வெள்ளி, 14 டிசம்பர், 2018

புயல் வருவதற்கு காரணம் !

புயல் வரக் காரணம் !

கடலில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களை தினமும் கொன்று தின்பதுதான் என்பது மக்களுக்கும்.அறிவியலுக்கும். அரசாங்கத்திற்கும் தெரியவில்லை.

எல்லா உயிர்களும் தம் உயிர்போல் எண்ணி எந்த உயிர்களையும் கொலை செய்யாமலும் அதன் மாமிசத்தை உண்ணாமலும்.வாழ்கிறார்களோ

அப்போது தான் இயற்கை சீற்றங்கள் வரவே வராது.

இறைவனால் படைத்த உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை.

உயிர்களை பரிக்கும் வரை.மனிதர்களுக்கு துன்பங்களும் சோதனைகளும்  வந்து கொண்டே தான் இருக்கும்..

வள்ளலார் பாடல் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்றார் வள்ளலார்.

வள்ளலார் என்ற சாதாரண மனிதன் சொல்லியது அல்ல.அருளைப்பெற்று மரணத்தை வென்ற மகான் சொல்லியது.

உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

 அருட்பெருஞ்ஜோதி அகவல்

உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே !

 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறுசன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்
நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த்
 தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்
மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே!

உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் இறைவனை நினைக்க தகுதி அற்றவர்கள் என்கிறார் வள்ளலார்.

இயற்கை பேரழிவு வருவதற்கு அடிப்படை  காரணமே உயிர்களை அழிப்பதுதான்..

உயிர்க்கொலை யை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை அனைத்து சமய மத வாதிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு