ஞாயிறு, 21 மார்ச், 2021

வடலூரில் சர்வதேச மையம் !

 *வடலூரில் சர்வதேச மையம்!*


வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திமுக கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளார் அவர்களுக்கு மகிழ்ச்சியான நல்வாழ்த்துக்கள்.


திமுக ஆட்சி காலத்தில்தான் வடலூருக்கு நல்ல பல செயல்களை செய்துள்ளார்கள் என்பதை நினைவு கூறுகிறோம். 


உதாரணமாக வடலூர்  சத்தியஞானசபை ரோடு பிரமாண்டமாக விரிவுப்படுத்தியது.


சத்திய ஞானசபையில் பூணுல் அணிந்த இளம்வயதுடைய இல்லறம் நடத்தும்  பிராமணர் பூசகரை நீக்கி. வள்ளலார் சொல்லியவாறு சாதி சமயம் மதம் போன்ற பற்று இல்லாத பொதுநோக்கம் உடைய  சன்மார்க்கிகளால்  ஜோதி வழிபாடு செய்ய வைத்தது.  


திமுக ஆட்சிக்கு வந்தால் வடலூர் புனித நகரமாக மாற்றப்படும்.


மேலும் வள்ளலார் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல *வடலூர் வள்ளலார் சர்வதேச மையம்* மிகுந்த பயன் உள்ளதாக அமையும் என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு