திங்கள், 20 நவம்பர், 2017

சொல்லிவிட்டு செல்வது மரணம் !.

சொல்லிவிட்டு செல்வது மரணம் !. சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.! சொல்லிவிட்டு செல்வது மரணம் !.சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.! சொல்வேன் .சொல்லுகிறேன் சொல்லிக் கொண்டே இருப்பேன்.உங்களை எப்படியும் திருத்திவிடுவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னிடம் உள்ளது. நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் ,திருப்பு மயக்கம் இன்றி மரணம் இல்லாமல் .மரணத்தை வென்று வாழ முடியும், வாழ வேண்டும்.என்பதுதான் என் பேராசையாகும். உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் ஆன்மா என்னும் ஒளியானது இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதை.அறிவலே. அருளாளே அறிந்தேன்.அதனால் என்னுளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதர சகோதரிகள் என்னும் உண்மையை அறிந்து கொண்ட காரணத்தினால்... . குறிப்பித்தேன்,குறிப்பிக்கின்றேன் .குறிப்பிப்பேன் . இந்த உலகத்தில் உண்மை சொல்ல வந்தாலும் உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.மூடமாகவே இருக்கின்றார்கள்.உங்களின் மூடநம்பிக்கையை நிச்சயம் விலக்கி விடுவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நான் மரணம் அடையாமல் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் .ஆதலால் இனி எல்லாவரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த உலக உண்மையை அறிந்து கொள்வதற்கும் .உங்கள் ஆன்மாவையும், உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் பாது காப்பதற்கும் இனி எந்த சாதி,சமயம்,மதங்களும் தடை கிடையாது.தடைகளை எல்லாம் நீக்கி விட்டேன்.இப்போது நடந்து கொண்டு உள்ளது *சுத்த சன்மார்க்க காலம்...* ''உங்களை அழித்துக் கொண்டு இருப்பது உலகில் உள்ள சாதிகள் ,சமயங்கள் மதங்களால் உருவாக்கப் பட்ட ஆச்சார .சங்கற்ப விகற்பங்களும்,,வருணம் ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்பங்களும்.ஒவ்வொரு ஆன்மாவின் உண்மைத் தன்மையை தெரியவொட்டாமல் திரைகள் போல் மறைத்துக் கொண்டு உள்ளன .'' இப்போது நான் சொல்லிய பிரகாரம் உண்மை அறிவாய்.உண்மை அன்பால்.உண்மை இரக்கத்தால் இடைவிடாது விசாரம் செய்து கொண்டு வாருங்கள் தெரிவிக்க வேண்டியதை.ஆண்டவர் நிச்சயம் தெரிவிப்பார். அதற்கு அவசியம் காரிய காரணமான தயவும். ஒருமையும் அவசியம் இருக்க வேண்டும். எல்லா உயிர்களும் ஒன்று என்று அறியும் உண்மை அறிவு விளக்கம் பெற வேண்டும்.அறிவு விளக்கம் பெற தயவும் ஒழுக்கமும் கலப்படம் இல்லாமல் நேர் கோட்டில்.நேர் வழியில் செயல்பட வேண்டும். அறிவை உள் அடக்கி.அருளை உள் அடக்கி வெளியே தோன்றாமல் இயக்கி இயங்கிக் கொண்டு இருப்பது தான்ஆன்மா என்னும் உள் ஒளியாகும். தான் யார் என்னும் உண்மையை அறிந்து கொண்டால். ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்ன என்பது தெரியவரும். அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள கருணை என்னும் நன் முயற்சி அதிகமாக இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டுக் கொண்டு இருந்தால் உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்கள் ஆன்மா குடியிருக்கும் (உடம்பு) இல்லம் தேடி வருவார் . வந்தவுடனே எல்லா நன்மைகளையும் சுலபமாகப் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம் ,இது சத்தியம் ..இது சத்தியம்.இஃது ஆண்டவர் கட்டளை என்று....வள்ளல்பெருமான் சொல்லுகின்றார்.. நாம் கேட்கிறோமா ? கேட்க மாட்டோம் என்ற உறுதியுடன் இருக்கின்றோம்.. எனவே கண்ட கண்ட நூல்களைப் படித்து.அதில் உள்ள குற்றங்கள் தெரியாமல். அறிவை மழுங்க வைக்கும் வார்த்தைகளை நம்பி அலைந்து கொண்டு செல்லாதீர்கள்.வீண் காலம் கழிக்காதீர்கள்.இறுதியிலே மரணம் என்னும் பெறும் பாவி வந்து விடும்.அவற்றை தடுக்க எவறாலும் முடியாது என்கிறார் வள்ளலார். வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.! கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணேஉண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரேவிண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தேஎண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.! மேலே கண்ட பாடலில் உள்ளபடி.கண்டது எல்லாம் அநித்தியமானது.கேட்டது எல்லாம் குற்றம் உடையது.கற்றது எல்லாம் பொய்யானது.களித்தது எல்லாம் வீணானது.நாம் உண்டது எல்லாம் மலமானது.தெரிந்து கொண்டது எல்லாம் குறைபாடு உடையது.இதுவரையில் உண்மை என்னவென்று தெரியாமல் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.இனிமேலாவது நான் சொல்லியதை தயவு செய்து கேளுங்கள் என்கிறார் வள்ளலார். உலக மக்களைத் திருத்த திருந்தி வாழ்வதற்காக .மெய் நெறியான சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து மெய்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு .என்றும் அழியாத அழிக்க முடியாத அருளைப் பெற்று மரணத்தை வென்று இறவாமல் வாழும் வாழ்க்கையில் வாழ்வோம். வாழ்வோம்! வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! அன்புடன்.ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு