திங்கள், 7 மே, 2018

வள்ளலார் கொள்கை மிகவும் எளிமையானது !

வள்ளலார் கொள்கை மிகவும் எளிமை !

ஆன்மாவை இந்த பஞ்ச பூத உலகத்திற்கு இறைவன் அனுப்பி வைக்கிறார்.

அனுப்பி வைத்துள்ள இயற்கை உண்மையான  இறைவன் யார் ? என்பது தெரியாமல்  இதுவரையில் உலகம் இருந்து கொண்டுள்ளது. வள்ளலார் வந்துதான் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உலகிற்கு அறிமுகப் படுத்துகின்றார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எதற்காக ஆன்மாக்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பதைத்தான் நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆன்மாக்கள் மூன்று வகையாக உள்ளன.பக்குவ ஆன்மா..அபக்குவ ஆன்மா...பக்குவா பக்குவ ஆன்மா என்பவையாகும்...அதன் விளக்கம் பின்பு தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆன்மாக்கள் ஆண்டவர் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெரு வெளியில்.ஆன்ம ஆகாயம் என்னும் இடத்தில் அளவில் அடங்காத அளவுகடந்த எண்ணிக்கையில் நிறைந்து இருக்கிறது.

அந்த ஆன்மாக்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்பது தெரியாது...ஆன்மாக்கள் ஆண்டவரை தொடர்பு கொள்ள வேண்டுமானால் அருள் வேண்டும் .அருள் பெற்று ஆன்மதேகம் என்னும் அருள் தேகம் பெற வேண்டும்.அருள்தேகம் என்னும் ஒளிதேகம் பெற்றால் தான் இறைவனை காணமுடியும். இறைவன் தேகம் அருள் என்னும் ஒளி  தேகம்..இறைவன் தன்மையாகிய ஒளிதேகம் பெற்றால் தான் இறைவன் தன்னுடன் ஆன்மாவை இணைத்துக் கொள்வார்...

பூலோக வாழ்க்கை !

ஆன்மாக்கள் அருளைப் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தைப் படைத்துள்ளார்.

இந்த உலகத்தில் ஆன்மாக்கள் ஏழு பிறப்பு எடுக்க வேண்டும் இறுதியான ஏழாவது பிறப்பு தான் மனித பிறப்பு.

இந்த மனித பிறப்பில் தான் ஆன்மாவானது இறைவனிடம் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று இறைவன் நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.***அதற்குப் பெயர்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டும்*** என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்....

உலக வாழ்க்கை !!!!

உலகில் வாழ்வதற்கு வந்த ஆன்மாக்கள்..மனித பிறவியோடு தன் வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்...
ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ....உயிர் உடம்பு ...இரண்டையும் வாடகைக்கு கொடுத்துள்ளது.வாடகை என்னும் உணவு தினமும் கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறினால் மரணம் வந்துவிடும்.மீண்டும் பிறந்து பிறந்து.இறந்து இறந்து இங்கேயே பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்...

ஆன்மாக்களை இதற்காகவா இறைவன் அனுப்பி வைத்தார் என்பதை தெரிந்து கொள்ளவே.உயர்ந்த அறிவை மனிதர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றுவதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க பெருநெறியாகும்...

சுத்த சன்மார்க்கம் என்ன சொல்கிறது...நம்மைப் போன்ற ஆன்மாக்கள் உண்மைத் தெரியாமல் துன்ப்ப் படுகின்றது. அந்த  ஆன்மாக்களுக்கு வரும் துன்பங்களான.பசி.
கொலை.பிணி.தாகம்.
இச்சை.எளிமை.பயம் போன்ற துன்பங்களை தங்களால் முடிந்த அளவு  போக்க வேண்டும் என்றுதான் வள்ளலார் சொல்லுகின்றார்...

அதற்குப் பெயர்தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்...ஜீவகாருண்யம் விளங்கும் போதுதான் அன்பும் அறிவும் தானே விளங்கும் என்கிறார் வள்ளலார்....

அன்பும் அறிவும் விளங்காமல் இருப்பதற்கு எவை எவைத் தடையாக இருக்கின்றதோ அவைகளை எல்லாம் தூக்கி எறிய வேண்டும்...

எனவே தான் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகளாகிய சமயங்கள்.மதங்கள்.
மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.வருணம் ஆசிரம்ம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய வேண்டும் என்கிறார்....

மேலும் ஆன்மநேய ஒருமைப்பாடு என்றால் என்ன என்பது  அப்போதுதான் விளங்கும்.

உயர்ந்த அறிவுபெற்ற மனிதர்களாகிய நாம் தாழ்ந்த நிலையில் உள்ள கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறோம்..

வள்ளலார் சொல்லிய கொள்கையைப் பின்பற்ற மேலே உள்ள.சாதி.சமய.மத்த் தடைகளை முதலில் நீக்கினால் மட்டுமே.....இறைவன் அருள் கிடைக்கும்...

அருள் கிடைத்தால் மட்டுமே அன்பு.தயவு.கருணை நிறைந்து. வாடைகை வீடான ஊன் உடம்பை ஒளி உடம்பாக ஆன்மாவால்மாற்றிக் கொள்ள முடியும்.  சொந்த வீடாக மாற்றுவதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

இந்த எளிய சுத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்றத் தெரியாமல் மனம் போனபடி வாழ்ந்து கொண்டு உள்ளோம்...

ஆன்மாவானது இந்தத் உலக வாழ்க்கையை முறையாக சரியாக புரிந்து .உண்மை ஒழுக்கத்தோடு வாழ்ந்து .எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்கும்.

நம் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சொந்த வீட்டிற்கு ஆன்மா செல்ல முடியும்....அப்போது தான் பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்றதாக ஏற்றுக் கொள்வார் ஆண்டவர்.

அதற்காகவே ஆன்மாக்களை இவ்வுலகத்திற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனுப்பி வைத்துள்ளார் என்பதை மனிதகுல ஆன்மாக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்....

இன்னும் விரிக்கில் பெறுகும்...சுருக்கமாக விளக்கி உள்ளேன்..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு