வியாழன், 14 டிசம்பர், 2017

உலகத்தின் பொது நெறி !

உலகத்தின் பொது நெறி ! சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறி உலகின் பொது நெறி ! வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க புது நெறி.தனிநெறி.பெருநெறி.சிவ நெறி இதுவரையும் உலகம் அறியாத நெறியாகும். வள்ளலார் பாடல் ! திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு வருநெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திரு உளங் கொண்டு அருளிப் பெருங்கருணை வடிவனொடு வரு தருணம் இதுவே கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே ! உலகத்தின் பொது நெறி தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க புனித நெறியாகும். உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான்.அருளாளர். இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார் அவதரித்த நாள் தான் அக்டோபர் 5,10- 1823. ஆம் ஆண்டாகும் வள்ளல் அடிகளாரின் வான்புகழை அனைவரும் வருடம் முழுவதும் கொண்டாடுவோம்! மகிழ்வோம். இந்து மதமும். சைவம் வைணவ சமயமும். மதமும். இஸ்லாம் மதமும்.கிருத்துவ மதமும்.பவுத்த மதமும் தழைத்தோங்கி இருந்த காலக் கட்டத்தில், வள்ளலார் தான் வள்ளலார் வருவிக்க உற்றார். மதங்கள் சமயங்களில் உள்ள வேதங்கள், புராணங்கள்,இதிகாசங்கள் போன்ற  கட்டுக் கட்டான கதைகள் அனைத்தும் ,கற்பனைகள் என்றார்.அந்த கற்பனைக் கதைகள் முதலானவற்றில் .எவற்றிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆரியப் புராணங்களான இராமாயணம் மகாபாரதம் போன்ற கதைகளில். நேரத்தையும்.காலத்தையும் வீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். கடவுள் என்பவர் ஒருவரே, அவர் அருட்பெருங் கருணையும்.அன்பும்.தயவும்.அருளும் நிறைந்த அருள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார்.அவர் பல உருவங்களில் அல்ல, அவர் அருட்பெருஞ் ஜோதியாக ..ஒளியின் ஊடாக அண்ட சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார். வள்ளலார் பாடல் ! இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர். என்றும்...மேலும் ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.! என்னும் பாடல்கள் வாயிலாகத் தெளிவுப் படுத்துகின்றார். அருட்பெருஞ்ஜோதி ஒளியை கடவுளாக பாவித்து, ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாக கொண்டு , அன்பு, தயவு,கருணை  சார்ந்த வாழ்கையை வாழப் பழகுதலே உலகில் நிரந்தர அமைதியை நிலை நாட்டும் நிலை நாட்ட முடியும் என்றார்.அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார் போதித்தார். சாதிகள், மதங்கள், சமயங்கள், அனைத்தும் பொய் பொய்யே என்று அறுதியிட்டு கூறினார். சிறுதெய்வ வழிபாடு கூடாது. சிலைகள் வழிபாடு வேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். உலகில் உள்ள கிருத்தவ மதம்.இஸ்லாமிய மதம். பவுத்த மதம்.இந்து மதம்.அனைத்து மதங்களும் பொய்யான செய்திகளை மக்களிடம் புகுத்தி வந்த நடைமுறைகளை முற்றிலும் மறுக்கச் சொன்னார்.மறுத்தார். வள்ளலார். மேலும் இறந்தவர்களை எரிக்க வேண்டாம் என்றும், இறந்தவர்களுக்கு திதி.முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம் என்றார். இறந்தவர்கள் நினைவாக ஏழைகளுக்கு அன்னவிரயம் செய்யுங்கள் என்றார். மற்ற ஈமக் கிரியைகள் எதுவும் செய்தல் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்,என்றும் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் என்றார்.மேலும் பெண்களுக்கும் ஞானம் முதலியகலைகளை சொல்லித் தர வேண்டும்.இறுதி காலத்தில் துணையாக இருப்பார்கள் என்ற புரட்சி செய்தியை மக்களுக்கு போதித்து வந்தார் . சிறு தெய்வ வழிபாடு செய்தல் வேண்டாம் என்று சொன்னதோடு அந்த தெய்வங்களின் பேரில் உயிர் பலியிட வேண்டாம் என்றும் கூறினார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு பூசகர் தேவை இல்லை எனவும் , கடவுளை உண்மை அன்பால் நேரடியாக வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் , இயற்கை உண்மை. இயற்கை விளக்கமான ஒளி வழிபாடு செய்து இயற்கை இன்பத்தை அனுபவிக்கவே மனித தேகத்தை இறைவன் கொடுத்துள்ளார் என்பதை தெளிவு படுத்தியுள்ளார். பொய்யான வழிபாட்டை விட்டு உண்மையான ஜீவ காருண்யமே இறை வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே இறைவன் வழிபாடு என்றும். போதித்தார். உலகில் உள்ளவர்கள் பேச்சைக் கேட்டு. ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற.தவம்.தியானம்.யோகம் முதலியவைகளை செய்தால் மூடம் உண்டாகும்.பின் விளைவுகள்.உடம்பிற்கு உண்டாகும் என்றார். இயற்கையின் சகல சக்திகளையும்.ஆற்றல்களையும்.முழுமையான அருளையும் தன் உடம்பிற்கு உள்ளே வரவைத்துக் கொண்டார்.மரணத்தை வென்றார்.ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு ஐந்தொழில் வல்லபத்தையும் பெற்றார்..இறைவனிடம் நேரே வள்ளலார் அனைத்தும் பெற்றுக் கொண்டார்.எல்லோரும் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். கடவுள் இல்லை எனும் நாத்திகம் பேசுபவர்களை கடுமையாக கண்டித்தார்.நாத்திகம் சொல்பவர்கள் நாக்கு முன் நாக்கு என்றும்..நாக்கு ருசி கொள்வது நாரிய பிண்ணாக்கு என்றும் சாடுகின்றார் வள்ளலார். உண்மைக் கடவுளை, உண்மை அன்பால் வழிபாடு செய்தால் அக்கடவுளின் பூரண அருளை மனிதர்கள் பெறலாம் என்றும் , இயற்கை விளக்க அருளின் துணைக் கொண்டு என்றும் அழியாத பேரின்ப பெருவாழ்வில் மனிதர்கள் என்றும் வாழலாம் என்று உலகிற்கு வாழ்ந்து வழிகாட்டினர் வள்ளலார். மதம் என்னும் பேய் பிடித்து மக்களிடம் பல்வேறு மூட நம்பிக்கையை, மூடமான பண்பாட்டை , மொழியை திணிக்க முயலும் மத வாதிகளை கடுமையாக சாடுகிறார் வள்ளலார். சாதியும் மதமும் சமயமும் பொய் என்றும் ,அவை மனித குலத்திற்கு உண்மையை உணர்த்தி வைக்க முடியாது. துன்பத்தையே தரும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றார்.எதிலும் பொது நோக்கம் வேண்டும் என்றார். இப்படி ஒரு தெளிவான அன்பும் அற நெறியும் இயற்கை சார்ந்த ஒரு மார்க்கத்தை வள்ளலார் தவிர உலகில் வேறு யாருமே இது வரை வழங்கியதில்லை என்பதும்.தோற்றி வைக்கவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும்.மற்றும் உலகம் அனைத்தையும் ஒரு மதத்தின் கீழ் கொண்டு வந்து மதவாதத்தை மக்களிடம் கட்டவிழ்த்து நாட்டை கலவர பூமியாக்கத் துடிக்கும் அத்தனை சக்திகளுக்கும் வள்ளலாரின் அறிவுரை தற்போது மிகவும் அவசியமாகிறது. இவ்வாறு அரும்பெரும் கருத்துக்களை உலகிற்கு வழங்கிய வள்ளலாரை போற்றுவது ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமையாகும். போற்றுவது மட்டுமல்லாது அவர் கூறிய சுத்த சன்மார்க்க நெறி காட்டும் வழியில் நாம் அனைவரும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழகத்திற்கு தமிழ் மொழியில் அவர் வழங்கிய அருட்பாக்களை நாம் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து கொண்டு செல்லவேண்டும். குறிப்பாக இன வெறியை மொழி வெறியை.உமிழ்ந்து இந்தி, சமஸ்கிருத மொழியை அனைவரின் மீதும் திணிக்கும் ஆதிக்க வட இந்திய மக்களுக்கு வள்ளலார் காட்டிய நன்னெறியை நாம் கொண்டு செல்ல வேண்டும். இந்திய ஒன்றியத்தில் நல்லாட்சி மலர இந்திய அரசு வள்ளலார் காட்டிய அன்பு வழியில் பயணிக்க. செல்ல செயல்படுத்த வேண்டும். அப்போது தான் கருணையில்லா இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நல்லாட்சி மலரும். அனைத்து மாநில மக்களும் நிம்மதியாக வாழ்வாங்கு வாழ்வார்கள். சாதி.சமய.மத பேதங்கள் நீங்கி மனிதம் தழைத்து ஓங்கும் ஓங்கட்டும் ! வாழ்க வள்ளலாரின் வான்புகழ் ! உலகம் முழுவதிற்கும்  இனிமேல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே நல்ல வழியைக் காட்டும் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.உண்மையை உணர்த்தினால் மக்கள் புரிந்து கொள்வார்கள். பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே ! அருட்பெருஞ்சோதி அகவல்.... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு