புதன், 21 செப்டம்பர், 2016

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை வாழ்வதற்கே !
எல்லோரும் படிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !
எல்லோரும் பேசத் தெரிந்து இருக்கின்றார்கள் !
பணம் சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள்.!
பொருள்களை  சம்பாதிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !
பதவியை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !
புகழை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !.
காதல் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
திருமணம் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள் !.
குடும்பம் நடத்த தெரிந்து இருக்கின்றார்கள் !
குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
அழகு அழகுவாய்  வீடு கட்டத் தெரிந்து இருக்கின்றார்கள்,!
விதவிதமாய் கார்கள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.
பணத்தை மறைத்து வைக்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
விதவிதமாய் நகைகள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!
வெளி நாடுகளை சுற்றிப் பார்க்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !
அறிவியலைத் தெரிந்து இருக்கின்றார்கள் !
விஞ்ஞானத்தை தெரிந்து இருக்கின்றார்கள் !
மற்றைய எல்லாம் தெரிந்து இருக்கின்றார்கள் !.
துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ தெரிந்து கொள்ளவில்லை !.
ஆன்மீகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவில்லை !
உண்மையான கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
நம்முடைய வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
நாம் எங்கு இருந்து வந்தோம் ,மீண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
அருளைப் பெரும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை!.
அருளைக் கொடுப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவில்லை !.
அருள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
நரை,திரை,மூப்பு ,பயம் ,மரணம் இல்லாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!
மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!
மரணம் இல்லாமல் வாழலாம் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--
வையத்தீர் வான் அகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !
வாழ்க்கை என்பது என்ன ? எப்படி வாழ வேண்டும் என்ற எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கடலூர் மாவட்டம் வடலூர் என்னும், வடலூர் ஞான சித்திபுரம் என்னும் இடத்திற்கு வந்தால் தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு