திங்கள், 3 செப்டம்பர், 2018

முக்கிய செய்தி !

முக்கிய செய்தி !

30-3-1871 ஆம் ஆண்டு வள்ளலார். சமரச சுத்த சன்மார்க்கிகளுக்கு இட்ட சமாதி கட்டளை.!

அன்புள்ள நீங்கள் சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு மிகவும் உரிமை உடையீர்கள் ஆகளில் உங்களுக்கு உணமையுடன் அறிவிப்பது.

நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளால் சுகமாக வாழ்வீர்களாக..

கர்ம கால முதலிய பேதங்களால் யாருக்காயினும் தேக ஆனி (மரணம் )நேரிட்டால் தகனம் செய்யாமல்.சமாதியில் (புதைக்க) வைக்க வேண்டும்.
இறந்தவர்கள் திரும்ப எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம். என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவும் துன்ப்ப் படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடன் இருக்க வேண்டும்.

புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.மனைவி இறந்தால் புருடன் வேறு திருமணம் பிரயத்தனஞ் செய்ய வேண்டாம்.பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்.கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.

தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில்.நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள்.செய்து இருந்தால்.சமரச சுத்த சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும்.நிலைபெற விளக்கம் செய்யும் பொருட்டாகவும்.சிதம்பரஞ்கோவில் ( வடலூர் உத்தர ஞான சிதம்பரம் என்னும் சத்திய ஞானசபை ) திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்து

எனது தந்தையாராகிய ( அருட்பெருஞ்ஜோதி) எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் .சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு .எழுந்த்தருளிக் காட்சி கொடுக்கும் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக இருக்கின்றது.

அந்த்த்  தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகி இருந்து இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து அருள்வார் இது சத்தியம்.இது சத்தியம்....

இந்தக் கடிதம் வெளிப்பட்டு அறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பி அருள்வார்.இது வெளிப்பட்டு அறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது. அது சன்மார்க்கத்திற்கு தக்கதும் அல்ல....ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக....

எனக்கு உலக அறிவு தெரிந்த்து தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம் அடையும் வரையில்.என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும்.என்னைக்கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து.இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து .சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய .
பெருங்கருணை வள்ளல்.
 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சாலைக்கு உரியவர்களாகி இருந்தும்.அவ நம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும்.இந்த உபகாரம் செய்தே அருள்வார்...

ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள்.
ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள்..பெரிய களிப்பை அடைவீர்கள்.இது சத்தியம்.இது சத்தியம்.

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்..

என்று கையொப்பம் இட்டு வள்ளலார் வெளியிடுகின்றார்..

இந்த விண்ணப்பத்தை ஒவ்வொருவரும் ஊன்றி படித்து தெரிந்து கொண்டு .இனிமேல் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

இது திருவருள் ஆணை என்பதை அறிந்து தெரிந்து புரிந்து  கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு