புதன், 19 செப்டம்பர், 2018

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி யர் !

கடவுள் ஒருவரே !
அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லி உள்ளலார் .வள்ளலார்.

அவர் எங்கு இருந்து இயங்கி கொண்டு உள்ளார் என்பதையும் தெளிவுபட விளங்கும்படி விளக்கி உள்ளார்..

அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தின் முதல் பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்தருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியேஅருட்பெருஞ் சித்திஎன் அமுதே

அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமேஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

என்னும் பாடலில் ....அருட்பெரும் வெளியான அருள் வெளியில் .அருட்பெருஞ்ஜோதி யாக இயற்கை உண்மையாக.இயற்கை விளக்கமாக.இயற்கை இன்பமாக ...

எல்லா அண்டங்களையும்.எல்லா உலகங்களையும்.அதில் உள்ள எல்லா உயிர்களையும்.எல்லாப் பொருள்களையும்.எல்லா தத்துவங்களையும்.தத்துவி களையும்.

தோற்றுவித்தல்.இயக்குவித்தல்.அடக்குவித்தல்.மயக்குவித்தல்.தெளிவித்தலும் ஆகிய தொழில்களை செய்விக்கும்.அருள் ஆற்றல் உள்ள ஜோதிதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்..

அந்த அருட்பெருஞ்ஜோதி யை கண்டவர்தான் வள்ளலார்.எனவே தான் அந்த உண்மைக் கடவுளை உலக மக்களுக்கு தெரியப்படுத்த வடலூரில்.சாதி.சமயம்.மதம்.அற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யைத் தோற்றுவித்துள்ளார்..

வடலூர் சத்திய ஞானசபையானது ..உருவ வழிபாடு அற்ற ஒளிவழிபாட்டை குறிக்கும். செய்யும் இடமாகும்..

இந்த உண்மைத் தெரியாமல் மக்கள் உருவ வழிபாட்டையும்.ஒளி வழிபாட்டையும் ஒன்றாக நினைத்து வழிபடுவது வழிபாடு செய்வது அறியாமையாகும்...

வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்களே இன்னும் அறிவு விளக்கம் இல்லாமல் அறியாமையில் இருப்பது வேதனையாக .வருத்தமாக இருக்கின்றது...இவர்களே திருந்தாமல் மக்களை எப்படி நல்வழிக்கு கொண்டு வருவார்கள்...

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மை தெரியாமல்.அவரிடம் தொடர்பு கொள்ளாமல்..எந்த ஒழுக்கமும் கை கூடாது..

 சுத்த சன்மார்க்க கொள்கைக்கு முக்கிய தடையாக இருப்பது..எது என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லுகிறார்...

வள்ளலார் சொல்வதை கவனமாக படித்து பாருங்கள் !

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்திலும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார .சங்கற்ப .விகற்பங்களும்.வருணம்.ஆசிரிம்ம் முதலிய

உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் .எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்...

என்று அழுத்தமாக விண்ணப்பம் செய்கின்றார்..செய்யச் சொல்லுகிறார்...

நாம் வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்கிறோமா ? பின் பற்றுகிறோமா ?

எந்த ஆச்சார சங்கற்பங்களையும்.விடாமல்.சமய.மத வாதிகளைப் போல் .சன்மார்க்கிகள் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வாரா ? என்றால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதுதான் உண்மை...

இந்த உண்மையை ஈரோடு கதிர்வேல்.எடுத்து சொன்னால்.அவனை நீங்கள் எதிரியாக பார்க்கிறீர்கள் .

நான் சமய மதங்களை சாடுவதாக நினைக்கிறார்கள்..வள்ளலார்தான் சமய மதங்கள் யாவும் பொய் என்று ஆதாரத்தோடு சொல்லுகின்றார்.அவர் சொல்லியதை நான் மக்களிடம் கொண்டு செல்கிறேன் ...என் தனிப்பட்ட கருத்தோ.சொந்த கருத்தோ எதுவும் கிடையாது என்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள்...

சாதியும் மதமும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ! ...என்கின்றார்...

மேலும்...

வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதம் ஆகமத்தின. விளைவு அறியீர்.

சூதாக சொன்னது அலால் உண்மை வெளித் தோன்ற உரைக்கவில்லை..

என்ன பயனோ இவை !

என்று வேதம் ஆகம்ம்.புராணம்.இதிகாசம்.சாத்திரம் எல்லாம் பொய் என்றுசாடுகின்றார் .

மேலும்......

எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

என்று ஆயிரக்கணக்கான பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளிலும் தெரியப்படுத்தி உள்ளார்....

நம்மைப் படைத்த உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தெரியாமல்.பொய்யான தாய் தந்தையை வணங்க செய்தவர்கள் தான் சமய மதவாத ஆன்மீக பொய்யான அருளாளர்கள் என்பதை வள்ளலார் சாடுகின்றார்.

நான் அதைத்தான் மக்களிடம் சொல்லுகிறேன்.....

கடவுள் உண்மையை உலக மக்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

கடவுள் எங்கும் உள்ளலார் .நம்மை கவனித்துக் கொண்டும் உள்ளலார்..

வள்ளலார் பாடல் !

எங்கே கருணை யியற்கையி னுள்ளனஅங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே !

என்றும்..

எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தேஇதுஅது எனஉரைப் பரிதாய்த்

தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்

பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்புத்தமு தருத்திஎன் உளத்தே

அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்தஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

எங்குமாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.நம் சிரநடு சிற்றம்பலத்திலே.உள் ஒளியாக அமர்ந்து இயங்கி இயக்கிக் கொண்டு இருப்பவர் தான் அருட்பெருஞ்ஜோதி!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு