வியாழன், 12 ஆகஸ்ட், 2021

அண்டங்களின் இயக்கம் !

 *அண்டங்களின் இயக்கம்!* 

(பொருமையாக படிக்கவும்.)

அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்எண்டற விளக்கு மென்றனிச் சித்தே!

அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுளபண்டமுங் காட்டிய பரம்பர மணியே!(அகவல்)

அண்டம் பேரண்டம். பிரமாண்டம் என்ற பெயர் இவ்வுலகத்திற்கு பலவாறாக சொல்லப்படுகிறது*

*நாம் வாழும் இவ்வுலகம் பஞ்ச பூத அணுக்களின் கலவை நிறைந்த உலகம்.*

*இந்த உலகத்தின் வடிவம் தட்டை என்றார்கள்*.

*உருண்டை என்றார்கள் இரண்டும் உண்மை அல்ல*.

*இந்த உலகத்தின் வடிவம் கோழிமுட்டை வடிவம் போன்றது*.

*இதுபோன்று எண்ணில் அடங்கா கோடானுகோடி உலகங்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு உள்ளன*. *இவைகள் பலகோடி மைல் வேகத்தில் ஓய்வு இல்லாமல் சுழன்றுகொண்டே உள்ளது* நாமும் பலகோடி மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு உள்ளோம்.

ஒவ்வொரு உலகங்களுக்கும் இடையில் உள்ளவெளி அளவில் அடங்காத வெற்றிடம் உடையதாகும்.

*எல்லா அண்டங்களும் உலகங்களும் ஒவ்வொன்றும் விரிந்து சுருங்கும் தன்மை உடையதாகும்*

*இந்த உலகங்களை இயக்கி கொண்டுள்ளவர் யார்?*  *அவர் எங்கிருந்து இயக்கிக் கொண்டுள்ளார்?*   *அவர் இருக்கும் இடத்திற்கு பெயர் என்ன?* 

*அவர் என்பதால் மனித உருவமா? அணு உருவமா? அருள் உருவமா ? வேறு ஏதாவது ஆற்றல் உடையதா ? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல்.மெய்ஞான ஆன்மீகவாதிகளும் விஞ்ஞான அணு அறிவியல் கண்டுபிடிப்பாளர்களும் ஒன்றுகிடக்க ஒன்றை சொல்லிக் கொண்டுள்ளார்கள்*.

*ஒவ்வொரு சமய மதம் சார்ந்த கர்த்தாக்களும் படைப்பாளிகளும்.போதகர்களும் மற்றும் சித்தர்கள் அருளாளர்கள் என்று மதிக்கப்படுபவர்களும் போற்றப்படுபவர்களும்* 

*அவரவர்களுக்கு தெரிந்த அறிந்த அறிவுசார்ந்த அனுபவத்தின் வாயிலாக கற்பனைக் கதைகளையும் அதில் வரும் கதாபாத்திரங்களான கதாநாயகன் கதாநாயகிகளுக்கும் பெயர் வைத்து அவர்களையே கடவுள்களாக படைத்துள்ளார்கள்* 

*அவர்கள் உண்மையாகவே இருப்பதுபோல் ஆலயங்கள்.

கோயில்கள்.

சர்சுக்கள்.

மசூதிகள்.

பிரமிடுகள்.

புத்தகயா போன்றவைகளை தோற்றுவித்து *அதற்கு தகுந்தாற்போல் இடம் வாகனம் ஆயுதம் வடிவம்  ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி ஜட தத்துவ உருவங்களை உருவாக்கி கடவுள்என நம்ப வைத்துள்ளார்கள்*.  

மேலும் தெய்வத்தினுடைய உண்மை என்னவென்று *அணுவளவும்*  தெரியாமல்  பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டி உள்ளார்கள் கைலாசபதி என்றும்.

வைகுண்டபதிஎன்றும் . சத்திய லோகாதிபதிஎன்றும். பரலோகம் என்றும். சொர்க்கம் என்றும் 

மேலும் துன்பம்தரும் இடத்திற்கு நரகம் என்றும் உண்மைக்கு புறம்பாகவே சொல்லிவைத்துள்ளார்கள்.

*இவைகள் எல்லாம் எங்கு இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள்*

மேலும் *கடவுள்களுக்கு குடும்பம் மனைவி குழந்தைகள் இருப்பதுபோல் காட்டி மக்களை நம்ப வைத்துள்ளார்கள்*.

*அண்டங்களையும் அவற்றை இயக்கும் மெய்ப் பொருளையும் கண்டுபிடித்தவர் வள்ளலார்.*

*வள்ளலார் கண்ட மெய்பொருளான கடவுளுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்று பெயர் வைத்துள்ளார்*. *அவ்வாறு விளங்குகின்ற ஆண்டவருக்கு இயற்கை உண்மை என்றும்.  இயற்கை விளக்கம் என்றும். இயற்கை இன்பம் என்றும் செயல்பட்டுக்கொண்டு உள்ளது எதுவோ அதுவே அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள்நிறைந்த பேரொளியாகும்*.

*அக்கடவுள் இயங்கும் இடம் அருட்பெருவெளி என்பதாகும்.அதாவது பஞ்ச பூதங்கள் அற்ற அருள் நிறைந்த பெருவெளியாகும்*.

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்செங்கோல் நடத்தும் இடத்தை கண்டு களித்து கனிந்து கலந்து வெளிப்படுத்துகிறார் வள்ளலார்!*

அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

அமைந்த சரா சர அளவு எவ்வளவோ அவ்வளவும்

கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும்

காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க

விண்டகு 

*பேரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே*

*விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி* *அருளாம்*

*தண்டகும் ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும்*

*தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே*.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

மேலும்.

அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்

கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்

கலந்தகலப்பு எவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே

விண்தகும் ஓர் நாதவெளி சுத்தவெளி மோன

வெளிஞான வெளிமுதலாம் வெளிகளெலாம் நிரம்பிக்

கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்த சிவமயமே

குலவுநடத் தரசேஎன் குற்றமும்கொண் டருளே.! 

*பல கோடி அண்டங்களையும் அதன்  இடையே உள்ள வெளிகளையும் அவற்றில் உள்ள பொருள்களையும் உயிர்களையும் படைத்தும். காத்தும். பக்குவம் வருவித்தும். தெளிவு செய்வித்தும். துரிசுநீக்கியும் ஐந்தொழில் செய்து கொண்டு உள்ள ஒரே கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*

*மேலே கண்ட அனுபவங்களை பெறுவதற்கும் காண்பதற்கும் முக்கியமானது அருளாகும்.அந்த உயர்ந்த பொருளாகிய அருளைப் பெறுவதற்கு தனித்தகுதி வேண்டும்.அருள் பூரணத்தை பெற்று பஞ்சபூத அணுக்களால் பின்னப்பட்ட ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றுவதே அருள் உடம்பாகும். அருள் உடம்பிற்கு மரணம் கிடையாது. அதற்கு மரணம் இல்லாத பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும்.* 

*வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்றதால் ஆண்டவரையும் அவரால் இயக்கப்படும் அண்டங்களையும் அவற்றில் கண்ட காட்சிகளையும் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்* வள்ளலார்.

மேலும் சொல்லுகின்றார்!

அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே

அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தியே

பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னை யே

பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னையே.* 

என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல்

எனக்கும்உனக்கும் இசைந்த பொருத்தமோ என்ன பொருத்தமோ இந்த பொருத்தம் பிறர்க்கு எய்தும் பொருத்தமோ என்று போற்றுகிறார்.

மேலும் ஒருபாடலில் சொல்கிறார்!

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையேஉன்னமுடியாது அவற்றின்

ஓராயிரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்உற்ற கோடாகோடியே

திருகலறு பலகோடி ஈசன்அண் டம் சதாசிவ அண்டம் எண்ணிறந்த

திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்சீரண்டம் என்புகலுவேன்

*உறுவும் இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்*

*உறுசிறு அணுக்களாக*

*ஊடசைய அவ்வெளியின்* *நடுநின்று நடனமிடும்*

*ஒருபெருங் கருணைஅரசே*

*மருவிஎனை ஆட்கொண்டு* *மகனாக்கி அழியா*

*வரந்தந்த* *மெய்த்தந்தையே*

*மணிமன்றின் நடுநின்ற* *ஒருதெய்வ மேஎலாம்*

*வல்லநட ராஜபதியே.!* 

*எல்லா அண்டங்களையும் இயக்கிக் கொண்டுள்ள ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே*

*ஒரு அண்டத்தையே அளக்க முடியாது தவிக்கின்றார்கள்* !

*ஒரு பஞ்சபூத உலகத்தின் ஐங்கருவிகளான மண் நீர் அக்கினி காற்று ஆகாயம் போன்றவற்றின் அகம் புறம் நடு கீழ் மேல் எவற்றையும் எந்த அளவுகோல் கொண்டும் மற்றும் கருவிகளைக்கொண்டும் அளக்கமுடியாது அளவுகாண முடியாது என்றால்.பலகோடி அண்டங்களையும் அவைகளை இயக்கும் இடமான அருட்பெருவெளியையும்.அங்கிருந்து எல்லாவற்றையும் இயக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் எவ்வாறு அளவு காணமுடியும்*

*வள்ளலார் பாடல்!*

கிளக்கின்ற மறைஅளவை ஆகமப் பேரளவை

கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவை 

அறிவளவை

விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங் காலம்

மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே

அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே

அன்றி ஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே

துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்

சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.! 

வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசம் சாத்திரங்களைக் கொண்டும்.

அவர்கள் பெற்ற மெய் அறிவைக்கொண்டும் ஞானயோகம் ஞானத்தில்ஞானம் பெற்ற அருளைக்கொண்டும் அளந்து பார்த்தார்கள் அளவுகாண முடியவில்லை.

மேலும் விஞ்ஞானம் அறிவியல் கணக்குகளைக்கொண்ட கருவிகளைக் கொண்டும் அளந்து பார்த்தார்கள்

அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்ததே அன்றி அளவு கண்டார் எவரும் இல்லை என்கின்றார். 

என்னால் ஒருவாறு அளவு சொல்ல முடியும் உங்களால் தெரிந்து கொள்ளமுடியமா ?என்றால் முடியாது.

கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்களால் மட்டுமே அளவு காணமுடியும் அளவு சொல்லமுடியும்.

அவ்வளவு அரிய பெரிய தெய்வம்தான் அருட்ஜோதிதெய்வம்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உலக மக்கள் எப்போது தெரிந்து கொள்கிறார்களோ அப்போதுதான் உலக உயிர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழமுடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு