வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

திருக்குறள் !

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.

திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட(1705) ஒரே எழுத்து – னி.
திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.

திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
“எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.

“ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
திருக்குறள் உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் வகிக்கிறது.

திருக்குறள் மெய்மொழி..பொய்யாமொழி.
உலகமொழி .உருவ வழிபாட்டை வலியுறுத்தாமல் சாதி.சமய.மதம் அற்ற ஆதிபகவனே முழுமுதற் கடவுள்.அவரே உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் என்பதை தெளிவு படுத்தும் திருக்குறள் மொழியாகும்

*மெய்மொழி என்பதால் முதன் முதலில் வடலூரில் திருக்குறள் வகுப்பு வைத்து நடத்தியவர் திருஅருட்பிரகாச வள்ளலார்.

திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இப்படி பல பரிணாமங்களை கொண்ட ஒரே குறள் திருக்குறள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு