திங்கள், 17 டிசம்பர், 2018

இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார் !

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் !

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர்  என்பதைப் புரிந்து கொள்ளாமல் தெரிந்து கொள்ளாமல்..சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் .
சன்மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள்.சுத்த சன்மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல்..

வள்ளலாரின் உண்மை வாழ்க்கை முறையை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளாமல் ஒன்று கிடக்க ஒன்றை உளரிக் கொண்டு உள்ளார்கள்...்

வள்ளலார் பிறந்தது முதல் சித்தி பெறுகின்ற வரையில் மக்களை சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியில் கொண்டு வருவதற்கு அளவுகடந்த அரும்பாடு பட்டுள்ளார்.

வள்ளல்பெருமானுக்கு  ஏதோ ஒன்றும் தெரியாதது போலவும்..சமயநெறிக் கொள்கைகளை பின்பற்றி வந்தது போலவும்.பல சமய தெய்வங்களைப் பற்றி பாடியதால்.சமய தெய்வங்களை வணங்கியதால்.சமயப்பாடல்களை எழுதிவைத்து. வழிபட்டுத்தான் மேல்நிலைக்கு வந்த்தாகவும் நினைத்துக் கொண்டு உள்ளார்கள்.

சமயக்குரவர்களை பின்பற்றி வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் வள்ளலாரும் ஒருவர் என நினைத்துக் கொண்டும்.எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்..

வள்ளலார் சமய தெய்வங்களை வண்ங்கியது ஏன்?.பாடியது ஏன்? .எழுதிவைத்ததுள்ளது எதற்காக ஏன் ? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் உண்மை வெளிப்படும்..

*வள்ளலார் நடத்திய நாடகத்தின் ஒருபகுதி !*

மக்களைத் திருத்த வேண்டுமானால் அவர்களின் வழிகளிலே சென்று தான் திருத்த வேண்டும்.திருத்த முடியும் என்பதை உணர்ந்து அறிந்து செயல்படுகின்றார்.

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்று எவருக்கும் தெரியாது.

உலகில் உள்ளவர்கள் எல்லோரும் சாதி சமய மதங்களையே பின்பற்றி வருகிறார்கள்.
அவர்களுக்கு உடனே உண்மைச் சொல்லி புரிய வைக்க முடியாது.சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது வள்ளலாருக்குத் தெரியும்.

எனவே மற்றவர்கள் சமய மதத் தெய்வங்கள்மேல் பாடிய பக்திப்   பாடல்களை விட உயர்ந்த கருத்தாழமுள்ள.எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பக்திப் பாடல்களை பாடியும் எழுதியும் வைத்துள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும்...

மக்களை தன்வசமாக திசை திருப்புவதற்காக.மாற்றுவதற்காக.உண்மையை உணர வைப்பதற்காக. உண்மைக் கடவுளைத் தெரிந்து கொள்வதற்காக.
இறை அருளைப் பெறுவதற்காக.
மரணத்தில் இருந்து மக்களை மீட்பதற்காக.

சமய மதங்களில் விழுந்து அழிந்து கொண்டு இருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்காக...

அன்பு.தயவு.கருணைக் கொண்டு மக்களின் அறியாமையை போக்குவதற்காகவே சமய மத தெய்வங்களைப் பற்றி பாடியுள்ளார். வணங்கி உள்ளார் என்பதை தெரிந்து கொண்டால் தெள்ளத் தெளிவாக உண்மை விளங்கும்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்றால் என்ன ? என்பதை அனுபவத்தால் அறிந்து கொண்டால் மட்டுமே அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் விளங்கும்...

வள்ளலாரே சொல்லி எழுதி வைத்துள்ளார்..

வள்ளலார் எழுதி வைத்துள்ளது ! ..

*சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெருவிண்ணப்பம்*

என்ற விண்ணப்பத்தில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக எழுதி வைத்துள்ளார்..

இறைவன் என்னை வருவிக்க உற்றது ஏன் ? என்பதை தெளிவு படுத்தி உள்ளார்...

ஆழ்ந்த அறிவோடு பொறுமையாக பல தடவைப் படித்தால் தான் தெளிவு பெற்றுக் கொள்ள முடியும்.

*அவற்றில் ஒருபகுதியை உங்கள் முன் பதிவு செய்கிறேன்.....*

எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே!

குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.

இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது,

பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி
(தமிழ்மொழி) ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.

*இங்குதான் அவசியம் கவனிக்க வேண்டும்*

அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து

அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.

வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.


*வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னரே அருட்பெருஞ்ஜோதி யை தெரிந்து கொண்டுள்ளார்...*

*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.*

வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்,

அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,

உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.

அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும்

*சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*

அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் *எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும்* கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச்

சுத்த நீண்ட சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத *சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம்* என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,

தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும்

கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும் *கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி* முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு

அருட்பொருஞ்ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும்

எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.

இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

என்று தன்கையொப்பம் இட்டு எழுதி வைத்துள்ளார்....

இறைவன் வருவிக்க உற்றதின் நோக்கத்தை தெளிவாக விளக்கி உள்ளார்.

வள்ளலார் எழுதி வைத்துள்ள நான்கு விண்ணப்பங்கள் அவர் வாழ்க்கை முறையை தெளிவு படைத்துக்..

ஜீவகாருண்ய  உணர்வோடு படித்தால் தான் அறிவு விளங்கும்.பொது நோக்கத்தோடு படித்தால் தெளிவடையும்.படித்து பயன் பெறுங்கள்.

வாதம் கோபம் சுயநலம் இல்லாமல் சமய மதப் பற்று இல்லாமல் பொது நோக்கத்தோடு படித்து. உணர்ந்து தெளிவு பெற வேணுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஒங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு