ஞாயிறு, 14 மார்ச், 2021

வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமானவர்கள் !

 *வள்ளலாரின் சுத்த சன்மார்க்க  கொள்கைகளுக்கு விரோதமானவர்கள்.!*


வள்ளலாரின் சுத்த சன்மார்க்க  கொள்கைகளுக்கு *எக்காலத்திலும்*  எதிரானவர்கள் தடையானவர்கள்.

விரோதமானவர்கள் சமய மதவாதிகள் தான் என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார். 


சாதியும் மதமும் சமயமும் பொய் என்கிறார். 


மேலும்


இது தொடங்கி *எக்காலத்தும்* சுத்த சன்மார்க்கத்தின் *முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், 


*வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்*, எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். 


சுத்த சன்மார்க்கத்தின் *முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். 


என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க வேண்டுதலும்  விண்ணப்பமுமாகும்.


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்கின்ற உண்மை அறியாது சாதி சமய மதங்களைப் பின்பற்றிக்கொண்டு சன்மார்க்கத்தில் இருப்பவர்கள் வள்ளலார் கொள்கைகளுக்கு நேர் விரோதமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


சாதி சமய மதவாத பற்று உள்ள  சன்மார்க்கிகளால்  சுத்த சன்மார்க்க கொள்கைகளை உலகம் முழுவதும் *எக்காலத்திலும்* கொண்டு செல்ல முடியாது. இருட்டடிப்பு செய்து கொண்டே இருப்பார்கள்.


*ஆதலால்தான் வள்ளலார் எக்காலத்தும் முக்கிய தடைகளாக உள்ளது சமயங்கள் மதங்கள் என்ற வார்த்தையை கையாளுகின்றார்*. 

எனவே சுத்த சன்மார்க்க பற்று உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும்.


*கடவுள் இல்லை என்பது ஏமாற்று வேலை!*


*கடவுள் பல உண்டு என்பது பைத்தியக்காரத்தனம் !*


*கடவுள் ஒருவர் என்பதே உண்மை அறிவு !* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு