வியாழன், 9 செப்டம்பர், 2021

நான்கு வருணங்கள்!

 *நான்கு வருணங்கள!*


பொறுமையாக ஊன்றி படிக்கவும்!


*சாதி சமய மதங்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே வள்ளலார் தோற்றுவித்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கக் கொள்கையாகும்*


*வள்ளலார் பாடல்!*


நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே


*மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலை* நீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே


*கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே*

காண்பன எல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே


மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே.!


*நான்கு வருணம் என்ற சாதி பாகுபாட்டை உருவாக்கி அதற்கு தகுந்த ஆசிரமம் ஆசாரம் முதலிய கலைகளைத் தோற்றுவித்து மனிதகுலத்தைப் பிரித்து வைத்துள்ளது சிறு பிள்ளகள் விளையாடுவதற்கு விளையாட்டு மொம்மைகள் வாங்கித் தருவதுபோல் மனிதகுலத்தை விளையாடவைத்து வேடிக்கைப் பார்க்க வைத்துவிட்டார்கள் முட்டாள்கள்* *அவர்கள்தான் அன்றும் இன்றும்  சமுதாய துரோகிகள் என்கிறார் வள்ளலார்.*


நான்கு வருணத்தை

(நான்குசாதியை) படைத்த  முட்டாள்களுக்கு மனிதனின் உடம்பின் மேல் உள்ள தோலை வைத்து மேல்சாதி கீழ்சாதி என பிரிக்க முடியுமா ? நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில். சாதியைக்காண முடியுமா?  மேலும்  ஆகாயம் அக்கினி நீர் நிலத்தில் சாதியைக் காட்டமுடியுமா ?   மேலும் உயிரில் ஆன்மாவில் சாதியைக் காட்ட முடியுமா ? இவைகளில் சாதியை சமயத்தை மதத்தை கண்டு அறியமுடியுமா !  எனக் கேள்வி கேட்கிறார் வள்ளலார்.


கடவுளை மையமாகவைத்து  சாதிகளைப் பிரித்து வைத்தவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் உள்ளது உள்ளபடியே வள்ளலாருக்கு வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்கிறார்.  


இறைவனால் படைத்த பஞ்சபூதங்களில் சாதி சமயம் மதம்போன்ற பிரிவினை உண்டா? பஞ்ச பூதங்களின் அணுக்களால் பின்னப்பட்ட உடம்பில் வாழ்ந்துகொண்டு சாதி சமய மதம் என்ற முட்டாள்தனமான  கொள்கைகளை உருவாக்கி மனித நேயத்தையும் ஆன்மநேயத்தையும் கெடுத்து நாட்டை நாசமாக்கி விட்டார்கள் சாதி சமய மதவாதிகள்.


முட்டாள்தனமாகத்  சாதி சமய மதங்களைத் தோற்றுவித்து மனிதகுலத்தை பிரித்து வைத்தவர்களை ஞானிகள் என்றும் அருளாளர்கள் என்றும் போற்றி வணங்குவதும் வழிபடுவதும் கொஞ்சம்கூட அறிவில்லாத முட்டாள்தனமான கண்மூடித்தனமான செயலாகும் என்கிறார் வள்ளலார்.


*உலகில் உள்ள சாதி சமய மதவாதிகளால் எழுதி வைக்கப்பட்டுள்ள கற்பனைக் கதைகள் அதன் தத்துவங்கள் அதில் சொல்லப்பட்டுள்ள கடவுள்கள் மற்றும் ஆச்சார சங்கறப விகற்பங்கள்  யாவும் பொய் பொய்யே ! அதனால் அவற்றில் புகுதாதீர் வீணில் அலையாதீர் என்கிறார்* *ஆதலால் உலகில் உள்ள எந்த நூல்களையும் படிக்காதீர்கள் அவற்றில் நம்பிக்கை வைக்காதீர்கள் என்கிறார்* 


ஏன் என்றால் ? *அவற்றை எழுதியவர்கள் மாயையில் சிக்குண்டவர்கள் உண்மையை எழுதும் தகுதி அற்றவர்கள் அவர்கள்  எல்லோரும் பொய்யே புனைந்துரைக்கும் கொள்ளைக் கூட்டத்தலைவரகள் என்கிறார் வள்ளலார்*.


*வள்ளலார் பாடல்!*

 

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்


*கள்ளமுறும் அக்கலைகள்* *காட்டியபல் கதியும்*

*காட்சிகளும் காட்சிதரு கடவுளரும்* எல்லாம்


*பிள்ளைவிளை யாட்டென* நன் கறிவித்திங் கெனையே

பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே*


தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.! 


மேலே கண்ட பாடல் எளியதமிழில்தான் உள்ளது ஊன்றி படித்து அதிலுள்ள உண்மை விபரத்தையும் விளக்கத்தையும்  தெரிந்து கொள்ளங்கள் என்கிறார் வள்ளலார்.


மேலும் *ஒருபாடல்*


*கண்டதெலாம் அநித்தியமே* *கேட்டதெலாம் பழுதே*

*கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே*


*உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே*

*உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே*


விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே


எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!


 *மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதனைப் பக்குவப்படுத்த எழுதி வைத்துள்ள நூல்கள் எல்லாம் பொய் பொய்யே அவற்றை படிக்காதீர்கள் அவற்றில் புகுதாதீர்கள் என்று அழுத்தமாக துணிச்சலுடன் சொல்லுகிறார்.மேலும் கண்டது கேட்டது கற்றது களித்தது உண்டது உட்கொண்டது எல்லாமே குறைபாடுகள் உடையதே ஆகும்.* 


*இவ்வளவு காலம் சாதி சமய மதத்தை நம்பி ஏமாந்து வாழ்ந்து வீணாகப் போனது போதும* *இனிமேல் மனிதகுலத்தின் நன்மைக்காக உண்மையை வெளிப்படையாக  இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய மெய்நெறியாகும்*. *இந்த மெய் நெறியில்தான் மெய்ப்பொருளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரிந்து கொள்ளமுடியும். மெய்ப்பொருளை நன்கு தெரிந்து உணர்ந்து அறிந்து கொண்டால் மட்டுமே  அருளைப் பெறமுடியும்*


*மெய்ப்பொருளை அறிந்து கொள்வதற்கும் அருளைப்பெறுவதற்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன் ஆன்மா என்ற நான்கு ஒழுக்கங்களே நான்கு தூண்களாகும்* *இதுவே கடவுளின் பொதுவான வழிபாட்டு முறையாகும். என்பதை சுத்த சன்மார்க்கத்தை சார்ந்த அன்பர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும்*.

*மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்*


*சன்மார்க்க சங்கங்களை பஜனை மடங்களாக ஆக்காதீர்கள்* *ஜீவகாருண்ய தொண்டு ஆற்றி சத்விசாரம் செய்தால் போதுமானதாகும்*


*வள்ளலார் சொல்லியுள்ளதை பின்பற்றாமல் வாழ்பவர்களை சன்மார்க்கிகள் என்று சொல்லுவதற்கு தகுதி யற்றவர்களாவார்கள் அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் புறம் தள்ளிவிடுவார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்*.


*மரணம் இல்லாப்பெருவாழ்வு என்பதை  அடைவதற்கு முதலில் வள்ளலார் சொல்லியுள்ள  ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.*


*ஒழுக்கம் இல்லாமல் என்ன கரணம் அடித்தாலும் வேலைக்கு உதவாது*


*சாதி சமயம் மதங்களை விட்டால் மட்டுமே ஒழுக்கம் கைகூடும்*.

*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகளே சாதி சமய மதங்களாகும்*


*வள்ளலாரே சொல்லுகிறார்*


*சாதி சமயச் சழக்கைவிட்டேன்*  *அருட்*

*சோதியைக் கண்டேனடி* - *அக்கச்சி

சோதியைக் கண்டேனடி* சோதியைக் கண்டேனடி - அக்கச்சி

சோதியைக் கண்டேனடி*.!


என்று தெளிவாக வெளிப்படையாகச் சொல்லுகிறார்.


*ஒரு சிறு விளக்கம்*


(தென்னிந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகளில் சுவாரசியமான சில விவாதப் பொருட்களில், தமிழகத்தின் வருணப் பாகுபாடு குறித்த விவாதமும் முக்கியமான ஒன்றாகும். தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று இரு பிரிவுகளே காணக்கிடைக்கின்றன. வட *இந்தியாவில் இன்று வரை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வருணங்கள் சமூகத்தில் உள்ளன*. இன்றைய *தமிழகத்திலோ, பிராமணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் எனக் கருதுவதால் இங்கு பிராமணர், சூத்திரர் என இரண்டு வருணப் பாகுபாடே உள்ளதாகக் கருத வேண்டி யுள்ளது*.)


*வருணம் என்ற சாதி பாகுபாட்டையும் பொய்யான வேதம் ஆகமம் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்களும் அவற்றினால் படைக்கப்பட்ட  கற்பனைக் கதைகளையும் அவற்றில் நடிக்கவைத்த கதாபாத்திரக் கடவுள்களையும்*

*அவற்றில் உள்ள மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர் வள்ளலார் ஒருவரே!*


*இன்று உலகம் முழுவதும் சாதி சமய மதங்களின் எதிர்ப்பு குரல்கள் வலுவடைந்து உள்ளன. இன்று உலகம் முழுவதும் வள்ளலார் விதைத்த விதைகள் முளைந்து வளர்ந்து சுத்தசன்மார்க்க பயிர்கள் பல ரூபங்களில் வீரியத்துடன் வெளிப்படுகின்றன*


*இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளையாடும் ஞானவிளையும் விளையாட்டாகும்.*   *வள்ளலார் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்ற சூழ்ச்சுமம் இதுதான்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு