செவ்வாய், 5 டிசம்பர், 2017

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் ! நான் எழுதும் கட்டுரைகள் சமய மதங்களில் அதிகமாக ஈடுபாடு உள்ளவர்களுக்கு மன வருத்தத்தையும் .சங்கடத்தையும் உண்டு பன்னுவதாக நினைக்கிறார்கள்.உலகில் உள்ள எல்லா மத்ங்களும்..மார்க்கங்களும் அதன் கடவுள் கொள்கைகளுமே பொய்யானது என்கிறார் வள்ளலார்.அவர் சொல்லியுள்ள கருத்துக்களை அப்படியே கட்டுரையில் எழுதுகிறேன். எக்காரணத்தைக் கொண்டும் என் சொந்தக் கருத்துக்களை எழுதவே மாட்டேன்.வள்ளலார் சொல்லியுள்ள உண்மையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை மட்டும் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படுத்துகிறேன். வள்ளலாரே சொல்லுகின்றார். உலகில் உள்ள அனைவரும் இதுவரையில் இருந்த்து போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள்.. இவ்வளவு காலம் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் பற்று வைத்து கொண்டு இருந்த .வேதம்.ஆகம்ம்.புராணம்.இதிகாசம்.முதலிய கலைகள் எதனிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்கிறார்..ஏன் என்றால் ? இதுவரையில் ஒரு மத்த்தில் கூட வெளிப்படையாக தெய்வத்தை இன்னபடி என்றும்.தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் .மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள் என்கிறார்.உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல் யாரிடம் சென்று அருளைப் பெறுவீர்கள் என்கிறார்.. அணு அளவு கூட உண்மைத் தெரியாமல்.தெரிவிக்காமல் பிண்ட (உடம்பை) லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.எவ்வாறு எனில்...கைலாசபதி என்றும்.வைகுண்டபதி என்றும்.சத்தியலோகாதிபதி என்றும்.பரலோகம் என்றும்.பரம்பிதா என்றும்.பெயரிட்டு.இடம்.வாகனம்.ஆயுதம்.வடிவம்.ரூபம்.முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து .உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். தெய்வத்திற்கு கை.கால்.வாய்.நாக்கு.மூக்கு.தலைப்போன்ற உறுப்புக்கள் முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.என்கிறார் வள்ளலார். இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள ஆன்மீகப் பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும்.உண்மை அறியாது .அப்படியே கண்ணை மூடிக்கொண்டு (குருடர்கள்போல்) உளறி இருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் என்கிறார்..அவனுக்கு ஓர் அளவு உண்மை தெரிந்துள்ளது.அனைத்தையும் மறைத்து விட்டான்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் மறைத்து பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை.இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை ஒருவரும் உடைக்க வரவில்லை என்கிறார்...அதன் உண்மை என்னவென்றால் நான் உடைத்து விட்டேன்.கடவுளின் உண்மையைச் சொல்ல வந்து விட்டேன் என்பதாகும்.... மேலும் சொல்கிறார்..சைவம்.வைணவம் முதலிய சமயங்களிலும்.வேதாந்தம்.சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம் என்கிறார்...கதிர்வேல் சொல்லவில்லை வள்ளலார் சொல்லுகின்றார்.மேலும் அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழு உக்குறியாக்க் குறித்து இருக்கின்றதே அன்றிப் புறங்கவியைச் (வெளிப்படையாக) சொல்லவில்லை. அவ்வாறு பயிலுமோயானால்.நமக்கு காலம் இல்லை.காலம் இல்லை என்றால் தெரிந்து கொள்வதற்குள் மரணம் வந்துவிடும்...ஆதலால் அவற்றில் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார்..வள்ளலார். மேலும் இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் .எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது என்கிறார்.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீரகளானால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தை பெற்றுக் கொண்டார்களா ? என்று கேள்வி கேட்கின்றார்.அப்படி எவறும் பெற்றுக் கொள்ளவில்லை என்கிறார்... மேலும் நான் அப்படி சமய மதங்களில் வைத்து இருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதா என்றால் .அந்த லட்சியம் தூக்கி விடவில்லை....என்கிறார். என்னை ஏறாநிலைமிசை ஏற்றி விட்டது யாதெனில் .தயவு.தயவு என்னுங் கருணை தான் தூக்கி விட்டது என்கிறார் ..அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை வந்தால் தான் தயவு வரும்..ஒருமை என்பது எல்லா உயிர்களிலும் இறைவன் இருந்து இயக்குகிறார் என்பதை அறிந்து கொள்வதே ஒருமை என்பதாகும்...அவைதான் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.ஆன்ம நேய ஒருமைப்பாடு உரிமை அறந்தவர்கள்.உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்ள முடியும்..அவரிடம் இருந்து அருளைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற முடியும்... மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளை இட்டது யாதெனில்.நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! என்னும் மகா மந்திரத்தை வெளிப்படையாக எடுத்து காட்டி உள்ளார். தயவு.கருணை.அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்.ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாகும் என்கிறார். அடுத்து சொல்கிறார் ..உண்மை சொல்ல வந்தன்னே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வார் இல்லை என்கிறார்...கொடி கட்டிக் கொண்டபடியால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார் தெரிவிக்கின்றார். தெரிவிப்பார்.நீங்களும் உண்மையைத் தெரிந்து கொள்வீர்கள்.தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிறதையுடன் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்.. இப்படி இருந்து கொண்டு இருந்தால் ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள் இது சத்தியம்.சத்தியம்.சத்தியம் ஆண்டவர் கட்டளை என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்... வள்ளலார் பாடல் ! சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.! என்ற பாடல் வரிகளிலே ! இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சத்தியவான் வார்த்தை என்கிறார்... எனவே இதில் கதிர்வேல் வார்த்தை ஏதும் இல்லை என்பதை அறிந்து கொண்டு சாதி.சமயம்.மதங்களின் கொள்கைகளை விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆனைப்படி வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.....தொடரும் அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு