ஞாயிறு, 29 அக்டோபர், 2017

அருள் பெற்று ஆட்சி செய்ய வாருங்கள் !

அருள் பெற்று ஆட்சி செய்ய வாருங்கள் !

நல்லவர்கள் வீட்டிலே அடைப்பட்டு கிடக்கிறார்கள்.

 தீயவர்கள் நாட்டிலே ஆட்சி செய்து கொண்டு உள்ளார்கள்.

 நல்லவர்கள் வெளியே வரவேண்டும்

தீயவர்கள் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

இதைத்தான் வள்ளலார் ...

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க
தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக.
எல்லோரும் வாழ்க இசைந்து !

என்று சொன்னார்..வள்ளலார்..

அந்த நன்னால் என்று வருமோ!

கலங்க வேண்டாம் காத்திருப்போம்.

வள்ளலார் பாடல் !

கருநாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும்கலக்கமுறேல் இதுதொடங்கிக்

 கருணைநடப் பெருமான்தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய

 நமதுசார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்திருநாள்கள்

 ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்திண்ணம்இதை உலகறியத்

 தெரித்திடுக மனனேவருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து

 மயங்கேல்வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.!

என்ற பாடல் வாயிலாக கருநாள்கள் மறைந்து திருநாள்கள் உதயமாகும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

அருள் நிறைந்த பெரியோர் நன்மார்க்கர் யார் ? அவர்கள் அருள் நிறைந்த சுத்த  சன்மார்க்கிகளாய் இருக்க வேண்டும்.

அந்த தகுதியை பெற சுத்த சன்மார்க்கிகள் ஒழுக்கம் நிறைந்து  பூரண அருளைப் பெறுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள வேண்டும்...

நானாகவும் இருக்கலாம் உங்களில் ஒருவராக யாராகவும் இருக்கலாம்..காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு