சனி, 12 மே, 2018

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். !

சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் !

உலகில் மற்றவர்களுக்கு அறிவுரையும்.ஒழுக்கத்தையும்.நேர்மையும்.சத்தியத்தையும் சொல்பவர்கள் அவரவர்கள் கடைபிடித்து அதனால் கிடைக்கும் நன்மை பெற்றுதான் சொல்ல வேண்டும்..

வள்ளலார் சொல்லுவார் ! அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லியது..!

அருட்பெருஞ் ஜோதி அகவல் வரிகள் !

795. உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க

796. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை !

என்னும் வரிகளில் விளக்கமாக சொல்லுகின்றார்.

உலக உயிர்களுக்கு   வரும் இடையூறுகளை தவிர்க்க வேண்டுமானால் .நாம் ஒழுக்கம் உள்ளவர்களாகவும்.உத்தமனாகவும் வாழ்ந்து சொன்னால் தான் பலிக்கும்.

வள்ளலார் வாழ்ந்து காட்டிதான் எல்லாவற்றையும் சொன்னார்.அதனால் தான் உலகின் ஒப்பற்ற அருளாளராக விளங்கிக் கொண்டுள்ளார்.

நாம் படித்து விட்டு அப்படியே காப்பியடித்து பேசுவதால் பயன் இல்லை.

கற்க கசடற கற்பவை கற்றபின் நிறக அதற்கு தக !

என்பது போல் கற்க வேண்டியதை மட்டுமே கற்க வேண்டும்
கற்றபின் அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும்.

அப்போது தான் நாம் சொல்வதை மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

எனவே நாம் ஒரு கருத்தை சொல்லும் போது அக்கருத்தைப் பின்பற்றி வாழ்ந்து தான் சொல்ல வேண்டும்..

அதுவே அனைவருக்கும் நன்மை பயக்கும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு