செவ்வாய், 17 அக்டோபர், 2017

தீபாவளித் திருநாள் !

தீபாவளித் திருநாள் !

ஏதோ ஒரு காரணத்திற்காக தீபாவளி பண்டிகையை தோற்று வைத்து விட்டார்கள்.அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டு ஆனந்தமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஏழை எளியவர் முதல் பணக்கார்ர்கள் வரை அவரவர் சக்திக்கும் வசதிக்கும் தகுந்தாற்போல்.புத்தாடைகள் .பலகாரங்கள்.பட்டாசுகள்.வாங்கி கொண்டாடி மகிழ்கிறார்கள்.எல்லாமே மகிழ்ச்சிதான்.

ஆனால் மக்கள் உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும்.ஒரே ஒரு வேண்டுகோள்...

உயர்ந்த அறிவு உள்ள மனிதர்கள்.பண்டிகை என்ற பெயரால் தாழ்ந்த அறிவுள்ள வாய்பேசாத அப்பாவி மிருக உயிர்களை கொன்று அதன் மாமிசத்தை உணவாக உட்கொள்வது எந்த விதத்தில் நியாயம் .சிந்திக்க வேண்டும்.

ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பதால்.பாவங்கள் தான் வந்து சேறுமே ஒழிய புண்ணியங்கள் வந்து சேராது.

மற்ற உயிர்களைக் காப்பாற்ற வேண்டிதான்  மனிதனுக்கு உயர்ந்த அறிவை இறைவன் கொடுத்துள்ளார்.இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியாவிட்டாலும் தயவு செய்து அழிக்காதீர்கள்.

இந்த தீபாவளித் திருநாளில்.உயிர்களை கொல்ல மாட்டோம்.அதன் புலாலை உண்ண மாட்டோம் என்ற சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.அதுவே இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும்.அதுவே உங்களுக்கு வரும் துன்பம்.துயரம் .அச்சம்.பயம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழிகாட்டும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஆதரவு அற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்து அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.அவர்களால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும். அதுவே உங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும்..

வள்ளலார் பாடல் !

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.!

நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.!

எல்லா உயிர்களிலும் இறைவன் திருநடம் புரிகின்றார் என்ற பாடல்.!

,உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்மயிரெலாம் புளகித் துளமெலாம் கனிந்துமலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்பயிரெலாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்பாடுகின் றேன்பொதுப் பாட்டே.!


உயிரெலாம் பொதுவி
னுளம்பட நோக்குகசெயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே!

 உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தேஉயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே!

 உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே !

என்னும் பாடல் வரிகளைக் கண்டு தெரிந்து தெளிந்து உயிர்கள் மேல் அன்பு.தயவு.கருணை காட்டி மகிழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு