வியாழன், 12 செப்டம்பர், 2019

அட்சய பாத்திரமாக மாறியது !

அட்சய பாத்திரமாக மாறிய அற்புதம் !

ஒருநாள் இரவு தருமச்சாலையில் வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.மீதம்உள்ள சாதம் மூன்றுநபர் மட்டும் சாப்பிடலாம்.எல்லோரும் ஓய்வு எடுக்க சென்று விட்டார்கள்.

தீடீர்என்று 100 நபர்கள் உணவு சாப்பிட வந்துவிட்டார்கள்.தருமச்சாலை நிர்வாகி வள்ளல்பெருமான் இடம் சொல்ல.

எல்லோரையும் அமரவைத்து இலைபோடுங்கள் நான்வருகிறேன் என்று சொல்ல .அவர்சொல்லியபடி அமரவைத்து இலைபோட்டார்கள்.

வள்ளலார் மீதமுள்ள உணவின் பாத்திரத்தை எடுத்து அவர்கையாலே பரிமாறினார்.அனைவரும் வயிறாற உணவு உட்கொண்டார்கள்.

அந்த தட்டில் உள்ள உணவு குறையாமல் அப்படியே இருந்த்தைப் பார்த்து தருமச்சாலையில் உள்ள அன்பர்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்..

வள்ளலார் இங்கு நடந்த்தை வெளியில் சொல்ல வேண்டாம் என கட்டளையிட்டார்.அன்பர்கள் மூலமாக வெளியே கசிந்துவிட்டது...வள்ளலின் தயவான அன்புகரங்கள் அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமாக மாற்றியது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்செயலே என்று போற்றி புகழ்கின்றார்..

எனக்குள்நீயும் உனக்குள்நானும் இருக்கும் தனமையே
இன்று காட்டிக்கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மையே
தனக்குள்ளது தன்தலைவர்க் குளதென் ற்றிஞர் சொல்வதே
சரியென் றெண்ணி எனதுமனது வெல்வதே.

எனக்கும் உனக்கும் இணைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்தமோ !

அருட்பெருஞ்ஜோதி...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு