புதன், 1 ஏப்ரல், 2020

நாம் செய்ய வேண்டியது !

*நாம் செய்ய வேண்டியது* !

*நமக்கு நல்ல ஓய்வு கிடைத்திருக்கு*.

நமக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் தகரக்கண்டி விளக்கோ.அல்லது அகல் விளக்கோ வைத்து தேங்காஎண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அணையாமல் தினமும் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

தினமும்
*அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி*
என்னும்  மகாமந்திரத்தை முடிந்த அளவு சொல்லுங்கள்.

*வள்ளலார் வாக்கு* !
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* !
*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக* !

என பலமுறை சொல்லுங்கள்.

*மாமிச உணவு உட்கொள்ளாமல் தாவர உணவான சைவ உணவை அளவோடு உட்கொள்ளுங்கள்*.

இரவு எட்டு மணிக்குள் உணவை உட்கொள்ளுங்கள்.

காலை 8 மணிக்கு காலை உணவு உட்கொள்ளுங்கள்.

இரவில் இருட்டில் படுக்காமல் சிறிய வெளிச்சத்தில் நித்திரை செய்யுங்கள்.

*வெளிச்சம் உள்ள வீட்டில் இருள் என்னும் கொடிய வைரஸ் நெருங்காது*.

*வீட்டை விட்டு வெளியே போகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்*.

ஒருகுடத்தில் தண்ணீர் ஊற்றி வேப்பிலை அதில் போட்டு மஞ்சள் இரண்டு ஸ்பூன் போட்டு ஊறவைத்து காலை மாலை கை கால்களை கழுவி.

மீதமுள்ள தண்ணியை நம் வீட்டின் முன் வாசல் காலியாக உள்ள இடங்களில் தெளிக்கவும்.

நல்லதை நினைப்போம்.நல்லதே செய்வோம்.நல்லதே நடக்கும்.

*எங்குறு தீமையும் எனைத்தொடராவகை கங்குலும் பகலும்  மெய் காவல் செய் துணையே* !

என்பார் வள்ளலார்.

நம்மைப் படைத்த இறைவனே நமக்கு பாதுகாப்பாய்  இருப்பார்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு