திங்கள், 17 பிப்ரவரி, 2020

தச வாயுக்கள் !

#நமது பிண்டத்தில் தச வாயுக்கள் ஒன்றினைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. அவை தொடர்பாக சித்தர்கள் சொன்ன ரகசியங்களை நாம் தற்போது நேரடியாக கற்பிக்கும் திருமந்திர whatsaap வகுப்பில் பகிர்ந்த சில விடயங்களை  இன்று நம் சித்தர்களின் குரலில் பார்ப்போம்.....

1. உயிர் காற்று (பிராணன்) - மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.

2. மலக் காற்று  (அபானன்) - கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.

3. தொழிற் காற்று (வியானன்) - நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை                                      கொண்டுசெல்லும்

4. ஒலிக் காற்று (உதானன்) - இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை                                     வெளிப்படுத்தும்

5. நிரவுக் காற்று (சமானன்) - சத்துக்களை உடல்முழுதும் சமஅளவில்                                                கொண்டுச்சேர்ப்பது.

6. விழிக் காற்று (நாகன்) - பார்வைத்திறன் அளிப்பது, உணர்ச்சிகளை                                         தூண்டக்கூடியது

7. இமைக் காற்று (கூர்மன்) - கண்ணீரை வரவழைத்த்ல், சிரித்தல் போன்றவைகளுக்கு                           காரணமாக உள்ளது.

8. தும்மல் காற்று (கிருகன்) - நாவில் சுரப்பையும், பசி, தும்மலுக்கு காரணம்

9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) - கொட்டாவி விடுதல், விக்கலுக்குக் காரணம்

10.வீங்கக் காற்று (தனஞ்செயன்) - கோமா (நினைவற்றநிலை), உடலை                                          வீங்கச்செய்தல் போன்றவைகளுக்குக் காரணம்

#இந்த பத்து வாயுக்கள் (தச வாயுக்கள்) தவிர வேறு சில வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவற்றுள் முக்கியமாவை என கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.

●  முக்கியன் - உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.

●  வைரவன் - கபத்தை உருவாக்கும்.

●  அந்திரியாமி - பிராணனை உருவாக்குதல்.

●  பிரவஞ்சனை - பிராணவாயுவின் நண்பன், இக்காற்றின் துணையுடன்தான் சுவாசம்                   நடக்கிறது.

#மேற்கண்ட முக்கியமான் பத்து காற்றுகளும், ஒரு மனிதன் இறக்கும்போது என்ன செய்துக்கொண்டிருக்கும்?

#முதலில் இவ்வுடலைவிட்டு பிரிவது உயிர்காற்றும், நிரவுக்காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்துவிட்டதாக, பிணமாகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. கவனிக்கவும் மற்ற காற்றுகள் அந்த பிணமான உடலில் இருந்துக்கொண்டிருக்கும். ஒருவர் இறந்துவிட்டால் உயிர்சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்துவிடுவதில்லை. #இறந்த உடலில் 11 நாட்களிலிருந்து 40 நாட்கள் வரை உடலைவிட்டுச் சென்றுவிட்ட அந்த இரண்டு வாயுக்களைத் தவிர மற்றவை அதன் அதன் வேலைகளை நமது பிண உடலில் செய்து விட்டு நிம்மதியாக தங்கள் வீட்டைவிட்டு செல்கின்றன.

#அதுவரை நமது பிண உடலில் முடியும், நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல்பட்டிருக்கின்றதை உணரலாம். உடலை விட்டு உயிர் பிரிவது மெதுவாகவே நடைபெறுகிறது. எப்படி இவ்வுடல் உருவாக பத்து மாதத்திற்கு நமக்கு கருப்பை தேவைப்பட்டதோ அதுபோல இவ்வுடல் அழிய மண்குழியில் பல வருடங்கள் இருக்க வேண்டியதுதான் இயற்கை.

#இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும். இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும்,நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல்  இதன் வேலைகளாகும். எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும். பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.

#இதற்காகத்தான் நமது பிணங்களை கண்டிப்பாக 'சாகாஅருளர் வள்ளலார்' அவர்கள் புதைக்க சொல்கிறார். மாறாக புதைக்காமல் எரித்துவிட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்யவிடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலும் ஒரு மனிதக் கொலைக்குச் சமமே. மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக்கூடிய தனஞ்செயன் வாயு, இடுக்காட்டில் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் 'டப்' என்று சப்தத்துடன் வெடித்து (துன்பத்துடன், அப்பிணத்திற்கே சாபமிட்டு) வெளியேறும்.

#இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.

#சில யோகிகள் / கடின சித்தர்கள் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் தாம் இறக்கும்போது எடுத்துக்கொண்டு முழுமையாக உடலைவிட்டு விலகுவார்கள். தாம் இறந்தப் பிறகு தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இவ்வித சமாதியும் தவறான செயல்களாகும்.

#ஆனால், ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித

வாயுக்களுமே வெளிவருவது இல்லை, எனவே இவர்கள் விரும்பும்போதோ அல்லது இறைவன் விரும்பும் போதோ இவர்களால் மீண்டும் இவ்வுலகில் உலா வரயியலும். இவர்களுக்கும் மரணிப்பதற்கு கால நிர்ணயம் உண்டு. எனவே இவ்வகையான ஜீவசமாதி பழக்கத்தை 'சாகாஅருளர் வள்ளலார்' கைவிடச் சொல்கிறார்.

#இதில் என்ன வேடிக்கை என்றால், நம்மால் கடின சித்தர்கள் யார்? ஜீவ சமாதி அடைந்தவர்கள் யார்? என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது அனுபவம் அவர்களுக்குத்தான் தெரியும். பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறியும்!

1 கருத்துகள்:

9 மார்ச், 2020 அன்று 6:39 AM க்கு, Blogger Unknown கூறியது…

Alright...

What I'm going to tell you may sound really creepy, and maybe even kind of "supernatural"

BUT what if you could just click "PLAY" to LISTEN to a short, "magical tone"...

And magically attract MORE MONEY to your LIFE???

I'm talking about hundreds... even thousands of dollars!!!

Do you think it's too EASY??? Think something like this is not for real???

Well, I've got news for you..

Sometimes the most magical miracles in life are the SIMPLEST!!!

Honestly, I'm going to PROVE it to you by allowing you to listen to a real-life "miracle wealth building tone" I've synthesized...

(And COMPLETELY RISK FREE).

You just click "PLAY" and watch money coming right into your life.. starting so fast, you will be surprised..

CLICK here NOW to enjoy the mysterious "Miracle Money-Magnet Tone" as my gift to you!!!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு