சனி, 4 நவம்பர், 2017

ஆன்ம நேயம் கொண்ட அறிவு ஜீவிகளே வந்தனம்.

ஆன்ம நேயம் கொண்ட அறிவு ஜீவிகளே வந்தனம்.

ஈரோடு கதிர்வேல் வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை மறைக்காமல் வெளிப்படையாக சொன்னால்.சில சமய மத சன்மார்க்கிகளுக்கு வருத்தமாக உள்ளது..

வள்ளலார் ஆயிரக்கணக்கான பாடல்களில் சமய மதங்களின் சூதுகளையும்.அவர்கள் தோற்றுவித்துள்ள .உண்மைக்கு புறம்பான தெய்வங்களையும். சகட்டு மேணிக்கு சாடுகின்றார்.வள்ளலார் சொல்லி. உள்ளதை நான் வெளிப்படையாக சொல்கிறேன்...வள்ளலார் சொல்லாத எந்த செய்திகளையும் நான் வெளியிட மாட்டேன்..

உண்மையை இனி யாராலும் மறைக்க முடியாது..மேல் புல்லை மேய்வதால் பயன் ஒன்றும் இல்லை.ஆழமாக சிந்தித்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்....

வள்ளலார் சாதி சமய மதங்களை சாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கில் திருஅருட்பாவில் உள்ளன.

அதிலே சில பாடல்களை கீழே பதிவு செய்துள்ளேன் பொருமையாக.அறிவு தெளிவுடன் ஊன்றி படியுங்கள் உண்மை விளங்கும்.....

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்சேர்கதி பலபல செப்புகின் றாரும்பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையேபிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியேதள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.!

எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரேஇறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலேகதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலேசேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.!

எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்றுகைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்றுகைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போவிதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகாவித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்அதுஇது என்னாமல் ஆடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!

சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம்சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போவிதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகாவித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்அதுஇது என்னாமல் ஆடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி!


வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்வேதாக
மத்தின் விளைவறியீர் - சூதாகச்சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலைஎன்ன பயனோ இவை.!

சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.!

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!!

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுபநீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்றபேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.!

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!

சாதியு மதமுஞ் சமயமுங் காணாஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!

மேலே கண்ட பாடல்களை படித்து விட்டு.நான் எழுதிய கருத்துக்களில் தவறு இருந்தால் என் மீது குறை சொல்லுங்கள் .

இன்னும் வள்ளலார் சொல்லியள்ள காட்டியுள்ள சுத்த சன்மார்க்கத்தை .கொள்கைகளை ...சாதி.
சமய மதங்களைக் கொண்டு மறைத்துவிட முடியாது.

ஏமாந்து விடுவீர்கள் ...உங்களை காப்பாற்ற சமய மதக் கடவுள்களால் எக்காலத்திலும் முடியாது.அருட்பெருஞ்ஜோதி யால் மட்டுமே காப்பாற்ற முடியும்

ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.!

சிந்தியுங்கள் செயல்படுங்கள்....

என்னை யார் திட்டினாலும் வஞ்சித்தாலும் நான் எப்போதும் அஞ்சமாட்டேன்..எனக்கு வேஷம் போட தெரியாது... உண்மை மட்டுமே தெரியும்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு