ஞாயிறு, 19 ஜனவரி, 2020

ஒளி பிறந்தது !

ஒளி பிறந்தது !

 மனித குலத்தை நல்வழிப்படுத்த அருட்பேரொளி மனித உருவம் தாங்கி இவ்வுலகிற்கு வந்த்து.

 அந்த மனித உருவத்திற்கு திருஅருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் சூட்டப்பெற்றது.

வள்ளலார் பிறந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள சிறிய கிராமம் மருதூர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரத்திற்கும் வடலூருக்கும் இடையே உள்ளது.

பெற்றோர்.

தந்தை பெயர் இராமைய்யா.தாயார் பெயர் சின்னம்மை.இராமைய்யா கிராக கணக்கராக பணியாற்றியவர்.கிராம பிள்ளைகளைக் கூட்டி பாடம் சொல்லிக்கொடுக்கும் பணியையும் செய்து வந்தார்.

மனைவி சின்னம்மையார் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்னகாவணத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இராமைய்யாவிற்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர்.ஐந்து மனைவியரும் குழந்தைகள் இன்றி ஒரவர்பின் ஒருவராக்க் காலமானபின் இவரை ஆறாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு