ஞாயிறு, 27 மே, 2018

மகா மந்திரம் !

நாம் துன்பம் தீர்வதற்கு கடவுளைத்தேடி ஆலயங்களுக்கு  செல்கிறோம் !

ஆலயங்களுக்குச் சென்று கடவுளின் பெயரால் பல பல மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறோம்.வீட்டிலும் வந்து அதே மந்திரங்களைச் சொல்கிறோம்

 அந்த மந்திரங்களால் சிறு சிறு நன்மைகள் உண்டு.பெரிய நன்மைகள் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே உலக மக்களின் நன்மைக்காக  உயர்ந்த  உண்மையான மந்திரத்தை வள்ளலார் அறிமுகப் படுத்துகின்றார்.

அதற்கு மகா மந்திரம் என்று பெயர் வைக்கிறார்.. மகாமந்திரம் என்றால் எல்லா மந்திரங்களுக்கும் உயர்ந்த்து என்றும்.எல்லா மந்திரங்களும் தன்னுள் அடங்கி கிடக்கிறது.என்றும் பொருள்.

வள்ளலார் சொல்லியுள்ள மந்திரம் இறைவனால் எடுத்துக் கொடுக்கப்பட்ட மகாமந்திரம். என்கிறார்.

அந்த மகாமந்திரம் தான்...

*அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி*

என்னும் மந்திரமாகும்.

உங்களுக்கு உண்டாகும் துன்பங்களைப் போக்க.வீட்டில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து தினமும் காலை மாலை 108.தடவைக்கு.மேல் மகாமந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்யுங்கள்...தீராத வல்வினைகளாக இருந்தாலும் தீர்ந்து விடும்..

மேலும் ஒரு நோட்டில்  தினமும் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகாமந்திரத்தை எழுதி வாருங்கள் உங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்..

எல்லோருக்கும்  ஆன்ம நேய உரிமையுடன். எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுக்கு இந்த உண்மையைச் சொல்லுகிறேன்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு