புதன், 1 ஏப்ரல், 2020

பரிசு வழங்கிய இறைவன் !

*பரிசு வழங்கிய இறைவன்* !

அழிந்து போவதை கண்டு பிடித்தவர்களுக்கு எல்லாம்.அறிஞர்கள் பட்டம் வழங்கி நோபல் பரிசு வழங்கி உலகம் பாராட்டி உள்ளது.

மரணத்தை வெல்லும் அருள்ஞான அறிவியலை கண்டு பிடித்த. தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கும் *திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானை* இந்த உலகம்கண்டு கொள்ளவே இல்லை.

வள்ளலார் அருள் அற்புதச் செயலை கண்டு வியந்து பாராட்டி போற்றி மகிழ்ந்த *எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*  அருட்ஜோதிப்பரிசு வழங்கி பாராட்டி உள்ளார்.

வள்ளலார் பாடல் !

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
*சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும்* - தேவாநின்
*பேரருளை* என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.!

உலகில் காகாவரம் பெற்ற வள்ளல்பெருமானாருக்கு *பேரருள்* என்னும் பரிசு இறைவனால் வழங்கப்பட்டது.

மனித தேகம் பெற்ற அனைவரும் மரண பயத்தை நீக்கி சாகாவரம் பெறலாம் என்ற உண்மையை கண்டுபிடித்து  மனித குலத்திற்கு வழிகாட்டிய வள்ளலாருக்கு.

 அழிந்து போகும் மனித குலத்தின் பரிசு பெறாமல் .அழியாமல் என்றும் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பரிசு பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும். வள்ளலார் வாழ்ந்து காட்டிய உண்மை வழியைப் பின்பற்றி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!*
*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக* *!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு