திங்கள், 20 ஜனவரி, 2020

பஞ்ச பூத உலகம் !

*இந்த பஞ்ச பூத உலகம்* !

*பஞ்ச பூத உடம்பை பாதுகாக்க தெரிந்தவர் எவரோ அவரை இறைவன் தொடர்பு கொள்வார்*.

பஞ்ச பூதங்கள் அளவில்லா ஆற்றல் உடையது வேண்டியதை கொடுக்கவும் செய்யவும்.
செயல்படவும் வல்லமை உடையது. தங்களைப் படைத்த உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையை மீறாமல் செயல்படும் உண்மைத் தன்மை உடையவைகளாகும்.

*ஐந்து பூதங்களும் ஒற்றுமை உடையதாகும்.ஐந்து பூதங்களும் ஒன்று சேர்ந்தால் தான் உடம்பும் உயிரும் ஆனமாவும் இயங்க முடியும்*.

நாம் வாழ்வதற்கும் வாழ்க்கைக்கும் தேவையான பொருள்களை மட்டுமே கேட்கிறோம்.எண்ணம் சொல் செயல்களுக்கு தகுந்தாற்போல் பஞ்ச பூதங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அதனால் என்னலாபம் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை உடல் உயிர் உணர்ச்சிக்கு மட்டுமே பயன் தருகின்றது.அதே பொருள் இறுதியில் உடல் உயிர் உணர்ச்சியை பலி வாங்கிக் கொள்கிறது.

எல்லாவற்றுக்கும் காரண காரியமாக இருப்பது எண்ணம் சொல் செயல்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். *இந்த மூன்றுக்கும் தலைமையேற்று நடத்துவதுதான் மனம் என்னும் கருவியாகும்*.

பஞ்ச பூத எல்லையைக் கடந்து செல்லும் ஆற்றல் ஆன்மாவிற்கு உண்டு என்பதை நாம் அறிந்து கொள்வதில்லை.

பஞ்ச பூத உடம்பில் வாழும் நாம் ஆன்மா என்னும் உள் ஒளியைத் தொடர்பு கொள்வதில்லை. *ஆன்மாவைத் தொடர்பு கொண்டு வாழ முடியாமைக்குக் காரணம் நம் முன்னோர்கள்.நம் முன்னோர்கள் தவறான வழியைப் பின்பற்றுவதற்கு காரணம். நமக்கு வழிகாட்டிய சாதி.சமய மதக்கொள்கைகள் வழிப்பாட்டு முறைகளாகும்*.

பஞ்ச பூத உருவங்களை கடவுளாக படைத்தவர்களால் நம் எண்ணம் சொல் செயல்களைத்  தவறான வழியைப் பின்பற்ற வைத்துள்ளன.

வள்ளலார் வந்துதான் மனித குலத்தின் நன்மைக்காக எல்லாவற்றையும் மாற்றி அமைக்கிறார்.

பஞ்ச பூதங்களைப் படைத்தவர் யார் ? என்பதை அறிய முயற்சிக்கிறார்.
அதற்காக தன்னுடைய எண்ணம் சொல் செயல்களை மாற்றுகிறார் *நீ எதை நினைந்து உணர்கின்றாயோ அதுதான் உம்மை அழைத்துச் செல்லும்*

வள்ளலார் பாடல் !

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் -

உண்ணுகின்றேன்
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.!

இந்த உலகம் நமக்கு உபகாரம் செய்யுமே தவிர கெடுதல் செய்யாது.
எல்லாவற்றுக்கும் காரணம் நம் எண்ணமே காரணமாக இருக்கிறது.

*எனவே நமது எண்ணம் சொல் செயல் உணர்ச்சியை நம்மை இயக்கும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்*.

அதற்கு என்ன செய்ய வேண்டும் ?

பஞ்ச பூத உலகில் உள்ள பொருள்கள் மீது பற்று வைத்துள்ள மனத்தை ஆன்மாவில் தொடர்பு கொள்ளச் சொல்லுகின்றார் அவரும் சொல்லிய வண்ணம் அதையேத்தான் அவரும் செய்கின்றார். 

புற வழிப்பாட்டில் செல்லும் மனத்தை அகவழிபாட்டில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்றார்.

*அக வழிபாடு என்பது ஆன்மா என்னும் உள் ஒளியைத் தொடர்பு கொள்வதாகும்*.

அகத்தில் தொடர்பு கொள்ளும் போது பஞ்ச பூத உடம்பானது தன்னையைத் தானே பாதுகாத்துக் கொள்ளும்.

*ஆன்மாவிற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் மட்டுமே தொடர்பு உண்டு*.

ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் போது ஆன்மாவில் இருந்து உண்மை அறிவு வெளிப்படும்.உண்மை அறிவுக்கு ஆன்ம அறிவு என்றும்.பகுத்தறிவு என்றும் மெய் அறிவு என்றும் பெயர்

*ஆன்ம அறிவுதான் அருளைத் தேடும்.அருள் பெற்ற பிறகு அருள் அறிவு உண்மை அறிவாக மாற்றம் அடையும்*.

உண்மை அறிவுதான் உண்மையான அன்பு தயவு கருணைக்கு வழிகாட்டும்

அருள் அறிவு இயற்கை உண்மை அறிவைத் தொடர்பு கொள்ளும். *இயற்கை உண்மைதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்*.

இயற்கை உண்மை வடிவினரை கண்டு பிடித்தவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

1. அணையவாரீர் என்னை
அணையவா ரீர்
அணிவளர் சிற் றம்பலத்தீர்
அணையவா ரீர்.

கண்ணிகள்!

2. இயற்கைஉண்மை வடிவினரே அணையவாரீர்
எல்லாம்செய் வல்லவரே அணையவாரீர்
இயற்கை விளக்கத்தவரே
அணையவா ரீர்

எல்லார்க்கும் நல்லவரே அணையவாரீர்
இயற்கை இன்பமானவரே
அணையவாரீர்
இறைமை யெலாம் உடையவரே அணையவாரீர்
இயற்கை நிறைவானவரே
அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவாரீர். அணையவாரீர்

3. உலகமெல்லாம் உடையவரே அணையவாரீர்
உண்மை உரைக்கின்றவரே
அணையவாரீர்

கலகம் அறுத்து  ஆண்டவரே அணையவாரீர்
கண்ணனைய காதலரே அணையவாரீர்
அலகறியாப் பெருமையரே
அணையவாரீர்

அற்புதப்பொற் சோதியரே
அணையவாரீர்

இலகு சபாபதியவரே அணையவாரீர்
என்னுடைய நாயகரே அணையவாரீர். அணையவாரீர்!

மேலே கண்ட பாடலில் தெளிவான உண்மையை பதிவு செய்துள்ளார்.

*இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயக்கை இன்பம் தருபவர் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறுகின்ற போது பஞ்ச பூதங்களால் பின்னப்பட்ட உடம்பிற்கும் உயிருக்கும் எந்த விதமான அழிவும் ஆபத்தும் உண்டாவது இல்லை.

*பஞ்ச பூத உடம்பு அழியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே பஞ்ச பூதங்கள் விரும்பும்*.பஞ்ச பூதங்கள் ஆன்மாவிற்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் என்றும் துணையாக இருக்கும்.

இந்த உண்மை அறியாமல் இருந்த்து இந்த உலகம். *வள்ளலார் வந்து திரை மறைப்பை எல்லாம் நீக்கி.ரகசியம் என்னும் போலியான பூட்டை உடைத்து எரிந்து விட்டார்*.ஆன்மாவின் உண்மையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்.

உலகில் உள்ளது அனைத்தும் பொய்யானது.அநித்தியமானது.எதையும் நம்ப வேண்டாம் பின்பற்ற வேண்டாம் என்னும் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம்
இன்பமுறலாமே.!

இந்த ஒருபாடலே போதுமானது ..

ஆன்மநேய அன்புடைய ஆன்மீகவாதிகளும். சன்மார்க்க சொந்தங்களும் வள்ளலார் கொளகையைப் பின்பற்றி
 உடம்பு உயிர் ஆன்மாவை அழிக்காகல்.இயற்கை உண்மை கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறிய உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு