வியாழன், 19 செப்டம்பர், 2019

உள் ஒளியே உண்மைக்கடவுள் !

உள் ஒளியே உண்மைக் கடவுள் !

உலகை படைத்த இறைவன் உயிர்களைப் படைத்த இறைவனை ! உண்மையான இறைவனை.
இந்த உலகத்திற்கு  வரவைத்தவர் வள்ளல்பெருமான்

*அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்*.

அவர்தான் எல்லா உலகத்தையும்.எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள்களையும் படைத்தவர்.அவரே உண்மையான தெய்வமாகும்.

அவர்தான் தாயாகவும் தந்தையாகவும் தாங்கிக் கொண்டு எல்லா உயிர்களையும்  காப்பாற்றிக் கொண்டும் உள்ள தெய்வம்.

வள்ளலார் பாடல் !

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்

வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்

காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்

சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!

தாயாகவும்.
தந்தையாகவும் என்றால் .உபகாரத் தாய் தந்தை என்பவர்களின் ஆன்ம சிற்றணுவாக  இயங்கிக் கொண்டும் தாங்கிக் கொண்டும்.இயக்கிக் கொண்டும்  இருப்பவரே அருட்பெருஞ்ஜோதி என்னும் உள் ஒளியாகும்.

அவர்தான் ஆன்மாவின் உள்ளே அருள் ஒளியாக இருக்கின்றார்.

அந்த அருள் ஒளி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டுள்ளது.

மனித உடம்பில் சிறப்பிடம் பெற்று சிரநடுவில் ஆன்மாவின் அறிவு விளங்கும் விதமாக இருக்கின்றது. எனவேதான். உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களாக போற்றப்படுகின்றது.

சிரநடுவில் ஆன்மா அங்கு இயங்குவதால் அதற்கு சிற்சபை என்றுபெயர்.

சிற்சபையில் உள்ள ஆன்மாவை நாம் இடைவிடாது தொடர்பு கொள்வதே வழிபாடாகும்.

ஆரம்பத்தில் சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியாது என்பதால். புறத்திலே ஒளிவழிபாடு செய்யச் சொல்லி உள்ளார் வள்ளலார்.

புறத்தில் உள்ள விளக்கு ஜோதி கடவுள் அல்ல..
ஆனாலும் புறத்தில் உள்ள  இருளைப்போக்கும் தன்மை உடையது.

புற உருவ வழிபாடு இருளைப்  போக்காது.அந்த உருவத்தைப் பார்ப்பதற்கும் ஒளிதான் காட்டப்படுகின்றது.

எனவேதான் உருவ வழிப்பாட்டை விட ஒளிவழிபாடு சிறந்த்து.

நம் உடம்பில்.வீட்டில் உள்ள தீவினை என்னும் இருளைப்போக்க ஒளிவழிபாடு மிகவும் சிறந்ததாகும்.

நாம் ஒவ்வொருவரும் உண்மையான இறைவனை வணங்கி  வழிபாடு செய்யவேண்டும்.

நம்முடைய சிர நடுவில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருப்பதுதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

நாம் ஒவ்வொருவரும் வீட்டில் ''ஒளி என்ற தீபத்தை'' வைத்து வணங்குகங்கள் வழிபடுங்கள் இறைவன் உங்கள் வீட்டிற்கும் உங்களுக்கும்  *பாது காப்பு வளையமாக* இருந்து காப்பாற்றுவார் .

உங்களின் துன்பங்கள் யாவும் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்துவிடும்.

உங்கள் துன்பம் தொலைந்து இன்பம் பெருகும் .இருள் விலகி, ஒளி வீசும்.எல்லா நன்மைகளும் தேடிவரும்.

நீங்கள் புறத்தில் வணங்கி வழிபாடு செய்து கொண்டு இருக்கும் தெய்வங்கள் அனைத்தும் கற்பனைத் தெய்வம் என்றும்.தத்துவ விளக்கம் என்றும்  புரிந்து.தெரிந்து.
அறிந்து கொண்டாலே உண்மை தானே விளங்கும்.

உண்மை எது ? பொய் எது ? என்பதை தெரிந்து கொள்ளவே மனிதனுக்கு உயர்ந்த அறிவு விளக்கம் தரப்பட்டுள்ளன.

எல்லா தெய்வங்களையும் படைத்தவர்களே ! உண்மையான.. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தேடிக் கொண்டும். அலைந்து கொண்டும் தான் உள்ளார்கள்.

அந்த இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இவ்வுலகிற்கு வரவைத்தவரே !  நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன் கலந்து எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்துகொண்டும் உள்ளார்.

அவரை யார் யார் விசுவாசமாக நினைக்கின்றார்களோ அங்கே காரியப்படுவார் என்பது சத்தியம்.

எனவே நீங்கள் நேரடியாக இறைவனைக் காண முடியாது .

எனவே உங்கள் வீட்டில்.
அலுவலகங்களில் ஒளியை வைத்து வழிபாடு செய்யுங்கள்,

எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி !
என்பார் வள்ளல்பெருமான்.

அதே நேரத்தில் ஜீவகாருண்யம் ரொம்ப முக்கியம்.நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தால் போதுமானதாகும்..

மேலும் உயிர்க்கொலை செய்யாமலும்.புலால் உண்ணாமல் இருந்தால்.உங்களை இறைவன் உடனே ஆட்கொள்வார்.

உண்மை உணர்ந்து நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு