செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

ஆன்மாவின் குடும்பம்!

 *ஆன்மாவின் குடும்பம்!*

ஆன்மாக்கள் பஞ்சபூத இவ்வுலகில் வாழ்ந்து  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறுவதற்காகவே  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

*ஆன்மா தனித்து வாழ்வதற்கு இங்கு வாய்ப்பு இல்லை. தனித்து வாழ்வதற்கு இவ்வுலகில் வாடகை வீடு கிடைப்பதில்லை*  

*எனவே ஒரு புதிய குடும்பத்தை ஆன்மா ஏற்படுத்திக் கொள்கிறது*

*குடும்பத்தின் விபரம் வருமாறு*!

வள்ளலார் குடும்ப கோரம்  என்னும் தலைப்பில்  சொல்லியதை சுருக்கமாக சொல்கிறோம்.

*ஆன்மாவிற்கு முதல் மனைவி ஆணவம் என்பதாகும்.முதல் மனைவி ஆணவத்திற்கு பிறந்த குழந்தை அஞ்ஞானம் என்னும் மூடப்பிள்ளை உயிர் என்னும் ஜீவன் என்பதாகும்* *அந்த ஜீவன் ஆன்மாவை விட்டு பிரிவதே இல்லை*.

*முதல் பிள்ளை மூடப்பிள்ள என்பதால் இரண்டாவது மனைவி கட்ட நேர்ந்தது*.

*ஆன்மாவிற்கு இரண்டாவது மனைவி மாயை  என்பதாகும்*

*மாயையைக்கு பிறந்த குழந்தைகள்*

*மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கு குழந்தைகள்* *நான்கு குழந்தைகளும் ஆன்மா மாயை சொல்லும் பேச்சை கேட்காத தருதலைகளாக இருந்தன.*

*மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்குபேரும் கூட்டு களவாணிகள்*

ஆதலால் *மூன்றாவது மனைவியாக காமியம் என்னும் கன்மத்தைக் கட்டிக் கொண்டது*.

*கன்மத்திற்கு பிறந்த குழந்தைகள் மூன்று அவை*.

*வாதம் பித்தம் சிலேத்துமம் என்பதாகும்*.

*ஆன்மாவைத் சேர்த்து மொத்த குடும்ப உறுப்பினர்கள் 12 நபர்கள்*.

*12 நபர் வாழக்கூடிய வாடகை வீடுதான் மனிததேகம்* *இந்த 12 நபர்களுக்கும் உருவமற்ற அருஉருவம் என்னும் அணு உணர்ச்சி  ஒளித்தன்மை உடையதாகும்..*

*மனித தேகத்திற்கு ஆறாறு முப்பத்தாறு முக்கிய தத்துவங்களால் ஆன உள் உறுப்புக்களைக்  கொண்டு தாங்கி இயங்கிக் கொண்டு உள்ளது* 

*வாடகை வீட்டிற்கு வசூல் செய்து  கொடுக்கும் வாடகை வீட்டின் தலைவர்கள்தான் வாத பித்தம் சிலேத்துவம் என்பதாகும்* *வாடகை என்பதுதான் குடிக்கூலி என்னும் உணவு (பிண்டம்) என்பதாகும்* 

*வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றும் வரையில் ஆன்மாவானது வேறு வேறு வாடகை வீட்டிற்கு தன் குடும்பத்துடன் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்* 

*இதில் மாயை என்னும் இரண்டாவது மனைவியின் குழந்தைகளான மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கரணங்கள்*.

*புற உறுப்புகளான கண் காது மூக்கு வாய் கை கால் உடம்பு போன்ற உறுப்புக்களை தன் வசமாகமாற்றுக்கொண்டு இஷ்டம் போல் செயல்பட்டுக்கொண்டே உள்ளது*. 

*மாயை கன்மம்  என்னும் இரு மனைவிகளும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் ஆன்மா சொல்வதை கேட்காமல் தங்கள் விருப்பம்போல் செயல்படுவதால் சொந்த வீடு கட்டிக்கொள்ள முடியாமல்  ஆன்மா வேறு வேறு வாடகை வீடாக மாற்றிக்கொண்டு  தவியாய் தவிக்கிறது.*

*பக்குவம் உள்ள ஆன்மா* ! 

*அபக்குவம் உள்ள ஆன்மாக்களை மேலே கண்ட சிக்கலில் இருந்து மீட்க வந்தவர்தான் பக்குவம் உள்ள ஆன்மா என்னும் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று பெயர்பெற்ற பரசுத்தமான பக்குவ ஆன்மாவாகும்* 

*ஆன்மாவின் குடும்பத்தின் உறுப்பினர்களான 12 நபர்களையும் வாடகை வீடான (ஜீவதேகம்) உடம்பையும் அழிக்காமல் அருளினால் மாற்றம் செய்து சொந்த வீடான ஆன்மதேகத்தில் வாழும் வழியைக் காட்ட வந்தவர்தான் ஆன்மஅருள் தேகம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் வள்ளலார்*

நாமும் வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து. *ஜீவதேகமான வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றி ஆன்மதேகம் என்னும் அருள்தேகத்தில் பேரின்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வோம்*

மாயையும் என்னும் மனைவியையும் கன்மம் என்னும் மனைவியையும்  அடக்கும் பாடல் !

*வள்ளலார் பாடல்!*

*பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை* *நீதான்*

*பெற்றவுடம் பிது* சாகாச் சுத்தவுடம் பாக்கி

ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன்* 

*இனிநின்*

*உபகரிப்போர்* *அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்*

*அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின்றது*  *நீ*

*அறியாயோ* என்னளவில் அமைகஅயல் அமர்க

தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ

*சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே*.! 

மேலும்...

கன்மம் எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே

*கங்குகரை காணாத கடல்போலே வினைகள்*

நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி

நடத்தினை நின் நடத்தைஎலாம் சிறிதும் நடவாது

என்முன் இருந் தனைஎனில் நீ அழிந்திடுவாய் அதனால்

இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்

இன்மையுற மாய்த்திடுவேன் *என்னையறி யாயோ*

*எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.*!

மேலே கண்ட பாடல்கள் போல் தத்துவவெற்றி என்னும் தலைப்பில் 20 பாடல்கள் ஆறாம் திருமுறையில் பதிவு செய்துள்ளார்.

படித்து உணர்ந்து தெளிவுபெற்று பயன் பெறவும்.

*ஆன்மாக்களின் வாழ்க்கை முறை குழப்பத்திற்கு அடிப்படைக் காரணம் சமயங்கள் மதங்கள் காட்டிய ஆன்மீக வாழ்க்கை  வழிமுறைகளே என்று சொல்லி குடும்பகோரத்தை நிறைவு செய்கிறார்* !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு