வியாழன், 25 மார்ச், 2021

அரசியலில் எல்லோரும் குற்றவாளிகளே !

 *அரசியலில் எல்லோரும் குற்றவாளிகளே* ! 


நடிகர் கமல் அவர்கள் நான் முறையாக வரிகட்டுகிறேன் என்கிறார்.மகிழ்ச்சிதான்.

நீங்கள் வாங்கும் கருப்பு பணம் வெள்ளை பணம் எவ்வளவு  என்று வெளிப்படையாக சொல்லுங்கள். 


சினிமாவில் தான் கருப்பு பணம்  நிறைய விளையாடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.


சினிமா நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளத்தை உண்மையாக  வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை.


அரசியல்வாதிகளை விட சினிமா நடிகர் நடிகைகளே பண மோசடி பேர்வழிகள்.


ஒருசினிமாவல் நடிக்க அனைத்து நடிகர் நடிகைகளின் காலம் மொத்தமாக 3 மணிநேரம்தான்  தேவைப்படுகிறது.அதற்கு செலவாகும் பணம் கோடி கோடியாக செலவழிக்கப்படுகிறது.


அவரவர்கள் நடிப்பதற்கு வாங்கும் பணம் எவ்வளவு.அதில் கணக்கில் காட்டுவது. கணக்கில் காட்டாதது எவ்வளவு என்று வெளிப்படையாக அறிவிப்பார்களா ?  


அரசியலுக்கு வந்துவிட்டால் பணம் இல்லாமல் கட்சி நடத்த யாராலும் முடியாது.தேர்தலில் நிற்கவும் முடியாது என்பது சாதாரண மக்களுக்கும் தெரியும்.


அதே நேரத்தில் உண்மை பேசும் அரசியல்வாதிகளும் இல்லை சினிமாக்காரர்களும் இல்லை. அரசியல்வாதிகளை கூட நம்பலாம். சினிமாக்காரர்களை நம்பவேக் கூடாது.


இந்த உண்மையை நான் ஏன் சொல்கிறேன் என்றால் .நான்சினிமா உலகில் இருந்தவன்.சினிமா ஆசையில் நண்பரகளுடன் இரண்டு படம் எடுத்தவன். சினிமா உலகம் மோசமான உலகம் என்பதை தெரிந்து கொண்டவன். ஆதலால் சினிமா உலகம் வேண்டாம் என்று வெளியே வந்தவன்.


நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வேண்டாம் என்று சொன்னவன் சினிமா உலகில் நான் ஒருவனே ! 


அதனால் தான் சினிமா உலகம் என்பது தனி உலகம். அவற்றில் உள்ள குறைகளை அதிகம் சொல்ல விரும்பவில்லை. சினிமா மோகத்தில் அழிந்தவர்கள் அளவிடமுடியாது.


நடிகர்கள் நடிகைகள் அரசியலுக்கு வந்துவிட்டால் உத்தமர் வேடம் போடுவது ரொம்ப காலமாக உள்ளது. அவை மக்களை ஏமாற்றும் அசிங்கமான செயலாகும்.


அரசியலில் மக்களுக்காக உழைத்தவர்கள். உழைக்க தயாராக உள்ளவர்கள் யார் ?  என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது இருக்கின்றவர்களில் மக்களுக்கு நன்மை செய்கிறவர்கள் யார் ?  என்பதை சிந்தித்து ஓட்டு அளித்து *சட்டமன்ற உறுப்பினர்களை*  தேர்வு செய்வதே இன்றைய மக்களின் தலையாய கடமையாக இருக்கிறது. 


சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

ஓட்டு போடுங்கள். 


ஜனநாயகம் உங்கள் கையில். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு