ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வள்ளலார் அழைக்கின்றார் !

*வள்ளலார் அழைக்கின்றார்*!

மனிதன் என்பவனுக்கு உயர்ந்த அறிவு இயற்கை என்னும் மெய்ப்பொருளால் கொடுக்கப் பட்டுள்ளது.

அந்த உண்மையை புரிந்து அறிந்து உணர்ந்து கொள்ளாமல். அறிவைத் தொடர்பு கொள்ளாமல் அறியாமையால் அழிந்து கொண்டுள்ளான்.

*இயற்கை என்றாலும் தெரியாது.மெய்ப்பொருள் என்றாலும் தெரியாது.இயற்கை விளக்கம் என்றாலும் தெரியாது.இயற்கை இன்பம் என்றாலும் தெரியாது.கடவுள் உண்மை எதுவும் தெரியாது*

*சுமார் 5000 ஐந்தாயிரம்*  ஆண்டுகளுக்கு மேலாக சாதி.சமயம்.மதம் என்ற குருட்டு வாழ்க்கையில் குறுக்குத் தனமாகவும்.கிறுக்குத் தனமாகவும்  ஏதும் தெரியாமல் வாழ்ந்து வீணே அழிந்து கொண்டுள்ளார்கள் .

வள்ளலார் பாடல் !

பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம் இங் கிது நான்
புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே

மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவது அழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே

பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே

அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.!

என்னும் பாடலிலே தெளிவாக சொல்லி உள்ளார்.

மனிதன் அறிவு விளக்கம் பெற்று என்றும் எக்காலத்திலும் அழியாமல் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை உள்ளது.
அவற்றைத் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்.உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களை அன்போடு அழைக்கின்றார்.

*நீங்கள் இங்கு வருவதால் உங்களை அடுப்பவரே அன்று எவராலும் தடுக்க முடியாது என்கிறார்* *வள்ளலார்*.

ஒழுக்கம் நிறைந்த சுத்த சன்மார்க்க சங்கத்தை இறை அருளால் தோற்றுவிக்கப் பட்டுள்ளது அதில் சேர்ந்து இணைந்து *இயற்கை உண்மைக் கடவுளான எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம் என்று அழைக்கின்றார்*.

உலகில் தோன்றிய எந்த ஞானிகளும்.அருளாளர்களும் மனிதர்களை இவ்வாறு அன்போடு ஆன்மநேயத்தோடு உரிமையோடு அழைத்தது இல்லை.

மக்கள் கற்பனையிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.உண்மை அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல்.வழிதெரியாமல் குறுக்கு வழியில் சென்று கொண்டுள்ளார்கள்.

எனவே நேர்வழியைக் காட்டி இறை அருளைப் பெறுவதற்குப் பயிற்சி பெற வள்ளலார் வடலூருக்கு அழைக்கின்றார்.

இதற்காக எந்த பொருளாதாரமும் சிரமமும்  தேவை இல்லை.

*தன்னை அறிந்து கொள்ளும் தகுதி மட்டுமே போதுமானது*.

இது நல்ல தருணம் பயன் படுத்தி கொள்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு