சனி, 11 செப்டம்பர், 2021

உலகின் பொது வழிபாட்டு முறை !

 *உலகின் பொது வழிபாட்டு முறை!*


*வடலூரில் மட்டுமே பொதுவான உண்மையான கடவுள் வழிபாடு காட்டப்படுகிறது*


*உலக வரலாற்றிலே தத்துவங்கள் அற்ற உண்மைக் கடவுள் வழிப்பாட்டை வடலூரில் தோற்றுவித்தவர் தொடங்கி வைத்தவர் திருஅருட்பிரகாச வள்ளலார்பெருமான் ஆவார்கள்*


*கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்ற உண்மையை உலகிற்கு காட்டியவர் வள்ளலார்*


வள்ளலார் பாடல்!


*தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்*

தத்துவா தீதமேல் நிலையில்


சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

சிவநிலை தெரிந்திடச் சென்றேம்


ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்

ஒருங்குறக் கரைந்துபோ யினம் என்று


அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!


மேலும் பதிவுசெய்கின்றார்


தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச்


சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா


சித்து வந்தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே


ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ்வருளே! 


மேலே கண்ட பாடலில் *தத்துவங்களை இயக்கும் தத்துவம்  எல்லாம் கடந்த தனிப்பெருஞ்ஜோதிதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் என்னும் உண்மையை தெளிவாக மக்களுக்குச் சொல்லுகிறார்*.


*தத்துவம் என்பது சிவத்திற்கு துணையாக இருப்பது ஜடத்தன்மை உடையதாகும். உயிரும் ஆன்மாவும் இயங்குவதற்கு ஜடதத்துவமான  உடம்புத் தேவைப்படுகிறது.பஞ்ச பூதங்களான ஜட தத்துவ அணுக்களைக் கொண்டு உடம்பும் அதனுள் இயங்கும் உறுப்புக்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு 72 ஆயிரம் நரம்புகளையும் இயங்க வசதியாக  மாயையால் கட்டிக் கொடுக்கப்படுகிறதுதான் உடம்பு.* *மாயையும் கடவுள் அல்ல மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பின் உள்ளே இயங்கும் தத்துவங்களும் கடவுள்கள் அல்ல* ஆன்மா உயிர் இயங்க தேவையான கருவிகளே தத்துவங்கள் எனப்படும்.


*கடவுள் தன்மைக்குத் தகுதியானது ஆன்ம ஒளி ஒன்று மட்டுமே*


*ஆதியிலே இதை எல்லாம் மறைத்தவன் ஓர் வல்லவன்*

*அவன் யார்?* என்பதை வள்ளலார் பேருபதேசத்தில் பதிவு செய்துள்ளார்.


*அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்.அதன் உண்மை என்னவென்றால் நான் அந்த பூட்டை உடைத்து விட்டேன் என்பது பொருளாகும்.*


*இப்போது இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிரச்சனையில் உள்ளது *விநாயகர் முருகன் சிலைகள் இவை  யாவும் தத்துவங்கள்*! 

தத்துவங்களை கடவுள் என நம்பவைத்து ஒரு கூட்டம் மக்களை அரசியல் வேட்டையாடிக்கொண்டு உள்ளார்கள்


*இந்து மதத்தைச் சார்ந்த பெரிய பெரிய ஆலயங்கள் கோயில்கள் சிறிய கோயில்கள் யாவும் மேலும் சாதி சமய மதம் சார்ந்த வழிப்பாட்டு கடவுள் சிலைகள் வழிபாட்டு முறைகள் யாவும் தத்துவங்களேயாகும் மனித உடம்பின் அமைப்பும் அவ்வுடம்பில் உள்ள  உயிர் ஆன்மா இயங்கும் விதமும் உடம்பின் உள் உருப்புக்களுமான தத்துவங்களும் அவைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் தன்மையைக் கண்டு கொண்டு  புறத்தில் ஒவ்வொரு தத்துவங்களுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து சிலைகளாக்கி  அவைகளை கடவுள் வழிபாடாக சுமார் 5000 ஆண்டுகளாக மக்களைப் பின்பற்றச் செய்து வருகிறார்கள்* அவற்றை உண்மை என்றே இன்றுவரை மக்கள் நம்பிக்கை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். 


இவற்றை வைத்து ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வாழ்க்கை நடத்திக்கொண்டு வருகின்றது.


*வள்ளலார் எழுதிவைத்துள்ள திருஅருட்பா உரைநடைப்பகுதியிலும் பாடல்களிலும் உடம்பின் அருமைப்பற்றி தன்னுடைய அருளால் ஸ்கேன் செய்து பார்த்து அணு அணுவாக ஆராய்ந்து எல்லா தத்துவங்களுக்கும் விளக்கம் தந்து உள்ளார்*


*படித்தால்தான் உண்மைஎது ! பொய்எது ! என்று அறிவால் அறிந்து கொள்ளமுடியும்.*


*தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீகவாதிகளும் சரி* *பகுத்தறிவுவாதிகளும் சரி* *தமிழ்படித்த சான்றோர்களும் சரி* *பட்டிமன்ற பேச்சாளர்களும் சரி*  *அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி வல்லுநர்களும் சரி*

*கண்ட கண்ட குப்பைகள் எல்லாம் படிக்கிறார்கள் அவற்றில் உள்ள பொய்யான கற்பனைக் கருத்துக்களை எல்லாம் வாய்கிழிய மேடையில் பேசுகிறார்கள்*.


 *உலகிற்கே உணமையைச் சொல்லியுள்ள திருஅருட்பாவை ஊன்றி படிக்க இயலாதவர்களாய் உள்ளார்கள்.இதுவே சமுதாய சீர்கேட்டிற்கு காரணமாக உள்ளது*.


*திருஅருட்பாவை தொடும் தகுதி அவர்களுக்கு இல்லை என எண்ணவேண்டி உள்ளது*. 


*தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதி போன்றவர்களுக்கு வள்ளலார் கொள்கையில் மிகவும் முக்கியமான சாதி சமயம் மதம் அற்ற சமூக நீதிக் கொள்கைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்* 


*பெரியார் சமய மதக்கடவுள்களை வெறுத்தார் அந்த கடவுள்களைக் கற்பித்தவன் முட்டாள் என்றார்*.

*வடலூர் வந்து பார்த்த பெரியார் வள்ளலார் காட்டிய கடவுளை ஏற்றுக்கொண்டார்*.


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பது திராவிட கட்சிகளுக்கு ரொம்ப பிடிக்கும்*.

*அதனால்தான் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கான்கின்றேன் என்றார்*. 


*கலைஞர் அவர்கள் வள்ளலார் காட்டிய மஞ்சள்  வெள்ளைத் துணியை கடைசிவரை அணிந்திருந்தார்*.

*மேலும் வள்ளலார் சொல்லிய ஒளி வழிப்பாட்டு முறையை ஏற்றுக்கொண்டார்* 

*எல்லோரும் சகோதர உரிமை உடையவர்கள் என்று வள்ளலார் சொல்லியதை என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்கள் என்று மேடை தோறும் சொல்லி வந்தார்.*


*இதையெல்லாம் நான் சொன்னால் விபரம் அறியாத சமய மதம் சார்ந்த சன்மார்க்கிகள் எனக்கு தி மு க முத்திரையை குத்துகிறார்கள்* 


*எனக்கு எந்த கட்சியிலும் தொடர்பு இல்லை உறுப்பினர் இல்லை என் உயிர் மூச்சு உள்ளவரை வள்ளலார் கொள்கை மட்டுமே என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை*   


*தமிழக அரசு*


*இப்போது மக்கள் நலன் கருதி மக்கள் ஆட்சி செய்யும் தி மு க அரசு வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்க போவதாக அறிவித்து அதற்கு வேண்டிய ஆலோசனைகள்  பணிகள் துரிதமாக நடந்து கொண்டு வருவதாக கேள்விபட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.* 


*தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள்  தேர்தல் வாக்குறுதியில் அளித்த வடலூர் முக்கிய இடம் பிடித்துள்ளது . உலகம் எங்கும் வாழும் சன்மார்க்க குடும்பங்கள் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சியைத் தந்துள்ளது*


*அதில் சில புல்லுறுவிகள் உள்ளே புகுந்து வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமாக  சமய மதக் கருத்துக்களை உள்ளே புகுத்தி அறிவிப்பார்கள் தமிழக அரசு அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்*


*வள்ளலார் கொள்கையை நன்கு அறிந்த உண்மையான நேர்மையான நீண்ட அனுபவமும் கொள்கை பிடிப்பும் உள்ளவர்களையும் சுத்த சன்மார்க்கத்தைச் பின்பற்றி வாழ்ந்து கொண்டுள்ள சன்மார்க்கம் சார்ந்த சான்றோர்களின் அறிவுரையைத் துணைக்கொண்டு செயல்பட வேண்டுமாறு மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களையும்.  அறநிலையத்துறை அமைச்சர். அவர்களையும் தமிழக ஆட்சி துறை அதிகாரிகளையும் பணிவான முறையில் அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்* 


நல்லதே நடைபெற வேண்டும் என்று இயற்கை உண்மையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக்கொள்வோம்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு