செவ்வாய், 5 ஜூன், 2018

பூத விந்துவால் மரணம் வருகின்றது !

பூத விந்துவால் மரணம் வருகின்றது!

சோற்றாசை யோடு காமச் சேற்றாசைப் படுவோரை.துணிந்து கொல்ல கூற்று (எமன்) ஆசைப்படும் என்கிறார் வள்ளலார்.

நாம் உண்ணும் பஞ்ச பூத உணவினால் தான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் விந்து உற்பத்தி யாகிறது.

விந்துவை அதிகமாக பயன் படுத்தினால் சீக்கிரம் மரணம் வந்துவிடும்.

விந்துவை அதிகமாக பயன் படுத்தினாலும் .குறைவாக பயன் படுத்தினாலும் மரணம் என்பது நிச்சயம்..

விந்துவை அடக்க.காமத்தை கட்டுபடுத்த.. தியானம்.தவம்.யோகம்.போன்றவற்றை செய்வதற்கு.மக்களை விட்டு விலகி சென்று. மலைகளிலும்.காடுகளிலும் .குகைகளிலும் சென்று சிலபேர் தவம் செய்வார்கள்.அப்படி செய்வதால் ஆயுளை நீட்டிக்கலாம்.உயிரை நிறுத்தலாம்.சமாதி நிலை அடையலாம் இறுதியில் மரணம் என்பது நிச்சயம்.

ஆன்மாவிற்கு அருள் என்பது பூரணமாக கிடைக்காமல்.மீண்டும் இறந்து.எதாவது ஒரு பிறப்பு ஆன்மா எடுத்தே  ஆகவேண்டும்.இதுதான் இயற்கையின் நியதி.

வள்ளலார் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம் !

மனிதப் பிறவி எடுத்தால் உணவு என்பது அவசியம் வேண்டும்.உணவு உண்பதால் தான் சுக்கிலம்.சுரோனிதம்  என்னும் விந்து உற்பத்தியாகின்றது.
விந்துவின் வீரியத்தால் தான் ஆண் பெண் உடல் உறவு கொள்கிறோம்..உறவு கொள்வதால் அந்த சுக்கில சுரோனித்ததின் சேர்க்கையால் ஆன்மா வந்து தங்கி தனக்கான உயிர்.உடம்பு உண்டாக்கிக் கொள்கிறது.

விந்து சக்தியின் அணு சேர்க்கையால்  குழந்தை உண்டாகின்றது..அதனால் ஆணுக்கும்.பெண்ணுக்கும் பிராணவாய்வு அதிகம் செலவாகி பிராணவாய்வு குறைந்து. உடம்பு பலவீனமாகி வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு இறுதியில் பிராணன் என்னும் உயிர் சக்தி நின்று மரணம் வந்து விடுகின்றது.

எனவே ஆண் பெண் கருஉண்டாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.மற்ற காலங்களில் இல்லறத்தார்க்கு உடல் உறவு வேண்டாம் என்கிறார் ..

இல்லறத்தில் இருப்பவர்கள் 15 நாளைக்கு ஒருதரம் உடல் உறவு கொள்ள வேண்டும் அப்படி கடைபிடித்தால் நீண்ட காலம் நோய் இல்லாமல். மரணம் இல்லாமல் வாழலாம்.அப்படி இருந்தாலும் இறுதியில் மரணம் வந்தே தீரும் என்கிறார்.

சுத்த சன்மார்க்கம் என்ன சொல்கிறது என்றால்.

ஆண் பெண் சேர்க்கை கூடாது.ஆணும் பெண்ணும் அலியும் உருவங்களில் வேறு வேறாக இருந்தாலும் அனைவரின் சிரநடுவில் உள் இருந்து இயங்கும் இயக்கும் ஆன்மா என்பது ஒரேத் தன்மையான ஓளியாக உடையது.

ஆன்மாக்கள் எல்லாம் பெண் தன்மை உடையது.எனவே ஆன்மாவும் ஆன்மாவும் உடல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். எல்லோரும் பெண் தன்மை உள்ளதால் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வது போல் தான் அதன் இன்பம் இருக்கும்.

பெண் குணம் உள்ள ஆன்மா ஆண் குணம் உள்ளவரைத்தான்  உறவு கொள்ள வேண்டும்..

ஆண் குணம் உள்ளவர் யார் என்றால் .***அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே**".எனவே ஆன்மாக்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

உலகியலில் உள்ள உருவங்களான ஆண் பெண் உடல் உறவு கொண்டால் சுக்கிலமான விந்து சுரக்கும். அதனால் கிடைக்கும் இன்பம் சிற்றின்பம்.சிற்றின்பத்தால் தான் மரணம் என்னும் இறப்பும் பிறப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் உடல் உறவு கொண்டால் அருள் சுரக்கும். அந்த இன்பம் என்றும் அழியாத பேரின்பம் என்பதாகும்.அந்த இன்பத்தால் பஞ்ச பூத ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து.மரணம் என்னும் இறப்பும் வராது.மீண்டும் பிறப்பும் உண்டாகாமல்.என்றும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழலாம் என்கின்றார் வள்ளலார்..

நான் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.அவரும் இடைவிடாது அன்பு கொண்டு என்னிடம் உடல் உறவு கொண்டு அருளை  வாரி வாரி வழங்கி என்னைத் தன்மயமாக்கிக் கொண்டார்..

அதைத்தான் ***கடவுள் நிலை அறிந்து அம்மயமாக்கிக் கொள்ள வேண்டும்*** என்கிறார் வள்ளலார்...

அதற்கு ஜீவன்கள் மீது ஈரமும்.இறைவன் மீது அன்பும் வேண்டும்..அதாவது சத்விசாரம்.பரோபகாரம் இரண்டும் வேண்டும்..

வள்ளலாரே பாடல் !

ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி

காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி

ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்

ஆரமு துண்டென்னோ டாடேடி பந்துஅருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பந்து !

என்கிறார்...

மேலும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை திருமணம் செய்து இரண்டு உருவமும்  கலக்கும் போது. அருள் சுரந்து.  பஞ்ச பூத்த்தால் ஆன  ஊன  உடம்பு  கற்பூரம் போல் கரைந்து அருள் மணம் வீசியது என்கிறார்.

உலகில் உள்ள மணம் போல் மறைவது அல்ல கண்டீர்..என்றும் மறையாத அருள் மணம் என்கின்றார்.

வள்ளலார் பாடல் !

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்

இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே

பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே

நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழிநான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே !.

என்னும் பாடலில்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நான் கண்டேன் அவரை புணர்ந்தேன்.நான் அதுவாகவே ஆனேன் என்கின்றார்.

சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றுபவர்கள் இறவனிடம்  இடைவிடாது அன்பு செலுத்தி காதல் கொண்டால் மட்டுமே...இறைவன் நம்மை காதலித்து திருமணம் செய்து கொண்டு். உடல் உறவு கொண்டு அருள் என்னும் அமுத்தை வாரி வழங்கி .மரணத்தை வெல்லும் இன்பத்தை வழங்குவார்...

மேலும் காதலைப் பற்றி வள்ளலார் பதிவு செய்கிறார்..!

காதல்
கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீகண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்தபிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்வரத்தினால் நான்பெற்ற மகளே.!

எப்படி எல்லாம் இறைவனைக் காதலித்தேன் என்பதையும்..இனி என்னால் தாங்க முடியாது. உன்னைத்தவிர வேறு எதையும் நான் கனவில் கூட நினைத்ததில்லை.. நீ என்னை.்கலந்து கொள்ளவில்லை என்றால் தப்பாமல் உயிரையும் விட்டு விடுவேன்.உன்மேல் பழியைப் போட்டுவிடுவேன் என்றெல்லாம்.பல பாடல்களின் வாயிலாக இறைவனிடம் மன்றாடி.காதல் கொண்டதை. உறவு  கொண்டதை வெளிப்படுத்துகின்றார்

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உடன் பிறப்புக்களே சும்மா வராது இறைவனுடைய காதல் .

வள்ளலார் போல் ரொம்ப கஷ்டப்பட்டு இறைவனிடம் தொடர்பு கொள்ள வேண்டும்...இறைவன் நம்மிடம் தொடர்பு கொள்ளும் அளவிற்கு .உண்மை.
நேர்மை.ஒழுக்கம்.அன்பு.தயவு.கருணையோடு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.

அப்படி கடைபிடித்தால் மட்டுமே..இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம் நம்மைத் தேடிவரும்.

விரிக்கில் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு