சனி, 25 நவம்பர், 2017

ஒன்பது ஓட்டையை அடைக்கத் தெரிந்தவனே மனிதன்!

ஒன்பது ஓட்டையை அடைக்கத் தெரிந்தவனே மனிதன்! உலக போகத்திற்காக மனித உடம்பில் ஒன்பது துவாரம மாயையால் படைக்கப் பட்டு உள்ளது, அந்த துவாரங்களை அடைக்கத் தெரிந்தவன் எவனோ அவனே மனிதன், ஒன்பது துவாரங்களைத்தான் சமயவாதிகள் நவகிரகங்கள் என்று பெயர் வைத்து .அதற்கு உருவங்களைக் கொடுத்து அனைத்து ஆலயங்களிலும்.வைத்து இருப்பார்கள்.அந்த நவக்கிரக உருவங்களுக்கு விளக்கு வைத்து சுற்றி சுற்றி வருவார்கள்.அதனால் எந்த பயனும் இல்லை. அதன் தாத்பரியத்தின் உண்மைத் தெரியாமல்.புரியாமல் வணங்கிக் கொண்டும்.சுற்றிக் கொண்டும் வருவது இன்று வரை நடந்து கொண்டுதான் வருகின்றது. நமது உடம்பில் உள்ள ஒன்பது துவாரங்களில் .ஒரே துவாரத்தின் வழியாகத்தின்.உணவு என்னும் பொருளும்.தண்ணீரும் உள்ளே அனுப்பப் படுகின்றது..அது தான் வாய் என்னும் துவாரமாகும்.அதை அடைக்கும் வழி தெரிந்தால் மற்ற துவாரங்கள் தானே அடைத்துக் கொள்ளும். நாம் உண்ணும் உணவினால் உண்டாகும் கழிவுகளை வெளியே ஏற்றுவதற்கும்.மற்ற செயல்களுக்கும் எட்டு துவாரங்கள் செயல் பட்டுக் கொண்டே இருக்கும்...உணவு உள்ளே செல்லவில்லை என்றால் துவாரங்களுக்கு வேலை கிடையாது. இந்த செய்கையால்.அதாவது அசுத்த பூதகாரிய உணவு உண்ணும் செயல்களால்.அறியாமை என்னும் திரைகள்.ஆன்மாவைத் தெரிந்து கொள்ள முடியாமல் .ஒன்பது வண்ணம் உடைய மாயா திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது், அந்த திரைகளை நீக்க வேண்டுமானால் ஒன்பது துவாரங்களை அடைக்க வேண்டும்.எப்படி அடைக்க முடியும்.? அன்பு.இரக்கம் என்ற உணர்வோடு இடைவிடாது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நினைந்து நினைந்து.உணர்ந்து உணர்ந்து .நெகிந்து நெகிழ்ந்து.அன்பே நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால்.நேசிக்க வேண்டும்.அதாவது இடைவிடாது காதலிக்க வேண்டும். வள்ளலார் சொல்லுவார்! உண்மையாக இறைவனைத் தொடர்பு கொண்டால்...அழுத கண்ணீர் மாறுமோ ..ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்பார்...இதில் இருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.நாம் உணவு உட்கொள்ளுகின்ற வரை.ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் விலகாது. இறைவனும் அருள் வழங்க மாட்டார்..மரணத்தையும் வெல்ல முடியாது. இறைவன் அருள் வழங்கினால் நம் பூத உடம்பு தாங்காது.அப்படியே வழங்கினாலும் ஒன்பது துவாரத்தின் வழியே வெளியே சென்றுவிடும்.அதனால் எந்த ஆன்ம லாபமும் கிடைக்காது.அருள் தங்க வேண்டுமானால் உடம்பை பொன்னுடம்பாக மாற்ற வேண்டும். நாம் பொருள் உணவை நிறுத்தினால் தான்.அருள் உணவு கிடைக்கும்.அருள் உணவினால் பொன்னுடம்பாக மாற்றம் அடையும். அருள் உணவு உடம்பில் தங்க வேண்டுமானால் ஒன்பது துவாரங்களும் அடைக்கப்பட வேண்டும். அதன்பின்தான் உச்சி திரக்கும் , பூத உணவினால் உண்டாகும் விந்து நாதம் அடைப்பட்டு,அருள் உணவினால் பரவிந்து பரநாதம் தோன்றும், பரவிந்து பரநாதம் ஆன்மாவில் இரங்கி தொடர்பு கொள்ளும் போது,அதாவது அணைகின்ற போது அருள் சுரக்கும் ,அந்த அருள் பேராற்றல் உடம்பு முழுதும் நிரம்பி ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும். வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்! அன்னம்உண அழைக்கின்றாய் தோழிஇங்கே நான்தான்அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல்அடி மலர்த்தேன் உன்னைநினைத் துண்டேன்என் உள்ளகத்தே வாழும்ஒருதலைமைப் பெருந்தலைவர் உடையஅருட் புகழாம் இன்னமுதில் என்னுடையஅன் பென்னும்நறுங் கனியின் இரதமும்என் தனிக்கணவர் உருக்காட்சி எனுமோர் கன்னல்உளே தனித்தெடுத்த தேம்பாகும் கலந்தேகளித்துண்டேன் பசிசிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.! அருள் உணவு உண்பதால் பசி சிறிதும் கண்டிலேன் என்கிறார்...மேலும் என் அன்பர்கள் என் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பூத உணவு உண்ண அழைக்கின்றார்கள்... அவர்களுக்காக வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! அன்னமுண அழைத்தனர்நான் ஆடும்மல ரடித்தேன்அருந்துகின்றேன் எனஉரைத்தேன் அதனாலோ அன்றி என்னுயிர்நா யகனொடுநான் அணையும்இடம் எங்கேஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் துன்னுநெறிக் கொருதுணையாம் தோழிமனங் கசந்தாள்துணிந்தெடுத்து வளர்த்தவளும் சோர்ந்தமுகம் ஆனாள் நென்னல்ஒத்த பெண்களெலாங் கூடிநகைக் கின்றார்நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே.! என்னும் பாடல் வரிகளில் நான் உண்ணும் உணவைத் தெரிந்து கொள்ளாமல் என்னை பூத உணவு உட்கொள்ள அழைக்கின்றார்கள் இவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் என்பதை தெரியப் படுத்துகின்றார். அருள் உணவை உட்கொண்டு. ஒன்பது துவாரத்தையும் அடைத்தவர்  வள்ளல்பெருமான் ஒருவரே. எனவேதான் அவருக்கு அருள் அறிவு ஊற்றுபோல் தோன்றிற்று, ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி ஊரமுது உண்டு நீ யொழியாதே அந்தோ ஊழி தோறு ஊழியும் உலவாமை நல்கும் ஆரமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருட்பெரும்சோதி கண்டு ஆடேடி பந்து ! என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார். மேலும் சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவோரை கூற்று ஆசைப்படும் என்கிறார்.கூற்றுவன் என்றால்  எமன். ஆசையோடு வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவான் . எனவே ஒன்பது துவாரத்தையும் அடைத்து  உச்சி துவாரத்தை திறக்கும் வழியைக் காட்டுவதுதான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும். அதுதான் திருக்கதவு திறத்தல் ! திருக்கதவும் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருவுருக் காட்டாயோ உருக்கி அமுது ஊற்று எடுத்து என் உடம்பு உயிரோடு உளமும் ஒளிமயமே யாக்குற மெய் உணர்ச்சி அருளாயோ கருக்கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுட் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ செருக்கு கருதாதவர்க்கு அருளும் சித்தி புரத்து அரசே சித்த சிகா மணியே திருநட நாயகனே!.....என்கின்றார் ஒன்பது கதவையும் அடைத்தால் தான் திருக்கதவு திறக்கும். திருக்கதவுத் திறந்தால் தான் அருள் சுரக்கும் அருள் சுரந்தால்தான் மரணத்தை வெல்ல முடியும். சுத்த சன்மார்க்கிகள் ஒன்பது துவாரத்தை அடைக்கும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான சீவகாருண்ய ஒழுக்கம், உண்மையான சத்விசாரம் என்ற இரு வழிகளினால்தான் ,ஒன்பது துவாரத்தை அடைக்க முடியும் அடைக்க வேண்டும்... எனவே ஒன்பது துவாரத்தை அடைக்கத் தெரிந்தவனே ! அருளைப் பெற்றுக் கொள்ளும் தகுதி பெற்ற மனிதனாவான்.. மேலும் தொடரும்.... அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.. 9865939896,

1 கருத்துகள்:

6 ஏப்ரல், 2021 அன்று PM 2:57 க்கு, Blogger காசி ஆனந்த் கூறியது…

நல்ல பதிவு ஐயா

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு