சனி, 1 டிசம்பர், 2018

ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுங்கள் !

ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுங்கள் !

ஆன்மா என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளாமல் வாழவதால் எந்த பயனும் இல்லை.

உலகில் தோன்றிய சமய மதங்கள் யாவும் ஆன்மாவின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவில்லை.

கற்பனைகளாலும் யூகத்தின் வாயிலாகவும் அற்ப அறிவாலும்.அற்ப அருளாலும் அவர்களுக்கு விளங்கியதை சொல்லிவிட்டு மாண்டு போனார்கள்.

*ஆன்மாவின் உண்மைத் தன்மை அறிந்தால் மட்டுமே அருளை அறியமுடியும்.அருளின் பூரணத்தை அனுபவித்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.மரணத்தை வென்றால் மட்டுமே நித்தியமான அருள் தேகத்தை பெறமுடியும்.*

நித்தியமான அருள் தேகத்தை பெற்றால் மட்டுமே ! இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அருள் கண்களால் காணமுடியும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வைக்கும் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி யில் கலந்து கொள்ள முடியும்.

உலக வரலாற்றில் அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்து ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் ஒரே அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார் ஒருவர் மட்டுமே ! என்பதை அருளாளர்கள் அறிந்து கொண்டார்கள்.

*ஆன்ம அறிவு விளக்கம் இல்லாத மனிதர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.*

ஜீவ அறிவை. ஆன்ம அறிவு என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.

ஆன்ம அறிவு உள்ளவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள்.ஜீவ அறிவு உள்ளவர்கள் குற்றம் செய்ய தயங்க மாட்டார்கள்.

மனிதர்கள் தன் உள் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவையும் அறிவையும் அருளையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அறிந்து கொள்வதற்காகவே இந்த கட்டுரை...

*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும்*.

பலகோடி அண்டங்களையும் உலகங்களையும் படைத்தவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.ஆன்மாக்களின் வாழ்க்கையாகவே அனைத்தும் படைக்கப் பட்டுள்ளன..

ஆன்மாக்கள் நன்மை தீமை அறிந்து வாழ வேண்டும்.

ஆன்மாக்கள் இவ்வுலகிற்கு வந்து தாவரம்.ஊர்வன.பறப்பன.நடப்பன.
அசுரர்.தேவர்.மனிதர் போன்ற ஏழு வகையான பிறப்பு எடுத்து.இறுதி பிறப்பான மனிதபிறப்பில் உண்மையானக் கடவுளை.அறிவால் அறிந்து அருளைப்பெற்று.கடவுளிடம் செல்ல வேண்டும்..

*இதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்ற உண்மையைச் சொல்லுகின்றார்.*

கடவுள் நிலையை ஆன்மாக்கள் ஏன் அறிய வேண்டும் ?

ஆன்மாக்கள் முதலில் எங்கு இருந்தன ?என்பதை தெரிந்து கொண்டால் விடை கிடைத்து விடும்..

ஆன்மாக்கள் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருட்பெருவெளி என்பதாகும்.(அதாவது அருள் நிறைந்த பெருவெளி)
அங்கு பஞ்ச பூதங்கள் (அணுக்கள்) கிடையாது...

வள்ளலார் பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்

அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே

அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி அந்த அருட்பெருவெளியில் ஆன்ம ஆகாசம் என்று ஒரு வெளி ஒன்று உள்ளது.அங்கு தான் எல்லா ஆன்மாக்களும் ஆனம சிற்றுரு ஆணுக்களாக இருந்தன...

வள்ளலார் சொல்லுவதை ஊன்றி கவனிக்க வேண்டும் !

உதாரணம் சொல்லுகின்றார்....!

அதற்கு சிருட்டி நியாயம் என்று பெயர் வைத்துள்ளார்..!

ஆகாசம் அனாதி.அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி..அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி.அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ....

அதுபோல...்்அப்படிக் கடவுளிடத்தில் அருட்சக்தி அனாதியாய் இருக்கின்றது.ஆகாயத்தில்(அருள்வெளியில்)அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றது.

இதுபோல் கடவுள் சமூகத்தில் உள்ள ஆன்ம ஆகாசத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன.அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.என்பதை உதாரணத்தோடு தெளிவாக தெரியப்படுத்துகின்றார்....

*ஆன்ம தேகம் ! ஜீவ தேகம் !*

அந்த ஆன்மா இவ்வுலகத்திற்கு அனுப்பும் போது ஆன்ம தேகத்தோடு ஆணவத்தின் துணையாக அனுப்பபடுகின்றது.

ஆன்மாக்கள் !

இந்த உலகத்தில் ஆன்மா வாழ்வதற்கு பஞ்ச பூதங்களான ஜீவதேகம் மாயையால் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

ஆனம தேகத்திற்குள் ஜீவதேகம் அடங்கி விடுகின்றது.எனவே ஆன்ம தேகம் ஜீவதேக கண்களுக்குத் தெரியாது.ஆன்மதேகம் நித்திய தேகம்....ஜீவ தேகம் அநித்திய தேகம்.

இந்த விதிமுறைகள் தாவரங்களில் இருந்து மனித தேகம் வரை பொதுவானதாகும்.மனித தேகத்தில் மட்டும் ஆன்ம அறிவு விளக்கம் பெற்று உண்மை அறிதல் வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆணையாகும்..

வள்ளலார் சொல்வதை கவனிக்க வேண்டும்.!

அறிவென்பது ஓர் சிறிதும் தோன்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில்.நெடுங்காலம் .சிற்றணுப் பசுவாகி அருகிக் கிடந்த அடியேனுக்குள் உள் ஒளியாக இருந்து அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து.

எல்லாப் பிறப்பு உடம்புகளிலும் உயர்வு உடைத்தாகிய உயர்ந்த அறிவுள்ள இம்மானிப் பிறப்பு உடம்பில் என்னைவிடுவித்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்கனம் அறிவேன் !எவ்வாறு கருதுவேன் ! என்னென்று சொல்வேன் ! என்று

சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில் தெளிவாக விளக்கி விளங்க வைக்கின்றார்...

என்றும் அழியாத நித்திய தேகமாக மனித தேகத்தை மாற்றிக் கொள்ளவே.அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும்.கடவுள் விளக்கமும் மனித தேகத்தில் உள்ள ஆன்மாவிற்கு கொடுக்கப் பட்டுள்ளது...

ஜீவதேகம் உலக போகத்தி்ல் ஈடுபட்டதால்.நல்வினை.தீவினை ஆன்மாவில் பதிவாகி விடுகின்றது.தீவினையை போக்க தெரியாமல் ஜீவதேகம் மரணம் அடைந்து அழிந்து போகின்றது...

ஜீவதேகம் அழியக் கூடாது என்பதை சொல்லுவதுதான் வள்ளலார் சொல்லும் சுத்த சன்மார்க்கம்.

ஜீவ தேகத்தை அழிக்காமல்.ஜீவதேக அணுக்களை.அருளால் வேதித்து பிரித்து எடுத்துவிட்டு .நித்திய தேகமாகிய ஆன்ம தேகமாக மாற்ற வேண்டும்...

ஆன்ம தேகத்தில் மூன்று தேகம் உள்ளன..!

சுத்த தேகம்.
பிரணவ தேகம்..
ஞான தேகம்.

மூன்று தேகத்தையும் ஒருதேகமாக மாற்ற வேண்டும்.

இந்த மூன்று தேகத்திலும் உயர்ந்த தேகம் ஞான தேகம் என்பதாகும்.அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்...

ஆன்ம தேகம் ஜீவதேகத்தில் இருந்து விடுபட்டு அருள் தேகமாக மாற்றிக் கொள்வதையே சாகாக் கல்வி...என்னும் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்..

சாகாக்கல்வியை யாரிடம் கற்றுக் கொள்வது.?

ஆன்மாவை அனுப்பிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு தான் கற்க வேண்டும்.

பொய்யான சமய மதங்களின் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு..வள்ளலார் சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க...கொள்கைகளை வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்க வேண்டும்.

கற்றேன் சிற்றம்பலக்கல்வி !

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி விளங்க வைக்கிறார் வள்ளலார்.

பிறர் சொல்லும் கொள்கைகளைப் பின்பற்றாமல்.அருட்பெருஞ்ஜோதி என்னும் சிவானந்த சிற்றம்பலத்தை தொட்புகொண்டு கற்றேன்.கருணைநெறி உள்ளேன்..சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றேன் என்கிறார் வள்ளலார்...

ஆன்மாவானது ஜீவதேகம் எடுத்துதான் என்றும் அழியாத நித்திய தேகமாகிய அருள்தேகம் பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் கலந்து கொள்ள முடியும்..கலந்து கொள்ள வேண்டும்..என்பது இறை சட்டம்..

ஆன்மா தன்னை உணர்ந்து கொள்ள உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் இறைவனால் கொடுக்கப்பட்டது...

மனிதன் வள்ளலார் சொல்லிய வண்ணம் ஒழுக்கம் நிறைந்து கருணைவடிவமாக மாற வேண்டும்

வள்ளலார் பாடல்!

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

கண்டதை எல்லாம் கேட்டு படித்து  களித்து உண்டு இறுதியில் மரணம் வந்து மாண்டு போகாதீர்கள்.

இனிமேலாவது மெய்நெறியான சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து.மெய்ப் பொருளான அருட்பெருஞ்ஜோதி யை அறிந்து.உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து ஊற்று எழும்புவது போல் அழுது உடம்பு நனைந்து அருளைப் பூரணமாகப் பெற்று கொண்டு...

என்றும் இறவாமல்.பிறவாமல் வாழ்வதற்கு வரம் பெற்று என்றும்அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் பெரிய லாபத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

ஆன்மாவின் உண்மைத் தரத்தை உணராமல் சமய மதங்கள் தவறான. பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி.மூடமான வழியைக் காட்டியதால் மனித இனம் அழிந்து கொண்டுள்ளது.

வள்ளலார் பாடல் !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

மேலே கண்ட பாடலில்.உடம்பு.உயிர்.ஆன்மா வந்த வழியைத் தெரிந்து கொண்டால் தான் .உடம்பையும்.உயிரையும் அழிக்காமல் நித்திய தேகமாகிய அருள் தேகம் பெற முடியும் என்பதை சொல்லி உள்ளார்.

விரிக்கில் இன்னும் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு