ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

வாழ்க்கை வாழ்வதற்கு !

*வாழ்க்கை வாழ்வதற்கே !*

எல்லோரும் படிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

எல்லோரும் பேசத் தெரிந்து இருக்கின்றார்கள் !

பணம் சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள்.!

பொருள்களை  சம்பாதிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

பட்டம் பதவியை சம்பாதிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

புகழை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !.

காதல் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

திருமணம் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள் !.

குடும்பம் நடத்த தெரிந்து இருக்கின்றார்கள் !

குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

அழகு அழகுவாய்  வீடு கட்டத் தெரிந்து இருக்கின்றார்கள்,!

விதவிதமாய் கார்கள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.

பணத்தை மறைத்து வைக்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

விதவிதமாய் நகைகள் வாங்கத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

வித விதமாய் துணிமணிகள் வாங்க தெரிந்துள்ளோம்.

மெய்யான உடம்பிற்கு பொய்யான அலங்காரம் செய்ய பழகி இருக்கோம்  !

வெளி நாடுகளைச் சுற்றிப் பார்க்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

அறிவியலைத் தெரிந்து இருக்கின்றார்கள் !

விஞ்ஞானத்தை தெரிந்து இருக்கின்றார்கள் !

சண்டை போட தெரிந்திருக்கிறார்கள் !

உயிர்களை கொலை செய்ய தெரிந்திருக்கிறார்கள் !

புலால் உண்ணத் தெரிந்திருக்கிறார்கள் !

பொய்யான கோயிலுக்குப் போக தெரிந்துள்ளோம் !

அபிஷேகம் ஆராதனைகள் போன்ற பொய்யான வழிபாடு செய்யத் தெரிந்துள்ளோம் !

மற்றைய எல்லாம் தெரிந்து
இருக்கின்றார்கள் !.

தன் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற மட்டும் தெரிந்து கொள்ளவில்லை.

எப்போதும் அழிவில்லாத துன்பம்.துயரம்.அச்சம் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ தெரிந்து கொள்ளவில்லை !.

உண்மையான ஆன்மீகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவில்லை !

தன் ஆன்மாவைப் பற்றியும்.தன்உயிரைப்பற்றியும்  தெரிந்துகொள்ளவில்லை !

உண்மையான கடவுள் யார் ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

மரணம் ஏன் ? வருகிறது .அவற்றை தடுக்கும் வழி என்ன? என்பதை தெரிந்து கொள்ளவில்லை !

நம்முடைய வாழ்க்கையின் ரகசியம் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

நாம் எங்கு இருந்து வந்தோம் ?  ,மீண்டும் எங்கு செல்ல வேண்டும் ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

இறைவனிடம் அருளைப் பெரும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை!.

அருளைக் கொடுப்பவர் யார் ?  என்பதை தெரிந்து கொள்ளவில்லை !.

அருள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

நரை,திரை,மூப்பு ,பயம் ,மரணம் இல்லாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!

மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!

மரணம் இல்லாமல் வாழலாம் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வையத்தீர் வான் அகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !

வாழ்க்கை என்பது என்ன ? எப்படி வாழ வேண்டும் என்ற எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால்.

தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் வடலூர்  ஞான சித்திபுரம் என்னும்  இடத்தில் தோற்றுவிக்கப் பட்டுள்ள.*சத்திய ஞானசபைக்கு* வந்தால் தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்.அங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உலக உயிர்களுக்கு அருள் வழங்கிக்கொண்டுள்ளார்.என்பது உண்மையாகும்.

வள்ளலார் காட்டும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் கொள்கைகளைப் படித்து தெரிந்து பின்பற்றி வாழ்ந்தால். மரணம் அடையாமல் மகிழ்ச்சி யுடன் வாழும் வழியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் புரியவைப்பார்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு !

எனவேதான் வருவார்கள் அழைத்து வாருங்கள் வடலூர் வடதிசைக்கே.வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்று உலக மாந்தர்களை அன்புடன்.தயவுடன்.கருணையுடன்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு