திங்கள், 14 மே, 2018

வாழ்த்துரை !

ஆன்ம நேயம் கொண்ட சகோதர்ர் திரு நாராயணன் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்...

அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி!!
தனிப்பெருங்கருணை!!!
அருட்பெருஞ் ஜோதி!!!!

திரு நாராயணன் அய்யா அவர்கள். அவர்களின் துணைவியார் இராஜேஸ்வரி அம்மா அவர்களின் பெயரிலும் அறக்கட்டளை 29-5-2018 தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அறக்கட்டளையானது வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய வழியில்..ஏழை எளியவர்கள்.முதியோர் .வார்த்திபர் முதலிய ஜீவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து நீடூழி காலம் அறப்பணி ஆற்றிட வேண்டும்.

நமது அருட்தந்தையார் எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தோன்துறா துணையாக இருந்து அருள் பாலிக்க வேண்டுமாறு வேண்டி விண்ணப்பம் செய்து கொள்கிறேன்.

மேலும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க  பெருநெறியைப் பின்பற்றி .சங்கராபுரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் செயலாளராக சிறப்புடன் பணியாற்றி மக்கள் மனதிலே நீங்காத இடம் பெற்றும்.. என் இதயத்தில் என்றும் நிலைப்பெற்று வாழ்ந்து கொண்டும் இருக்கும் ஆன்மநேயர் திரு.நாராயணன் அவர்களின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தும் வாய்ப்பை நல்கிய திரு.நாராயணன் அவர்களுக்கும்.சங்கராபுரம் .சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர்.செயலாளர். பொருளாளர். மற்றும் அனைத்து உறுப்பினர் களுக்கும்.உளமாரந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

திரு நாராயணன் அய்யா அவர்களும் அவர்களின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள்.நண்பர்கள் சினேகிதர்கள்.அயலார் அனைவரும்.நீண்ட ஆயுள்.நிறைந்த செல்வம்.அழியாப் புகழும்.அருளும்  பெற்று...வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு