செவ்வாய், 15 மே, 2018

அருள் ஆட்சி வரவேண்டும் !

அருள் ஆட்சி வரவேண்டும் !

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.
அகங்காரம் ஆணவம் வரக்கூடாது.

இந்த உலகத்தை எத்தனையோ கோடி நபர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.அத்தனை நபர்களும் இருக்கும் இடம் இன்று வரை தெரியவில்லை.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் மனிதர்கள் தேர்வு செய்து மனிதன்  ஆட்சிக்கு வந்து உலக உயிர்களை காப்பாற்ற முடியாது.என்பது உலகம் அறிந்த உண்மை .

உலகத்தையும் உயிர்களையும் காப்பாற்ற படைத்த இறைவனால் மட்டுமே முடியும்...

எனவே தான் வள்ளலார் ...

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க -

தெருள்நயந்தநல்லோர் நினைத்த நலம்பெறுக

நன்றுநினைத்தெல்லோரும் வாழ்க இசைந்து.

என்று வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார்..

சாதாரண மனிதர்களால்.ஆட்சிக்கு வந்தாலும் உலக உயிர்களை. மக்களை காப்பாற்ற முடியாது.

அருள் பெற்ற அருளாளர்கள் ஆட்சியில் அமர்ந்து ஆட்சி செய்தால் மட்டுமே.நல்லோர்கள் நினைத்த நலம் பெற்று.ஏற்ற தாழ்வு இல்லாமல் .சாதி.சமய.மதங்கள் இல்லாத.பொதுவான நல்லாட்சி செய்ய முடியும்.

அந்த சூழல் வந்தால் மட்டுமே எந்த எதிர்ப்பும் இல்லாமல்.எல்லோரும் ஒன்றுபட்டு இசைந்து வாழ முடியும்.

அந்த நாள் வரும் வரை எதிர்பார்த்து காத்திருப்போம்.

நிச்சியம் நிறைவேறும் .எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை வேண்டுவோம்..

வள்ளலார்பாடல் !

அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.

என்னும் பாடலில் உள்ளபடி வேண்டுவோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு