புதன், 22 ஏப்ரல், 2020

மக்களின் குரல் !

*மக்களின் குரல்.*

கொரோனோவால் நாங்கள் சத்தியமா சாகமாட்டோம்.

*உணவு இல்லாமல் கண்டிப்பா செத்துபோயிடுவோம்* .
என்று ஏழை எளிய ஆதரவு அற்ற மக்கள். வேலை இல்லாத வேலைக்கு போகமுடியாமல .பொருளாதாரம் இல்லாமல் உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் லட்சகணக்கான மக்களின் ஒட்டுமொத்த குரல் இதுவேயாகும்.

உலகம் முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளே சும்மாவே இருந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் அரசாங்கத்தால் மட்டும் எவ்வளவு நாட்களுக்கு பாதுகாக்க முடியும்.

*நாட்டுக்கு நாடு கொடுத்து உதவலாம் என்றால் எல்லா நாடுகளிலும் ஒரே கொரோனோ பிரச்சினை யாகவே உள்ளன*.

அந்த அந்த நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியாமல் திண்டாடிக்கொண்டு உள்ளன.

*எங்கோ போய் கொண்டு இருக்கிறது இந்த  உலகம்.*

மனித சக்தியால் மக்களை காப்பாற்றுவது பொருள் இருக்கும் வரையில்தான்.பொருள் உற்பத்தி நின்று விட்டால் மக்களின் உயிர் நின்றுவிடும்.

*உலக அறிவியல் மேதைகள் சிந்திக்க வேண்டும்*

இதற்கு எல்லாம் இயற்கை என்னும் மெய்ப்பொருள் தான் வழிகாட்ட வேண்டும்.வழிகாட்ட முடியும்.

*இந்த மாற்றம் உண்டாக என்ன காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்*.

சிறிய உயிர்கள்  பெரிய உயிர்கள் என நினைத்து பிரித்து .சிறிய உயிர்களை அழித்து கொண்டே வந்த்தால்.பெரிய உயிர்களுக்கு ஆபத்து வந்துவிட்டது.

*இது சத்தியத்தின் சோதனை*!

எல்லா உயிர்களும் தம் உயிர்போல்  ஒரே தன்மை உடையது  என்று நினைத்து வாயில்லாத பேசமுடியாத.எதிர்த்து குரல் கொடுக்க முடியாத உயிர் இனங்களை கொலை செய்யாமல் அதன் மாமிசத்தை உண்பதற்காக  அழிக்காமல் மனித இனம் வாழ்ந்து இருந்தால்

இந்த கொரோனோ வைரஸ் தொற்று போன்ற துயர சம்பவங்கள் வந்து மனித இனத்தை பயம்முறுத்தாது தாக்காது.

*உயிர்களை படைத்தவனால் மட்டுமே உயிர்களை காப்பாற்ற முடியும்*.

எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே முடியும் என்பது சத்தியவான் வார்த்தை !

வள்ளலார் பாடல் !

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும் அத்தினங்கள் எலாம் இன்பம் உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்
திருவருட் செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!

*மேலே கண்ட பாடல் சத்திய வாக்கு*.

 இயற்கை உண்மை.
இயற்கை விளக்கம்
இயற்கை இன்பம்
என்பதே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலையாகும்.

மனித சக்தியால் காப்பாற்றுவது மிக மிக கடினம்.

இயற்கையை நேசிப்போம்.
இறய்கையை போற்றுவோம். இயற்கையை வழிபடுவோம். இயற்கையை பாதுகாப்போம்.
இயற்கையுடன் ஒன்றி வாழ்வோம்.
இயற்கை காப்பாற்றுவது சத்தியம்
இயற்கையுடன் ஒன்றி இன்பமுடன் வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு