புதன், 5 டிசம்பர், 2018

மரணத்தை தடுக்கும் மாமருந்து !

மரணத்தை தடுக்கும் மாமருந்து !

உலகில் தடுத்து நிறுத்த முடியாத பெரும்பிணி மரணம் என்னும் பெரும்பிணி.

அவற்றை தடுக்கும் மருந்தை கண்டு பிடித்தவர் தான் வள்ளலார்.

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!

மரணம் வராமல் காப்பாற்றும் மருந்திற்கு பெயர் ஞானமருந்து என்னும் அருள்மருந்து.

இந்த மருந்து மனித ஆன்மாவில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கின்றது.

மறைப்புதான் ஆன்மாவைச் சுற்றியுள்ள அறியாமை .அஞ்ஞானம் என்னும் திரைகள்.

திரைகளை நீக்குவதற்கு வள்ளலார் சொல்லியுள்ள இந்திரிய கரண ஒழுங்கங்களை பூரணமாக கடைபிடிக்க வேண்டும்..

கடைபிடித்தால் திரைகள் நீங்கப்பெற்று.ஆன்மாவின் வழியாக அருளைப்பெற்று மரணத்தை வெல்லலாம்.

திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

வள்ளலார் திரைமறைப்பை எல்லாம் நீக்கி அருளைப்பெற்று மரணத்தை வென்றார்..

நாமும் முயற்சி செய்தால்  மரணத்தை வெல்லலாம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு