சனி, 11 நவம்பர், 2017

மக்கள் எப்படி வாழ வேண்டும் ?

மக்கள் எப்படி வாழ வேண்டும் ?

அச்சம். பயம்.துன்பம்.வறுமை இல்லாமல் மக்கள் வாழ வேண்டும்..

அவ்வாறு வாழ்வதற்கு ஆட்சி அதிகாரிகள் எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும்.அவர்களின்  தகுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றார்...

மக்களின் நலன் மட்டும் முக்கியம் அல்ல .எல்லா உயிர்களுக்கும்.பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை.துன்பம். இல்லாமல் வாழ வைக்கும் அன்பு.தயவு.கருணை.அருள் .பெற்றவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரங்களில் அமர வேண்டும்...என்கிறார் வள்ளலார்...

இன்று உலகம் முழுவதும்.சாதி.சமய.மதவாதிகளின்....சுயநல வாதிகளின் கையில் சிக்கித் தவித்துக் கொண்டும் உள்ளன.அதனால் உலகம் அழிந்து கொண்டு உள்ளன.

அவர்களை மக்கள் விரட்டி வெளியேற்ற வேண்டும் என்பதை வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்..

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையரை நாளும்

கெடு நிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்

படுநிலை அவரைப் பார்த்த போதெல்லாம் பயந்தன்ன்..சுத்த சன்மார்க்கம்

விடுநிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்நாய்...!

என்று வள்ளலார் சொல்லுகின்றார்...பொது நலம் இல்லாமல் கெடுநிலையுடன் ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும்.கண்டு நானே பயந்தன்ன்.மக்கள் எப்படி அச்சத்தோடு பயந்து பயந்து வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது உள் நடுங்கினேன்..அவர்களை விரட்டி சுத்த சன்மார்க்கம் நிலைபெற வெருவினேன் வெருவினேன் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்கின்றார்.....

அடுத்து ஒரு பாடல் !

அச்சம் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற

விச்சை அரசே விளங்கிடுக...நச்சரவம்

ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக

நீதிக் கொடி விளங்க நீண்டு..!

உலகில் மக்கள் அச்சத்தோடு வாழ்கின்ற  ஆட்சிதான் உள்ளன.மக்களின் உயிரைப் பறிக்கும் கொடிய விஷம் போல் ஆட்சி செய்கிறார்கள்...அவர்களை விரட்டிவிட்டு.கோட்டைகள் எல்லாம் சன்மார்க்க நீதிக் கொடி விளங்க வேண்டும் என்கிறார் வள்ளலார்....

அடுத்த பாடல் !

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க ...தெருள் நயந்த

நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து

எல்லோரும் வாழ்க இசைந்து.!

என்கிறார்...

உலகில் உயிர்களை காப்பாற்றும் கருணை இல்லாத ஆட்சி எதுவாக இருந்தாலும்.இருக்கும் இடம் தெரியாமல் ஒழித்து விட வேண்டும் என்கின்றார்..

எல்லா உயிர்களும் அச்சம்.பயம் துன்பம்.வறுமை இல்லாமல் என்றும் அன்பும் .தயவும் மகிழ்ச்சியும். ஆனந்தமும் பெற்று என்றும் வாழ்வாங்கு வாழும் வழியைக் காட்டவும்...நல்லோர்கள் நினைத்த நலம் பெறவும் ..

முழுமையான அருள் பெற்ற நன்மார்க்கர் என்னும் சுத்த சன்மார்க்கிகள் ஆட்சியில் அமர வேண்டும்...என்கிறார்.

அந்த நாளே சிறந்த நாள்...அதுவே திருநாள்...அதுவே பெறுநாள்...அந்த நாளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆசீர் வதிக்கும் நாள்.....

வள்ளலார் பல கோடி அண்டங்கள் முழுவதும். அருள் ஆட்சி செய்யும் .நடத்தும் அதிகாரத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பெற்றுக்கொண்டார்.நாமும் பெற்றுக் கொள்வதற்கு அருள் உடம்பு என்னும் தகுதியைப் பெறுவோம்

முரசு அறைகிறார் !

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு..
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு..
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு..
மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு !

நாம் நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம்.

சுய நலத்தில் இருந்து விலகி பொது நோக்கத்திற்காக வாழ்வோம்...

எல்லா உயிர்கள் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக்...

வந்தனம்...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு