் வராமல் வாழும் வழியை கண்டு பிடித்தவர்* !

மரணம் வராமல் வாழும் வழியைக் கண்டு பிடித்தவர் வள்ளலார் ஒருவரே !

வள்ளலார் பாடல் !

காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

மேலும் ஒருபாடல் !

ஆராலும் அறிந்து கொளற் கரியபெரும் பொருளே
அம்மே என்அப்பா என் ஐயாஎன் அரசே

காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்

பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே

சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான
சித்திபுரத் தமுதே என் நித்திரை தீர்ந் ததுவே.!

என்னும் பாடல்கள் வாயிலாக மரணத்தை வென்ற வழிமுறைகளை பதிவு செய்கிறார்.

*உயர்ந்த அறிவு இறைவனால் கொடுக்கப் பட்ட* . *பெறப்பட்ட உயர்ந்த பிறப்பு மனிதப்பிறப்பு* . .

*மனிதனுக்கு மரணம் வரக்கூடாது என்பது இயற்கையின் நியதி*.இயற்கையின் சட்டம்.மரணத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்கான சாத்திய கூறுகள் மனிதனுக்கு மட்டுமே உண்டு.

மேலே கண்ட பாடலில் மரணம் எந்த எந்த வழிமுறைகளில் வருகிறது என்பதை பட்டியல் போட்டு காண்பித்துள்ளார் வள்ளலார்.

*மரணம் வரும் வழி முறைகள்* !

சாதாரண மாக பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.
கொலை.பயம் இவைகளால் மரணம் வருகிறது.

இதில் தப்பிவிட்டால். *ஐந்து பூதங்களான* மண்.நீர்.அக்கினி.
காற்று.ஆகாயம்.
மற்றும் கோல்கள் என்னும் கிரகங்கள் இவைகளின் செயல்பாட்டால் மரணம் வருகிறது.

மேலும் *கூற்றுவன்* எனும் எமனாலும் மரணம் வருகிறது .கொலைக் கருவிகளாலும் மரணம் வருகிறது.

மேலும் அணு ஆயுதங்களாலும் மரணம் வருகிறது. மேலும் பிறர் இயற்றும் மந்திர தந்திர செயல்களாலும் மரணம் வருகின்றது.

*மேலும். *விஷக்காற்று*
*உஷ்ணக்காற்று*.
அசுத்த *பூதக்காற்று மூலமாகவும் வருகிறது* .

மேலும் *கொரோனோ* போன்ற கொடூரமான கிருமி தொற்றாலும் மரணம் வருகின்றன.

மேலும் வேற்றாலே மரணம் வருவதற்குண்டான வழிமுறைகளை கண்டு பிடித்தாலும் கண்டு பிடிக்கலாம்.

இதுபோன்று வரும் மரணத்தில் இருந்து என்ன காப்பாற்ற வேண்டும் என்று *இயற்கை உண்மைக் கடவுள்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் விண்ணப்பம் செய்கின்றார் வள்ளலார்.

இந்த மரணப் பெரும்பிணியில் இருந்து காப்பாற்ற  ஒரே வழி தான் இருக்கின்றது.ஒரே மருந்துதான் இருக்கிறது.

*அதற்கு பெயர்தான் அருள் ஞான மருந்து என்பதாகும்*

ஒரே இறைவன் என்ற உண்மை அறிந்து அந்த இறைவன் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே* தொடர்பு கொள்ள வேண்டும்.

அவரைத் தொடர்பு கொள்ள அறிவு விளக்கத்தோடு அறிந்து உணர்ந்து தெரிந்து. *உண்மை ஒழுக்க நெறியான  சுத்த சன்மார்க்கத்தை* கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே அருள் ஞான மருந்து பெற்று மரணத்தை வெல்ல முடியும்.

அப்படி வாழத் தவரிவிட்டால் மேலே சொன்ன வழிமுறைகளில் எதாவது ஒன்றால் மரணம் வந்துவிடும் என்பது நிச்சயம்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை கடைபிடித்து மரணத்தை வென்று மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்.

*வள்ளலார் எழுதிய அகவல் வரிகளின் தகவல்* !

664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடைய நன் மருந்தே

666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே

667. மலப்பிணி
தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே

668. சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே

அந்த அருள் மருந்து வெளியில் தேட வேண்டாம்.

நமது சிரநடு சிற்றம்பலம் என்னும் ஆன்மா இயங்கும் இடமான *சிற்சபையில் திருநடம் புரியும் அற்புத ஆனந்த மருந்துதான் அருள் ஞான மருந்தாகும்*.

*சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின்* சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு