வியாழன், 23 செப்டம்பர், 2021

பண்ணிய தவம் பலித்தது !

 *பண்ணிய தவம் பலித்தது*!


*அமுதாகதிர்வேல் அவர்கள் அபாய கட்டத்தில் இருந்து மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளார்.*!


*ICU வில் இருந்து தனி அறைக்கு  அமுதாகதிர்வேல்  இன்று மாலை 6-30 மணிக்கு    வந்துள்ளார்* சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது


*தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் வாழும் தயவுடைய சன்மார்க்க அன்பர்கள் மேலும் மலேசியா சிங்கப்பூர் பிரான்ஸ் கனடா சவுதிஅரேபியா அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வாழும் தயவுடைய சன்மார்க்க சான்றோர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் உறவினர்கள் சான்றோர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளும் பலித்துள்ளது*.


*சிறப்பு வழிபாடு*


*நாங்கள் எதுவும் சொல்லாமலே*

*வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் சார்ப்பாக நிர்வாகமே சத்திய தருமச்சாலையிலும் கல்பட்டுஐயா  அவர்கள் முன்னிலையிலும் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றதாக தருமச்சாலை கணக்கப்பிள்ளை எனது நீண்டகால நண்பர்  திரு ஞானப்பிரகாசம் அவர்கள் இன்று காலை 6-30 மணிக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் சொன்னார்*.


*மேலும் அமுதா அம்மா அவர்கள் மீண்டும்  பூரண குணமடைவார்கள் மனம் சஞ்சலப்படவேண்டாம் என்று அன்புடன் ஆறுதல் சொன்னார்*. 


*வடலூர் வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் அன்பான நன்றியும் வந்தனத்தையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*


*ஈரமும் அன்பும் பாசமும் பற்றும் கொண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய  அனைவருக்கும் என்ன கைமாறு எங்களால்   செய்யமுடியும்*.


*உங்களின் திருவடி பாதங்களை  வணங்கி வாழ்த்துவது தவிர வேறு எதுவும் எங்களுக்கு தெரியவில்லை*.

*உங்கள் அனைவரையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகவே பார்க்கிறோம்*.


*உங்கள் அனைவருடைய பிரார்த்தனையாலும் திருஅருட்பிரகாச வள்ளலார்  தயவாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை அருளாலும்  அமுதா அவர்களின் உயிரையும் உடம்பையும் காப்பாற்றி உள்ளார் என்பது சத்தியமான உண்மையாகும்*.


*பிரார்த்தனைக்கும் அன்னதானத்திற்கும் இவ்வளவு வலிமை உள்ளதை நேரிலே கண்டுகொண்டோம்*


*எங்கள் மீது அன்பும் பாசமும் பற்றும் வைத்துள்ள எல்லோருக்கும் எங்களுடைய குடும்பத்தின் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறோம்*


*எங்கெங் கிருந்து உயிர் ஏதெது வேண்டினும்*

*அங்கங்கு இருந்துஅருள்* 

*அருட்பெருஞ் ஜோதி*! (அகவல்)


வள்ளலார் பாடல்!


*பண்ணிய பூசை நிறைந்தது* சிற்றம் பலநடங்கண்


*டெண்ணிய எண்ணம் பலித்தன* மெய்இன்பம் எய்தியதோர்


தண்ணியல் ஆரமு துண்டனன் கண்டனன் சாமியை நான்


*நண்ணிய புண்ணியம் என்னுரைக் கேன் இந்த நானிலத்தே!*


*நமது அருள் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை உடையவர் என்பது மறுக்க முடியாத சத்திய உண்மையாகும்* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயர்கள் 

ஈரோடு கதிர்வேல்

அமுதாகதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு