வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மனித உடம்பின் அவசியம் !

மனித உடம்பின் அவசியம் !

மனித உடம்பை இயக்குவது ஜீவன் என்னும் உயிர் ! உயிரை இயக்குவது ஆன்மா என்னும் உள்ஒளி !ஆன்மாவை இயக்குவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் பேரோளி !

உலகில் வாழ்வதற்கு ஆன்மாவை அனுப்பி வைத்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். ஆன்மாக்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு உயிரும் உடம்பும் தேவைப்படுகின்றது.

உடம்பு என்னும் வீடு கட்டுவதற்கு ஏழு வித அணுக்களான வாலணு.திரவவணு.குருஅணு.
லகுஅணு.அணு.பரமாணு.விபுவணு.
தேவைப்படுகிறது.அணுக்களை இணைப்பதற்கு.நீர்.நிலம்.அக்கினி.
காற்று.ஆகாயம் என்னும்  பஞ்சபூத அணுக்கதிர்கள் தேவைப்படுகின்றது.

இவைகளை இயக்க.நிர்வாகம் செய்ய மாயை.மாமாயை.பெருமாயை என்னும்  இயற்கை விளக்கம் கொண்ட அருள் அணு ஆற்றல் தேவைப்படுகின்றது.

இவைகள் எல்லாம் உள்ளடக்கியதுதான் இந்த பஞ்சபூத உலகம் என்பதாகும்.

இந்த உலகத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்ததின்  நோக்கம்.ஆன்மாக்கள் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டதாகும்.

இந்த உலகம் முழுவதும் பலவகையான அணுக்கூட்டங்கள் நிறைந்துள்ளன.ஒவ்வொரு அணுக்களுக்கும் ஒவ்வொரு தனித்தனமை உண்டு.

இந்த அணுக்கூட்டங்களில் பொது ஸ்தானங்கள் பத்து.அவை மண்.ஜலம்.அக்கினி.காற்று.வெளி.
பிரகிருதி.மாயை.சூரியன்.சந்திரன்.நட்த்திரங்கள் ஆக பத்து இடங்களாகும்.

இந்த பத்து பொது ஸ்தானங்களில் காரண காரிய அணுக்களால்.ஆன்மாவிற்கு.உயிர்.
உடம்பு கட்டிக் கொடுக்கப்படுகிறது.

பூத ஆகாயத்தில்.இருக்கும் சாதாரண.அசாதரண அணுக்கள் ஏழுவகையும் ஒன்றுசேர்ந்தால் உயிர் உடம்பு கட்டிக்கொள்ளும்.

 ஆன்மாக்கள் இவ்வுலகில் வந்து வாழ்வதற்கு.தாவரம்.ஊர்வன.பறப்பன.நடப்பன.தேவர்.அசுர்ர்.மனிதர் போன்ற எழுவகையான பிறப்பும். 84 லட்சம்  யோனிபேதங்களும் எடுக்க.பிறப்பும் இறப்பும் உடம்பும் உயிரும் சேர்ந்து வாழ்வதற்கு.மாற்றி மாற்றி ஒவ்வொரு தேகமும் கட்டிக்கொடுக்கப்படுகிறது.

இறுதியாக கிடைப்பதுதான் மனித்தேகம் (உடம்பு).மனிதவாழ்க்கையாகும்.

இந்த மனித தேகத்திற்கு மட்டுமே உயர்ந்த அறிவு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதவாழ்க்கையில் நாம் பெற வேண்டியது .மீண்டும் பிறப்பு அல்ல.
இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவு கொடுக்கப் பட்டுள்ளது.

நித்திய தேகமாக மாற்றிக் கொள்வதற்கு நம்மை அணுப்பிய உண்மைக்கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே மனித ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்பு செய்து.அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்.

பலவேறு கற்பனைகளாற்.பலவேறு சமயங்களிலும்.மதங்களிலும்.பலவேறு மார்க்கங்களிலும்.பலவேறு லடசியங்களைக் கொண்டு.நெடுங்காலம்.பிறந்து பிறந்து.அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவுமின்றி.விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால்.துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண்போயினோம் வீண் போகின்றோம்.

ஆதலால்  இனிமேலும் வீண்போகாமல்  ஜீவர்களாகிய நாம் மற்ற ஜீவர்களிடத்தில் உண்மை அறிவு.உண்மை அன்பு.உண்மை இரக்கம் முதலிய நற்செய்கை உடையவர்களாய் வாழ்ந்தால்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மீது தனிப்பெருங்கருணை கொண்டு.ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்.அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளை விலக்கி அருளை வாரி வாரி வழங்குவார்.

நாம் மனித்தேகம் கிடைத்த பலனை அனுபவித்து.சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் பெற்று.இத்தேகத்தையே நித்திய தேகமாக மாற்றி.என்றும் அழியாத.அழிக்க்க முடியாத மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து நம் தந்தையின் வீடான அருட்பெருவெளி என்னும் மேல்வீட்டு கோட்டையின் சாவியைப் பெற்று கதவைத் திறந்து உள்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இதுவே மனிதவாழ்க்கையின் ரகசியமாகும்.அவசியமாகும்.

வள்ளலார் பாடல் !


மேலே கண்ட பாடலில் உடம்பு வந்தவகையும்.உயிர்வந்த வகையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

நம் ஆன்ம ஒளியை அனுப்பிய. எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து.அறிந்து தொடர்பு கொண்டு வள்ளலார்  அருள்பூரணத்தைப் பெற்று மரணத்தை வென்றார்.

நாமும் வள்ளலார்போல் தெரிந்து அறிந்து. அவர்காட்டிய பாதையிலே தடம்மாறாமல் சென்று வாழ்ந்து மரணத்தை வெல்வோம் மகிழ்ச்சி யுடன் வாழ்வோம்..

குறுக்கு வழியில் செல்வோம் எனநினைத்தால் மரணம் நிச்சயம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு