புதன், 15 மே, 2019

உலகம் முழுவதும் மத வெறியர்கள் !

உலகம் முழுவதும்  மத வெறியர்கள் !

உலகில் தோன்றும் குற்றங்களுக்கு எல்லாம் காரண கர்த்தாவாக இருப்பவர்கள் சமயவாதிகளே ! மதவாதிகளே !

தீவிரவாதம்.பயங்கரவாதம்.
தேசதுரோகம்.
நக்ஸல்பார்ட்டி.கொலை.கொள்ளை. கற்பழிப்பு.போன்ற எல்லா குற்றங்களும் செய்பவர்கள் மதவாதிகளே என்பது உலகம் அறிந்த உண்மை...

ஒவ்வொரு மதமும்.ஒவ்வொரு சமயமும் பொய்யான கடவுளை படைத்து.என்கடவுள் பெரியது என்றும் உன் கடவுள் சிறியதும் என்றும் போட்டிப்போட்டுக் கொண்டு கடவுள் பெயரால் உலகை அழித்துக் கொண்டு உள்ளன.

இதுவே சமய.மத வெறியர்களின் தூண்டுதலுக்கு காரண காரியமாக உள்ளன.

இன்று உலகை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் சமய.மதவாதிகளே.இவர்களால் உலகையோ.மக்களையோ.இயற்கை வளங்களையோ.உலக உயிர்களையோ. எக்காலத்திலும் காப்பாற்ற முடியாது..

*எல்லோருமே சமய மதவாத குருடர்கள்.திருடர்கள் என்பதை வள்ளலார் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.*

*முதலில் மதங்கள் தோன்றின.பின் சமயங்கள் தோன்றின.சமயங்கள் வாயிலாக சாதிகள் தோன்றின*.

சாதி.சமய.மதங்கள் வாயிலாக மக்களை கூறு போட்டு பிரித்து விட்டார்கள்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை மாறி ..மக்களை வேறுபடுத்தி விட்டார்கள்.ஆதலால் மக்கள் மனிதநேயம் இல்லாமல்.ஆன்மநேயம் என்னதென்று தெரியாமல்.வெறிபிடித்த மிருகம் போல் மாறி விட்டார்கள்.நாடு கொலைகளமாக.சுடுகாடாக மாறிவிட்டன.

மதங்களையும்.சமயங்களையும்.
சாதிகளையும் தோற்றுவித்தவர்கள் முதல் குற்றவாளிகள் ஆவார்கள். அவர்கள் விதைத்தை விதைகள் உலகம் முழுவதும் வேர் ஊன்றி படர்ந்து விட்டன.

அவர்களை ஆன்மீகவாதிகள் என்றும் ஆன்மீகத் தலைவர்கள் என்றும்.அவர்களையே கடவுள் என்றும்.மக்கள் போற்றி வழிபட்டுக் கொண்டு வருகிறார்கள். அவைகள் முற்றிலும் தவறான வழிபாடாகும்.

*விதை கொடுத்தவன் மதவாதி.விதை போட்டவன் சமயவாதி.. அறுவடை செய்தவன் சாதீயவாதி..அதை அனுபவிப்பவர்கள் மக்கள்*.

அந்த மக்கள்தான் இன்று உலகம் முழுவதும் துன்பத்தில் வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

பாவம் அப்பாவி மக்கள் ! உண்மை ஒருபுறம் இருக்க பொய்யைப் பிடித்துக் கொண்டு குருடர்கள் போல் தடுமாறிக் கொண்டு உள்ளார்கள்.

இவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே...உலகத்தையும் உயிர்களையும் படைத்த  உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..ஓர் மாபெரும் சக்தி வாய்ந்த பக்குவம் வாய்ந்த ஆன்மாவை உலகிற்கு அனுப்பி வைக்கிறார்.

அந்த ஆன்மா மனித உருவம் எடுத்து இவ்வுலகிற்கு வருகின்றது...

*அவர்தான் திருவருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்..*

அவர் உலக கல்வி கற்காமல் அருள் கல்வியை இறைவனிடமே கற்றவர்.

மரணத்தை வென்ற மகான் ஆவார்..

மரணத்தை வென்ற பிறகுதான் உலக மக்களுக்கு உண்மையை போதிக்கிறார்..

*மரணத்தை வெல்லாமல் உண்மையை போதித்து இருந்தால்.காந்தியை கொன்றது போல் .தன்னையும் இம்மதவாதிகள் கொன்று விடுவார்கள் என்பது வள்ளலாருக்குத் தெரியும்*.

எனவேதான் இறைவனிடத்திலே சாகா வரம் பெற்று உலக மக்களை திருத்திக் கொண்டு உள்ளவர் வள்ளலார்.

சமய மதவாதிகளின் பொய்யான சூது வாது ஆட்டம் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

பேய் பிடித்தவர்கள் சமய மத வாதிகள் !

வள்ளலார் பாடல் !


மேலே கண்ட பாடலில் 

...சாதி.சமய.மதங்களின் வெறிபிடித்த கொலை வெறி ஆட்டத்தை அடக்கவும்.புதிய உலகத்தை உறுவாக்கவும்.சாதி.சமய.மதங்களின் பிடியில் இருந்து .மக்களை காப்பாற்றவும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி... பெரிய பொருப்பை வள்ளலார் ஏற்றுள்ளார்.

 இனி நட்க்கவிருக்கும் புதிய சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தையும்.அதனால் மக்கள் அடையும் ஆன்ம லாபத்தையும்.அறிவு சார்ந்த சுகநிலைப்பற்றியும் தெளிவுப் படுத்துகின்றார்.

மேலும் சொல்லுகிறார் ! 

மேலே கண்ட பாடலில் மிகவும் தெளிவாக விளக்குகின்றார்.

இதுவரை உலகில் தோன்றிய பலப்பல சமயங்கள் மதங்கள் யாவும் பவநெறி என்கிறார் வள்ளலார்...பவநெறி என்பது பொய்யான கற்பனை நெறிகள் என்கிறார். 

அதனால் உண்மை நெறி என்ன என்பது தெரியாமல் மக்கள்  அழிந்து கொண்டுள்ளார்கள். எனவே மக்களை காப்பாற்றுவது இறைவன் கட்டளையாகும்.

இறைவன் ஆணையை சிரமேற் கொண்டு .உண்மையான இறைவன் யார் ? என்பதை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி. உலக மக்கள் அனைவரும் இறைவன் குழந்தைகள் என்பதை உணர்த்தி.மனித நேயத்தை உண்டாக்கி..ஆன்மநேயத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க சுகநிலை என்பதாகும்..

உலகப் பொது நெறியான சுத்த சன்மார்க்க நெறி ஒன்றுதான் மக்களை புனிதர்களாக்கும் பொது நெறியாகும்.

எனவே உலகில் தோன்றியுள்ள பொய்யான சாதி சமய மதங்களின் கொள்கைகளை...மக்களுக்கு   பொய் என்பதை உணர்த்த வேண்டும்.பொது நெறிக்கு மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்கிகளின் தலையாய கடமையாகும்...

இந்த சுத்த சன்மார்க்க நெறிக்கு தலைமை வகிப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் என்பதை மக்கள் தெரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்..

செயல் தலைவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ! 

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச்
சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே..

*சுத்த சிவ சன்மார்க்கத் தலைவனே*நிற்போற்றும்
என்மார்க்கம் நின் மார்க்க மே !

என்கிறார் வள்ளலார். நாம் தெளிவு பெற வேண்டும்...

வள்ளலார் இடம் பொறுப்பை ஒப்படைக்கும் பாடல் !

கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்லப்
பிள்ளை என எனக்கு பெயர் இட்டாய்..

தெள்ளமுதம் தந்தாய்

 *சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்*

எந்தாய் கருணை இது !

என்னும் பாடலிலே தெளிவாக விளக்கி காட்டுகிறார்..

எனவே துன்மார்க்கங்களை தொலைத்துக் கொண்டுள்ளார் வள்ளலார்.

வள்ளலாரின் தெளிவான பாடல் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன்.. என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத்தாலே மகிழ்ந்து !

மேலே கண்ட பாடலின் வழியாக தெளிவுப் படுத்துகின்றார்..

எனவே உலக மக்கள்  சாதி.சமய.மதம் அற்ற உலகப் பொது நெறியான சுத்த சன்மார்க்க தனி நெறியைப் பின்பற்றி
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு

என்றும் அழியாத அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்...

உண்மைக் கடவுளை தெரிந்து கொள்ள வடலூரில் சத்திய ஞானசபையும்.

உலக உயிர்களைக் காப்பாற்ற வடலூரில் சத்திய தருமச்சாலை யும் தோற்று வித்து உள்ளார்.

இறைவன் வள்ளலாரைத் தொடர்பு கொண்டு சித்திபெற்ற இடம் வடலூரை அடுத்த மேட்டுகுப்பத்திலும் உள்ளன.

எல்லோரும் தொடர்பு கொண்டு பயன் அடைவீர் அருள் பெறுவீர்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு