செவ்வாய், 18 டிசம்பர், 2018

ஆட்சி அதிகாரங்கள் மாற்றப்பட்டது !

ஆட்சி அதிகாரங்கள் மாற்றப்பட்டது ! ..

இந்த உலகத்தை ஆட்சி செய்வது மாயை.மாமாயை.பெருமாயை என்பதாகும்.

இவைகள் தான்  பஞ்சபூதங்களை ஆட்சி செய்யும் அதிகாரிகள்..

பஞ்சபூதங்களுக்கும் தனித்தனி தன்மையும் சக்தியும் உண்டு.
ஐந்து பஞ்சபூதங்களும் சேர்ந்தால்தான் ஒரு ஆற்றலையோ உருவத்தையோ உருவாக்க முடியும். பஞ்ச பூத கலவை இல்லாமல் எதுவும் நடக்காது செயல்படாது.

இறைவன் அனுப்பி வைக்கின்ற  ஆன்மாக்கள் வாழ்வதற்காக இவ்வுலகம் படைக்கப்பட்டது.

ஆன்மாக்கள் ஏழு பிறப்பு எடுத்து இறுதிபிறப்பில் மனிதபிறப்பு எடுத்து இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் சட்டம்.நியதி..
என்பதாகும்

ஆனால் இங்கு இந்த உலகத்தில் என்ன தடந்தது.!

இங்கு மனிதபிறப்பில் அருளைப் பெற்ற அருளாளர்கள் மனிதர்களுக்கு நல்வழிக்  காட்டிவிட்டு இறைவன் சட்டப்படி இறைவனுடன தொடர்பு கொண்டு சென்று இருக்க வேண்டும்.

ஆனால் அருளாளர்கள் தங்களுக்குக் கிடைத்த அருள் ஆற்றலை பயன் படுத்தி பொய்யான ஆட்சி புரிய ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களுக்கு கர்மசித்தர்.
யோகசித்தர் .
ஞானசித்தர்
என்று பெயர்

அவர்களின் தனித்தனிக் கொள்கையால் மக்களைத் தங்கள் வசமாக தனித்தனியே மாற்றிக் கொண்டார்கள்.

உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ளாமல்.அவரைக் காட்டாமல் அங்கு செல்லாமல்..அவரிடம் மட்டும் அருளைப்பெற்று. பொய்யான கற்பனை கலந்த தெய்வங்களைப் படைத்து விட்டார்கள்.

ஆண்டவரின் அருளைப் பெற்று ஆண்டவரிடம் செல்ல வேண்டிய ஆன்மாக்களை தவறான வழியைக் காட்டி இங்கு ஆன்மீக  அரசியல் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.

ஒவ்வொரு அருளாளர்களுக்கும் ஒவ்வொரு கட்சி. சின்னம்.பெயர் கொள்கைகள் என வைத்து கூட்டம் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த கட்சிகளில் மக்கள் கூட்டத்தை வைத்து பெரிய கட்சி.சிறியகட்சி.
அதற்கும் கீழ் உள்ள கட்சிகள் எனப் பிரிக்கப் பட்டன.

பொய்யான கதைகளை மக்களிடம் சொல்லி...பொய்யான கடவுள்களை உலகில் அறிமுகப் படுத்தி.ஏதும் அறியாத மக்களை கூறு போட்டு பிரித்து விட்டார்கள்.

அந்த ஆன்மீக கட்சிகள் !

இந்துமதம்.
இஸ்லாம்மதம்.
கிருத்துவமதம்.
பவுத்தமதம்.
ஜைனமதம்

போன்ற பல பெரிய மதங்கள்.பல சிறிய மதங்கள்..

அதில் பல சமயங்கள்.பலசாதிகள்..அதனுள் பல உட்பிரிவுகள் போன்ற கேவலமான.
அருவறுக்கத் தக்க கொள்கைகளைப் படைத்து விட்டார்கள்.

அதில் சமயங்கள் மதங்கள்.மார்க்கங்கள் எனபவற்றின் ஆச்சார.சங்கற்ப விகற்பங்களும்.
வருணம்.ஆசிரமம்.முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களையும்.
காட்டி வைத்து.
பழக்கப்பட வைத்து.மக்களை பின்பற்ற வைத்து விட்டார்கள்

*உயர்ந்த அறிவுள்ள.அருள்பெறும் தகுதியுள்ள மனித்தேகம் கிடைத்த மக்களை அழிவுப் பாதையில் தள்ளி விட்டார்கள்..*.

மாயை !

அதனால் இந்த உலகத்தை நிர்வாகம்  *மாயையானது*.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  ஆணையின்படி.துன்பத்தைக் கொடுத்து நல்வழிக்கு கொண்டு செல்ல முடிவு எடுத்தது.

இந்த அருளாளர்கள்  தவறான வழியில் மக்களை அழைத்துக் கொண்டு செல்வதை கவனித்த மாயையானது.

தன் நிர்வாகத்தில் உள்ள.. பஞ்ச பூதங்களைக் கொண்டு.பஞ்ச பூத செயல்களின் வழியாக. அதன் அதன் நியதிகளை  மாற்றி.அதன் காலம்.அளவு.செயல் போன்ற பணிகளை குறைவு செய்து.

பசி.பிணி.தாகம்.
இச்சை.எளிமை.பயம்.கொலை போன்ற துன்பங்களை கொடுத்து மக்களை மாற்ற முயற்சி செய்தது

அதனாலும் ஆன்மீக அருளாளர்களும் மக்களும் திருந்தவில்லை...
திருத்த முடியாத அளவிற்கு அவர்களின் ஆன்மாவில் அறியாமை அஞ்ஞானம் என்னும்.ஏழு திரைகள்.ஆன்மாவின் உண்மையை மறைத்துக் கொண்டது .

அந்த திரைகளை நீக்க வழி தெரியாமல் அலைந்து அழிந்து.மரணம் அடைந்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.  எப்படியாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக...

உண்மைக் கடவுளான உலகத்தைப் படைத்த கடவுளான *அருட்பெருஞ்ஜோதி.* ஆண்டவரால் அனுப்பி வருவிக்க உற்றவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்....

அவர் சாதி சமய மதங்களைச் சார்ந்த தெருக்கூட்ட பரபில் சார்ந்தவர் அல்ல என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்னும் பாடலில் தெளிவாக சொல்லி உள்ளார்...

மேலும் உண்மைக்கு புறம்பான ஆட்சி அழியவேண்டும் என சாபம் விடுகின்றார்...

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்

தெல்லோரும் வாழ்க இசைந்து.!

கருணை இல்லாமல் செயல்படுகின்ற பொருள் ஆட்சியை ஒழித்து. அகற்றிவிட்டு ..மக்களை காப்பாற்றும் அருள் ஆட்சி வரவேண்டும்.
அருளாளர்கள் ஆட்சியில் அமரவேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்.

அருளாளர்கள் ஆட்சியில் இருந்தால் அருளைப்பெற்று மரணத்தை வென்று நித்திய வாழ்வு பெற்று வாழ்வாங்கு வாழ வழி காட்ட முடியும் என்பது சத்தியம்.எனவே அருள் ஆட்சி அவசியம் ....

மேலும்.

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

*என்பிள்ளை ஆதலாலே*

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!

மேலே கண்ட பாடலில் உள்ள கருத்துக்களை ஊன்றி படிக்க வேண்டும் விளக்கம் தேவை இல்லை.

நீ என் பிள்ளை என்பதால்.சாதி சமய மதங்களை ஒழித்து.அழித்து மக்களை காப்பாற்றி.புதிய பொது நெறியான தனிநெறியான *சுத்த சன்மார்க்கத்தை நிறுவ  வேண்டும்* என்கிறார் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்....

மேலும்.

 அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

மேலே கண்ட பாடலிலே என்னை அனுப்பியவர் அருளை வழங்கியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை ..மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

மேலும்.

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே

வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!

சாதி சமய மதங்களிலே  ஆதியில் இருந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள் இனிமேல் உங்களை அழியாமல் அழிக்காமல் காப்பாற்ற வேண்டியது இறைவன் ஆணை...

எனவே உங்களை எல்லாம் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை உரிமை என வாருங்கள் வாருங்கள் என கூவி கூவி அழைக்கிறார். வள்ளலார்..

மேலும்

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்

சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படித்துப் பாருங்கள்.

சாதி சமயம் மதம் சாத்திரம் எல்லாம் ஒதிக்கித் தள்ள வேண்டிய குப்பைகள் என்கிறார்..

இப்போது ஓதி உணர்ந்த அருளாளர்கள் எல்லாம் சுத்த சன்மார்க்க கொள்கை மட்டுமே உலகின் உண்மையான பொதுக் கொள்கை என தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு... எனைக் கேட்டு பின் பற்றி.பின் தொடர்ந்து வருகின்றார்கள... நீங்கள் வருவதற்கு ஏன் ? தயங்க வேண்டும் என்று அன்போடு தயவோடு.
கருணையோடு அழைக்கின்றார்...

*இதை எல்லாம் ஈரோடு கதிர்வேல் சொல்லவில்லை*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி வள்ளலார் சொல்லுகின்றார்..

இப்போது இந்தத் தருணம் அருள் ஆட்சியில் வள்ளல்பெருமான் அமர்ந்து கொண்டு சொல்லுகிறார்.

வள்ளலார் பாடல் !

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா விருந்தின்

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி அருள் ஆட்சியில் அமர்ந்து கொண்டு இந்த உலகத்தை ஆண்டு கொண்டு உள்ளவர்தான் நமது பூரண அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை அறிவுள்ளவர் அறிந்து கொண்டு மக்களுக்கு அறிவு புகட்ட வேண்டும்...

மாயை மாமாயை. பெருமாயை பஞ்ச பூதங்கள் கிரகங்கள் யாவும் அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது..என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்....

இன்னும் நிறைய மாற்றங்களை வந்து கொண்டே இருக்கும் மக்களை நல்வழிக்கு கொண்டு செல்லும் காலம் சுத்த சன்மார்க்க காலமாக மாற்றம் அடையும்...

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது

மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது !

உலக வரலாற்றில் சாதி சமயம் மதம் அற்ற ஒரே மார்க்கம் தான் சுத்த சன்மார்க்கம்.

உலக வரலாற்றில் சாதி சமய மதம் அற்ற பொது வழிபாடுதான் வடலூரில் உள்ள சத்திய ஞானசபையின் அருட்பெருஞ்ஜோதி வழிபாடாகும்

விரிக்கில் பெருகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்பதுதான் வள்ளலாரின் தாரக மந்திரம்.

அதற்கு கொல்லா நெறியே உலகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு